இந்தா வந்துட்டான்ல... சேத்தக் நீ இதோட துவம்சம்டா... அட்டகாசமான ஹோண்டா மின்சார ஸ்கூட்டர் இந்தியாவில்!

ஹோண்டா நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டருடைய தரிசனம் இந்தியாவில் கிடைத்துள்ளது. இதுகுறித்து கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தா வந்துட்டான்ல... சேத்தக் நீ இதோட துவம்சம்டா... அட்டகாசமான ஹோண்டா மின்சார ஸ்கூட்டர் இந்தியாவில்...

ஹோண்டா நிறுவனம் எரிபொருளால் இயங்கும் பைக் மற்றும் ஸ்கூட்டர்களை இதுவரை இந்திய இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்கு களமிறக்கி வருகின்றது.

ஆனால், இம்முறை புதிய மின்சார ஸ்கூட்டரை அது இந்தியர்களுக்கு அர்பணிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான திட்டத்தின் அடிப்படையில், ஹோண்டா பிசிஎக்ஸ் என்ற மின்சார ஸ்கூட்டரை ஒரு சில டீலர்களின் வாயிலாக அது அறிமுகம் செய்துள்ளது.

இந்தா வந்துட்டான்ல... சேத்தக் நீ இதோட துவம்சம்டா... அட்டகாசமான ஹோண்டா மின்சார ஸ்கூட்டர் இந்தியாவில்...

குறிப்பாக தனியார் கண்காட்சியின் வாயிலாக இந்த மின்சார ஸ்கூட்டர் தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இவையே விரைவில் இந்தியாவில் பஜாஜ் நிறுவனத்தின் சேத்தக், ஏத்தர் ஆகிய மின்சார ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக களமிறக்கப்பட இருப்பதாக கூறப்படுகின்றது.

இந்தா வந்துட்டான்ல... சேத்தக் நீ இதோட துவம்சம்டா... அட்டகாசமான ஹோண்டா மின்சார ஸ்கூட்டர் இந்தியாவில்...

இந்த மின்சார ஸ்கூட்டரை ஹோண்டா நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ கண்காட்சியில் அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

இந்நிலையிலேயே இந்த மின்சார ஸ்கூட்டர்கள் தற்போது மீண்டும் இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை கீழே காணலாம்.

இந்தா வந்துட்டான்ல... சேத்தக் நீ இதோட துவம்சம்டா... அட்டகாசமான ஹோண்டா மின்சார ஸ்கூட்டர் இந்தியாவில்...

இதனை சாதாரண மின்சார ஸ்கூட்டருடன் ஒப்பிடுகையில், ஆங்காங்கே நீள நிற பேட்ஜ்கள் வழங்கப்பட்டுள்ளது. இது மற்ற எரிபொருள் ஸ்கூட்டரைக் காட்டிலும் தனித்துவமான தோற்றத்தை வழங்க உதவுகின்றது.

இந்தா வந்துட்டான்ல... சேத்தக் நீ இதோட துவம்சம்டா... அட்டகாசமான ஹோண்டா மின்சார ஸ்கூட்டர் இந்தியாவில்...

ஹோண்டா நிறுவனம் இந்த ஸ்கூட்டரின் அறிமுகம்குறித்த விவகாரத்தில் அமைதி காத்து வருகின்றது. ஆகையால், இது எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்பதில் சந்தேகம் நிலவுகின்றது. அதேசமயம், இந்தியாவின் மின்சார வாகனச் சந்தை தற்போது வரையிலும் ஆரம்பநிலையிலேயே இருக்கின்றது.

இந்தா வந்துட்டான்ல... சேத்தக் நீ இதோட துவம்சம்டா... அட்டகாசமான ஹோண்டா மின்சார ஸ்கூட்டர் இந்தியாவில்...

எனவே, இந்தியாவில் மின்வாகனங்களுக்கான கட்டமைப்பு முழுமையடைவதற்காக ஹோண்டா காத்திருக்கின்றதோ என்ற கருத்து எழும்புகின்றது. இருப்பினும், ஏத்தர், ஆம்பியர், ஒக்கினவா மற்றும் ஹீரோ போன்ற நிறுவனங்கள் அவற்றின் மின்சார வாகனங்களை ஏற்கனவே இந்தியாவில் அறிமுகம் செய்துவிட்டன.

கூடிய விரைவில் பிசிஎக்ஸ் மின்சார ஸ்கூட்டர்மூலம் இந்த வரிசையில் ஹோண்டாவும் இணைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தா வந்துட்டான்ல... சேத்தக் நீ இதோட துவம்சம்டா... அட்டகாசமான ஹோண்டா மின்சார ஸ்கூட்டர் இந்தியாவில்...

இந்தியாவில் வெறும் பைக் விற்பனையில் மட்டுமே கவனத்தைச் செலுத்தி வரும் பஜாஜ் நிறுவனம்கூட அதன்சார்பில் சேத்தக் பிராண்டில் மின்சார ஸ்கூட்டரை இந்தியர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. இதுவே, அந்நிறுவனத்தின் முதலும், கடைசியுமான ஸ்கூட்டராக இருக்கலாம் என கூறப்பட்டு வருகின்றது.

