Just In
- 58 min ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 1 hr ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 2 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 2 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- Movies Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- News புதுக்கோட்டையிலிருந்து ஷர்மிளா.. அதென்ன வித்தியாசமான "வாசனை"? குழம்பி நின்ற சென்னை சூளைமேடு போலீஸ்
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
பைக் டாக்சி புக் செய்த இளைஞருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி! என்ன தெரிஞ்சா நீங்களும் அசந்துருவீங்க!
ஆட்டோ மற்றும் கார் வாடகை வாகனங்களுக்கு இணையாக பிரபலமடைந்து வரும் பைக் டாக்சி சேவையை புக் செய்த இளைஞருக்கு இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தும் விதமாக ஓர் சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. இதுகுறித்த தகவலை தொடர்ச்சியாக காணலாம்.
அரசு போக்குவரத்து வாகனங்களைக் காட்டிலும் வாடகை வாகனங்களுக்கே இந்தியாவில் அதிக வரவேற்பு நிலவி வருகின்றது. இதற்கு நாட்டின் அனைத்து முக்கிய சாலைகளிலும் சுற்றித் திரிந்துக் கொண்டிருக்கும் ஆட்டோ மற்றும் கால் டாக்சிகளின் எண்ணிக்கையே சான்று.
அரசு போக்குவரத்து வாகனங்களுடன் வாடகை வாகனங்களை ஒப்பிடுகையில் இவை பல மடங்கு சிறப்பானதாக இருக்கின்றன. குறிப்பாக, இவை குறிப்பிட்ட நேரத்தில் சேர வேண்டிய இடத்தில் வாடிக்கையாளர்களை இறக்குவிடுவது மட்டுமில்லாமல் கசக்கி, பிழிந்து எடுக்காமல் மிகவும் ஃப்ரெஷ்ஷாக பயணம் மேற்கொள்ளவும் வழி வகுக்கின்றன.
இதுபோன்ற காரணங்களினாலயே இந்தியாவில் வாடகை வாகனங்கள் சற்று கூடுதல் கட்டணத்தைக் கொண்டிருந்தாலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த சேவையின் பரிணாம வளர்ச்சியாக தற்போது பைக்குகளும் டாக்சிகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இவை கால் டாக்சி மற்றும் ஆட்டோக்களைக் காட்டிலும் மிகக் குறைந்த கட்டணத்தை வசூலிப்பதன் காரணத்தினால் இளைஞர்கள் மற்றும் பணிக்கு செல்வோர்கள் மத்தியில் அதிகமாக பிரபலமடையத் தொடங்கியிருக்கின்றது.
தற்போது பைக் டாச்சி சேவையில் ரேபிடோ எனும் நிறுவனம் நாட்டின் ஒரு சில இடங்களில் கொடிக் கட்டி பறக்கத் தொடங்கியிருக்கின்றது.
ஆனால், தமிழகம் போன்ற ஒரு சில மாநிலங்களில் மட்டும் பைக் டாக்சிகளுக்கு தடை-விதிக்கப்பட்ட நிலையே இருக்கின்றது. இதற்கு பைக் டாக்சிகள், அரசின் ஒரு சில வழிகாட்டுதல்களுடன் போகாததே முக்கிய காரணமாக இருக்கின்றது.
சரி இதைவிடுங்கள் நாம் விஷயத்திற்குள் செல்லலாம். தற்போது-பைக் டாக்சி சேவை பயன்பாட்டில் இருக்கும் மாநிலங்களில் மத்திய பிரதேசம் மாநிலமும் ஒன்று.
மாநிலத்தின் தலைநகரான போபாலில் பலர்-இந்த சேவையை தினந்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், பைக் டாக்சி சேவையை அழைத்த ஓர் நபருக்கு ஆச்சரியம் அளிக்கும் விதமாக, அதி திறன் வாய்ந்த ஹோண்டா சிபிஆர் 650ஆர் பைக் பிக்-அப் செய்ய வந்துள்ளது. பொதுவாக பைக் டாக்சி சேவையில் பட்ஜெட் வாகனங்களே பயன்படுத்தப்படும்.
