Just In
- 1 hr ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 1 hr ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 1 hr ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 6 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சீனா இதை எதிர்பார்த்திருக்காது... பல நூறு கோடி வர்த்தகத்தை முறித்த இந்திய நிறுவனம்... எது தெரியுமா?
சீனா எதிர்பார்த்திராத ஓர் நடவடிக்கையை இந்திய நிறுவனம் ஒன்று தற்போது கையிலெடுத்துள்ளது. அதுகுறித்த தகவலை தொடர்ச்சியாக காணலாம்.
சீனாவிற்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கை நாட்டில் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. முன்னதாக, இந்திய மக்கள் 'பாய்காட் சீன' என்ற இணைய வழி போரை சமூக வலைதள பக்கத்தின் வாயிலாக தொடங்கி வைத்தனர். இதைத்தொடர்ந்து, இந்திய நிறுவனங்கள் சிலவும் செயலில் இறங்கத் தொடங்கின.
அந்தவகையில், டாடா நிறுவனம், சீன நிறுவனமான செரி உடன் மேற்கொள்ளவிருந்த வர்த்தக இணைவிற்கான பேச்சுவார்த்தையை தள்ளி வைத்தது.
இதேபோன்று, மஹாராஷ்டிரா மாநில அரசும், அம்மாநிலத்தில் சீன நிறுவனங்களால் செய்யப்பட இருந்த முதலீட்டிற்கு முட்டுக் கட்டைப் போட்டது.
இதனால், பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு அம்மாநிலத்தின் கையைவிட்டு நழுவும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனினும் சீனாவிற்கு எதிரான தனது எதிர்ப்பை தெரிவிக்கும் பொருட்டு உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு இந்த அதிரடி முடிவை வெளியிட்டது.
இதேபோன்று, இந்திய நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகள் சிலவும் சீனாவிற்கு எதிராக உறவு முறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவின் மற்றுமொரு ஜாம்பவான் நிறுவனமான ஹீரோ சைக்கிள்ஸ், சீனாவுடன் செய்யப்பட இருந்த பல நூறாயிரம் கோடி ரூபாய் வர்த்தகத்தை ரத்து செய்ய இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, இந்த முதலீட்டை வேறு நாட்டில் செய்வதற்கான முயற்சியிலும் அந்நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. இந்த ஒட்டுமொத்த எதிர்ப்பிற்குமே கடந்த சில நாட்களுக்கு முன்பு சீன நாட்டு வீரர்கள் அத்துமீறி இந்தியாவிற்குள் நுழைந்து இந்திய வீரர்கள் மீது தாக்குதலை நிகழ்த்தியதே முக்கிய காரணமாக உள்ளது.
எனவேதான், மத்திய அரசு அண்மையில் சீன செல்போன் செயலிகளுக்கு தடை விதித்தது. இதைத்தொடர்ந்து, அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உதிரி பாகங்களுக்கும் தடை வழங்கியது.
இவ்வாறு, ஒட்டுமொத்த இந்தியாவுமே சீனாவிற்கு எதிரான நிலையைக் கையாண்டு வரும் சூழலிலேயே ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் ரூ. 900 கோடி வர்த்தகத்தை கைமாற்றும் முயற்சியில் களமிறங்கியிருக்கின்றது.
இதுகுறித்த தகவலை ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் தலைவரான பங்கத் முஞ்ஜல் உறுதிச் செய்துள்ளார். மேலும், இதனை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தளமும் வெளியிட்டுள்ளது.
தற்போது உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரசின் இக்கட்டான சூழ்நிலையால் அனைத்து நிறுவனங்களுக்கும் பேரிழப்பைச் சந்தித்து வருகின்றன.
இதில், ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனமும் அடங்கும். இருப்பினும், ரூ. 900 கோடி வர்த்தகத்தின்மூலம் கிடைக்க இருந்த அனைத்து வருமானத்தையும் நாட்டுக்காகவும், நாட்டு மக்களின் உணர்விற்காகவும் இழக்க ஹீரோ தயாராக உள்ளது. எனவே, ஹீரோ நிறுவனத்தின் இந்த முடிவிற்கு மக்கள் மத்தியில் பரவலாக பாராட்டுக் கிடைத்த வண்ணம் இருக்கின்றது.
ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் விரைவில் லூதியானவில் உள்ள தனன்சு கிராமத்தில் மிகப்பெரிய சைக்கிள் உற்பத்தி மையத்தை தொடங்க இருக்கின்றது. இதில் சீனாவிற்கு டஃப் கொடுக்கின்ற வகையில் ஹீரோ அதன் சைக்கிள்களை தயாரிக்க இருப்பதாக கூறியிருக்கின்றது.
இது சீனாவுடன் இந்தியா போட்டியிடுவதற்கு உதவியாக இருக்கும் எனவும் அது நம்பிக்கைத் தெரிவித்துள்ளது. இதற்காக ரூ. 400 கோடி மதிப்பில் 100 ஏக்கர் நிலத்தை ஹீரோ சைக்கிள்ஸ் வாங்கியிருக்கின்றது. இங்குதான் மிகப்பெரிய சைக்கிள் வால்லீ உருவாக்கப்பட இருக்கின்றது.
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!