இந்தா வந்துட்டான்ல... சேத்தக் நீ இதோட துவம்சம்டா... அட்டகாசமான ஹோண்டா மின்சார ஸ்கூட்டர் இந்தியாவில்...

மேலும், தற்போது இந்தியாவில் மின்வாகனங்களுக்கு மிக குறைவாகவே காட்சியளிக்கின்றது. ஆகையால், ஹோண்டா நிறுவனம், நாட்டின் மற்றுமொரு மிகப்பெரிய நிறுவனத்துடன் இணைந்து மின் வாகனங்களுக்கு தேவையான சார்ஜிங் நிலையம், பேட்டரி பரிமாற்றம் உள்ளிட்ட கட்டமைப்புகளை அதிகப்படுத்துமானால் நிச்சயம் இந்த துறையில் ஹோண்ட புதிய சாதனைப் பெறும் என எதிர்பார்க்கலாம்.

இந்தா வந்துட்டான்ல... சேத்தக் நீ இதோட துவம்சம்டா... அட்டகாசமான ஹோண்டா மின்சார ஸ்கூட்டர் இந்தியாவில்...

காட்சிக்குள்ளாகியிருக்கும் ஹோண்டா பிசிஎக்ஸ் மின்சார ஸ்கூட்டரில் இரு எக்ஸ்சேஞ்ச் செய்யக்கூடிய லித்தியம் அயன்பேட்டரி காணப்படுகின்றது. இதனை தேவைக்கேற்ப, அதாவது சார்ஜ் குறைந்துவிட்டால் பேட்டரி எக்ஸ்சேஞ்ச் நிலையங்களுக்கு சென்று மாற்றிக் கொள்ள முடியும்.

இந்தா வந்துட்டான்ல... சேத்தக் நீ இதோட துவம்சம்டா... அட்டகாசமான ஹோண்டா மின்சார ஸ்கூட்டர் இந்தியாவில்...

இந்த பேட்டரிகள் ஒவ்வொன்றும் 1.03kWh திறன் கொண்டவையாகும். இந்த பேட்டரியை கழட்டி வைத்து தனியாகவும் சார்ஜ் செய்ய முடியும். அதேபோன்று, ஸ்கூட்டரில் வைத்தும் சார்ஜ் செய்ய முடியும். இதில், தனியாக கழட்டி வைத்து சார்ஜ் செய்ய நான்கு மணி நேரங்களும், ஸ்கூட்டரில் வைத்து சார்ஜ் செய்யும்போது ஆறு மணி நேரங்கள் எடுத்துக் கொள்கின்றது.

இந்தா வந்துட்டான்ல... சேத்தக் நீ இதோட துவம்சம்டா... அட்டகாசமான ஹோண்டா மின்சார ஸ்கூட்டர் இந்தியாவில்...

இந்த பேட்டரிகள் ஸ்கூட்டரின் இருக்கைக்கு கீழே நிறுவப்பட்டிருக்கும். இவை, ஸ்கூட்டரின் கிராவிட்டிக்கு ஏற்ப நிறுவப்பட்டிருப்பதால் நல்ல ரேஞ்ச் மற்றும் பெர்ஃபார்மென்ஸை இது வழங்குகின்றது. ஆனால், ரேஞ்ச் பற்றிய முழுமையான தகவல் இதுவரை வெளியாகவில்லை.

இந்தா வந்துட்டான்ல... சேத்தக் நீ இதோட துவம்சம்டா... அட்டகாசமான ஹோண்டா மின்சார ஸ்கூட்டர் இந்தியாவில்...

இந்தி பிசிஎக்ஸ் மாடலில் ஹோண்டா நிறுவனம் வெறும் மின்சார ஸ்கூட்டர் மட்டுமின்றி எரிபொருள் மாடலிலும் விற்பனைச் செய்கின்றது. பிரிமியம் தரத்தில் விற்பனையாகும் இந்த ஸ்கூட்டர் 149 சிசி திறனைக் கொண்டதாகும். இது அதிகபட்சமாக 13.3 பிஎச்பி பவரையும், 13.6 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.

இந்தா வந்துட்டான்ல... சேத்தக் நீ இதோட துவம்சம்டா... அட்டகாசமான ஹோண்டா மின்சார ஸ்கூட்டர் இந்தியாவில்...

இந்த எரிபொருள் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு களமிறங்குமேயானால் தற்போது விற்பனையில் இருக்கும் அப்ரில்லா எஸ்ஆர் 150 மற்றும் வெஸ்பா பிராண்டு ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக அமையும்.

Source: RushLane

More from DriveSpark

Article Published On: Saturday, January 11, 2020, 16:46 [IST]
English summary
Honda Showcases PCX Electric Scooter Via Selectable Dealers In India. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+