ஆனால், சற்று வித்தியாசமாக இளைஞர் ஒருவர் உயர்திறன் கொண்ட ஹோண்டா சிபிஆர் 650ஆர் பைக்கை பயன்படுத்தியுள்ளார். இதைக் கண்டதும் பைக் டாக்சியைப் புக் செய்த இளைஞர் ஒரு நிமிடம் உறைந்தேவிட்டார். மேலும், இந்த பைக் தனக்காகதான் வந்திருக்கின்றது என்பதைக்கூட நம்ப முடியாத அளவிற்கு ஆச்சரியப்பட்டார்.
ஹோண்டா சிபிஆர் 650ஆர் பைக்கின் உரிமையாளார் "மெஜிஷியன் வ்ளாக்ஸ்" எனும் யுடியூப் சேனலை நடத்தி வருகின்றார். இதில் வீடியோவை-பதிவிட வேண்டும் என்பதற்காகவே அவர் இந்த பைக்கை டாக்சியாக மாற்றி இளைஞருக்கு உதவியிருக்கின்றார்.
இதற்கு முன்பாக இதுபோன்ற சம்பவங்கள் பல-இந்தியாவில் அரங்கேறி இருக்கின்றன. ஆனால், வெளிநாடுகளில் ஊபர் மற்றும் ஓலா கால் டாக்சியை புக் செய்தவர்களுக்கு ஃபெர்ராரி, லம்போர்கினி, பென்ட்லீ போன்ற லக்சூரி கார்கள் பிக்-அப் செய்ய பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவையும் யுடியூப்பிற்காக மேற்கொள்ளப்பட்ட வித்தியாசமான நடவடிக்கை ஆகும்.
இதைப் போன்றே, தற்போது இந்தியாவிலும் காஸ்ட்லீ வாகனங்களை கால் டாக்சி சேவையில் பயன்படுத்தி, யுடியூபில் வியூவ்ஸ்களைக் குவித்து வருகின்றனர் இளைஞர்கள்.
தற்போது நாம் பார்த்த இந்த சம்பவம் சமீபத்தில் நடைபெற்றது அல்ல. இது லாக்டவுண் அறிவிப்பிற்கு முன்பாக அரங்கேறிய நிகழ்வின் காட்சியாகும். ஆனால், இதனை சிறிது நாட்களுக்கு முன்புதான் யுடியூபர் வெளியிட்டார். இதற்கான விளக்கத்தையும் அவர் வீடியோவின் ஆரம்பத்தில் வழங்கியிருக்கின்றார்.
இந்த சவாரி பயணத்தின்மூலம் புதுவிதமான அனுபவத்தை பெற்றிருப்பதாக பைக் டாக்சியை பயன்படுத்திய இளைஞர் தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்ற சூப்பர் பைக்குகளில் அவர் பயணிப்பது இதுவே முதல் முறை என்றும் கூறினார். இதன் காரணத்தினாலயே பைக் ஏறும்போது சற்றே அவர் தடுமாறினார்.
அதுமட்டுமின்றி, சாலையில் சென்ற மற்ற வாகனங்களைக் காட்டிலும் பைக் டாக்சி சற்று அதிவேகத்தில் சீறிப் பாய்ந்ததன் காரணத்தினால், அவர் லேசான அச்ச உணர்வைப் பெற்றார். இருப்பினும், அதை எஞ்ஜாய் செய்ததாதகவே சவாரியின் முடிவில் யுடியூபர் அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.
வீடியோவில் காணப்படும் பைக் மிகவும் சக்தி வாய்ந்த மாடல் ஆகும். இதில், ஹோண்டா நிறுவனம் 648-சிசி, இரட்டை சிலிண்டர், திரவ குளிரூட்டப்பட்ட, ப்யூவல் இன்ஜெக்சன் எஞ்ஜினைப் பொருத்தியிருக்கின்றது. இது, அதிகபட்சமாக 85.9 பிஹெச்பி மற்றும் 60.1 என்எம் டார்க்கை உருவாக்கும் திறன் கொண்டது. இது 6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இயங்குகின்றது.