வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவையினை வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ள ஜாவா... என்னனு தெரியுமா...?

ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் அதன் தயாரிப்புகளுக்கான முழுமையாக ஏற்றப்பட்ட சாலையோர உதவி சேவையினை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றை இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவையினை வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ள ஜாவா... என்னனு தெரியுமா...?

பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சேவை ஆனது வீட்டில் இருக்கும்போதோ அல்லது பயணத்தின்போதோ தேவைப்படும் உதவிகளை வழங்கும். பயணத்தின் போது என்றால் பைக் பாதி வழியில் நின்றுவிட்டால் பழுதிற்கான தீர்வினை அந்த இடத்திற்கே வந்து நிறுவனத்தின் பணியாளர்கள் வழங்குவர்.

வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவையினை வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ள ஜாவா... என்னனு தெரியுமா...?

பெரிய அளவிலான பழுது என்றால் பைக் சர்வீஸ் மையத்திற்கு கொண்டு செல்லப்படும். இந்த சமயங்களில் தான் வாடிக்கையாளர் வாகன அளவுருவை பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டும். ஏனெனில் அதனை வைத்து தான் வாகனத்திற்கு ஆர்எஸ்ஏ என அழைக்கப்படும் சாலையோர உதவிகளை வழங்கலாமா என்பதை அவர்கள் உறுதி செய்வர்.

வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவையினை வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ள ஜாவா... என்னனு தெரியுமா...?

பழுதான வாகனத்தை கஷ்டப்பட்டு டீலர்ஷிப் அல்லது சர்வீஸ் மையங்களுக்கு கொண்டு சென்றபின் ஆர்எஸ்ஏ உங்களது ஜாவா பைக்கிற்கு பொருந்தவில்லை என்றால் அது மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாக்கிவிடும். ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் சாலையோர உதவி வசதிகளை நாடு முழுவதற்கும் கொண்டுவந்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவையினை வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ள ஜாவா... என்னனு தெரியுமா...?

இந்த கட்டணமில்லா சேவை டீலர்ஷிப்பை சுற்றி அதிகப்பட்சமாக 100கிமீ தூரம் வரையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். இந்த சேவையில் சாலையோர பழுது, எரிபொருள் உதவி மற்றும் தொலைந்த சாவி மீட்டெடுப்பு உள்ளிட்டவை அடங்குகின்றன.

வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவையினை வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ள ஜாவா... என்னனு தெரியுமா...?

பைக்கை முற்றிலுமாக இயக்க முடியாமல் போனால், அவசர செய்தியினை அனுப்பியும் மேற்கூறப்பட்டுள்ள சேவை வசதிகளை பெற்று கொள்ளலாம். இவை தவிர்த்து பயணிகளுக்கு வழங்கபடும் மருத்துவ உதவிகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. ஜாவா ஆர்எஸ்ஏ முதன்முதலாக கடந்த மே மாத இறுதியில் சில குறிப்பிட்ட நகரங்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.

வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவையினை வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ள ஜாவா... என்னனு தெரியுமா...?

ஆர்எஸ்ஏ சேவைகளில் தட்டையான பேட்டரி அல்லது டயரை பொருத்துவது பொதுவாகவே இடம்பெறக்கூடிய ஒன்றாகும். இவற்றுடன் சிறிய அளவிலான பழுதுகளும் சாலையில் வைத்தே சரிப்பார்க்கப்படுகின்றன. இந்த சேவைக்கும் எல்லை உண்டு. அதாவது ஒரு வருடத்தில் எத்தனை சாலையோர உதவியினை வாடிக்கையாளர் பெற்றுள்ளார் என்பது கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.

வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவையினை வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ள ஜாவா... என்னனு தெரியுமா...?

அதேபோல் சேவைக்கான நேரமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தை தாண்டி பைக்கில் ஏற்பட்ட பழுதினை சரிப்பார்க்க நேர்ந்தால், அதற்கு கட்டணம் வசூலிக்கும் வகையில் இந்த சேவையினை வடிவமைத்துள்ளனர். இந்த சேவைக்காக ஜாவா நிறுவனம் 2018ல் சிவப்பு நிற ஆர்எஸ்ஏ வேனை பயன்பாட்டிற்கு கொண்டுவந்தது.

வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவையினை வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ள ஜாவா... என்னனு தெரியுமா...?

இந்த சேவையினை ஆண்டு சந்தா முறையிலும் பெறலாம். இதற்கு கட்டணமாக வருடத்திற்கு ரூ.1,000- 1,300 வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சந்தா தேர்வு வாடிக்கையாளர்களுக்கு வாகனத்தை டீலர்ஷிப்பில் வாங்கும்போதே வழங்கப்படுகிறது. தற்போதைய பைக் உரிமையாளர்கள் பாலிசியைப் பொறுத்து ஏற்கனவே தங்கள் காப்பீட்டுத் தொகையாக ஆர்எஸ்ஏ-வை தேர்ந்தெடுத்திருக்கலாம்.

Most Read Articles
மேலும்... #ஜாவா #jawa motorcycles
English summary
Jawa launches Fully Loaded RSA for Perak, Classic and 42
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X