Just In
- 6 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 6 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 7 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 11 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
காலத்திற்கு ஏற்றாற்போல் அப்டேட்டாகி கொண்டே இருக்கும் ஹோண்டா!! 2021ல் இருந்து மோட்டார்சைக்கிள்களில் புதிய வசதி
வருகிற 2021ஆம் ஆண்டில் இருந்து ஹோண்டா தயாரிப்புகளில் ஸ்மார்ட்போன் இணைப்பு கட்டாயமாக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.
தற்போதைய மாடர்ன் காலக்கட்டத்தில் வாகனங்களில் தொழிற்நுட்ப அம்சங்கள் மிகவும் அட்வான்ஸாக சென்று கொண்டிருக்கின்றன. ஏனெனில் புதிய புதிய தொழிற்நுட்பங்களை கண்டறிவதிலும் அவற்றை மேம்படுத்துவதிலும் அனைத்து வாகன தயாரிப்பு நிறுவனங்களும் முனைப்பு காட்டி வருகின்றன.
இவ்வாறு கடந்த சில வருடங்களில் வாகனத்தை ஓட்டுனர் உடன் இணைக்கும் இணைப்பு வசதியும் குறிப்பிடத்தக்க அளவில் அப்டேட்டாகியுள்ளது. ஆரம்பத்தில் கார்களில் கொண்டுவரப்பட்ட இந்த வசதி தற்போதைய காலக்கட்டத்தில் கார்களுக்கு இணையாக அதிக எண்ணிக்கையில் மோட்டார்சைக்கிள்களிலும் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறான இணைப்பு வசதிகளை மோட்டார்சைக்கிள்களில் கொண்டுவருவதில் நமக்கு தெரிந்த முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹோண்டாவும் ஒன்றாக உள்ளது. ஆனால் இப்போது உள்ள அனைத்து ஹோண்டா ப்ரீமியம் மோட்டார்சைக்கிள்களிலும் இந்த வசதி வழங்கப்படுவது இல்லை.
ஆனால் அடுத்த 2021ஆம் வருடத்தில் இருந்து தனது அனைத்து விற்பனை மாடல்களிலும் இணைப்பு வசதியை கொண்டுவர ஹோண்டா தீவிரமாக உள்ளது. இதற்காக ஸ்மார்ட்போன் வாய்ஸ் கண்ட்ரோல் ப்ளூடூத் இணைப்பு வசதியை நேர்த்தியாக்குவதில் இந்த ஜப்பானிய இருசக்கர வாகன நிறுவனம் தற்சமயம் ஈடுப்பட்டு வருகிறது.
ஹோண்டாவின் இந்த ரோடு-சிங்க் வசதி ஓட்டுனரை எதாவது ஒரு ப்ளூடூத் சார்ந்த அப்ளிகேஷன் உதவியுடன் மோட்டார்சைக்க்கிளுடன் இணைக்கும். இதன் மூலமாக மொபைல் போனுக்கு வரும் குறுஞ்செய்திகள், அழைப்புகள், இசை உள்ளிட்டவற்றை கண்ட்ரோல் செய்வது மட்டுமின்றி நாவிகேஷனயும் பைக்கில் இருக்கும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மூலமாக பெறலாம்.
வாய்ஸ் கண்ட்ரோல் இவற்றை மிகவும் எளிமையாக கண்ட்ரோல் செய்ய மிகவும் உதவியாக இருக்கும். அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு உடனடியாக பதிலளிக்க முடியாமல் போனால் அதற்காக 5 வார்ப்புரு (டெம்ப்ளேட்) வழங்கப்படவுள்ளது.
முதல்படியாக ஹோண்டா ரோடு-சிங்க் வசதி ஹோண்டாவின் சிபி1000ஆர், ஃபோர்ஸா 750 மற்றும் எக்ஸ்-அட்வென்ச்சர் பைக்குகளில் அடுத்த வருடத்தில் வழங்கப்படவுள்ளது. சர்வதேச சந்தையில் ஃபோர்ஸா 350 மேக்ஸி-ஸ்கூட்டருக்கும் கூடுதல் தேர்வாக வழங்கப்படலாம்.
இந்த வசதியின் மூலமாக தற்சமயம் இருக்கும் இடத்தின் வெப்பநிலையையும் அறியலாம் என தகவல்கள் கூறுகின்றன. இந்த தொழிற்நுட்ப வசதிக்காக இந்த மோட்டார்சைக்கிள்களின் ஹேண்டில்பாரில் பொத்தான் வழங்கப்படவுள்ளது. அதேபோல் ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன் பொருத்தப்பட்ட ஹெல்மெட்டும் கொடுக்கபடவுள்ளது.
-
ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!