Just In
- 11 min ago தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- 36 min ago தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- 4 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 5 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
Don't Miss!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- News கர்நாடகா: குமாரசாமி, பிரஜ்வல், டிகே சுரேஷ்.. அதிகாரத்தை கைப்பற்ற முட்டி மோதும் 'கவுடா குடும்பங்கள்'!
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Movies விட்டா பத்திரிகையே வெச்சிடுவார்போல.. ரத்னம் படத்துக்காக ஹரி செஞ்சத பாருங்க.. அவருக்கா இந்த நிலைமை
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'படை வேணும்னா அஞ்சும், நான் மாட்டேன்' - போதை ஆசாமியிடம் சிக்கிய பாம்பு... என்ன நடந்தது தெரியுமா..?
போதையில் செய்வதறியாமல் இளைஞர் ஒருவர் செய்த காரியத்தால் ஊர் மக்கள் பதற்றத்தில் உறைந்தனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஏறத்தாழ 45 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் நீடித்து வருகின்றது. தற்போது மூன்றாவது கட்டமாக அமலில் இருக்கும் தடையுத்தரவு, லேசான தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே, ஒரு சில மாநிலங்கள் லேசான இயக்கத்தைக் காண ஆரம்பித்திருக்கின்றன.
ஆனால், இது முழுமையான இயக்கமல்ல. தற்போதும் மக்கள் வழக்கம்போல் நடமாட தடை விதிக்கப்பட்ட நிலையே காணப்படுகின்றது. அதேசமயம், இந்த லேசான தளர்வின் காரணமாக ஒரு சில துறைகள் மட்டும் அதிக கட்டுப்பாடுடன் இயங்க ஆரம்பித்திருக்கின்றது. குறிப்பாக, அரசுக்கு அதிக லாபத்தை ஈட்டி தரும் மதுபானக் கடைகள் ஒரு சில மாநிலங்களில் விற்பனையைத் தொடங்கியிருக்கின்றது.
கடந்த 40 நாட்களுக்கும் அதிகமாக மதுவின் வாசனைக்கூட நுகர முடியாமல் தவித்து வந்த குடிமகன்கள் இதனால் குஷியாகியுள்ளனர். குறிப்பாக, கர்நாடகா மாநிலத்தில் மது விற்பனைத் தொடங்கிய முதல் நாளிலேயே பல கோடி ரூபாய்க்கு மது விற்பனைச் செய்யப்பட்டிருக்கின்றது.
அதாவது, உச்சபட்ச ஹீரோக்களின் முதல் நாள் வசூலுக்கே டஃப் கொடுக்கின்ற வகையில் முதுபான கடைகள் ஏகபோகமாக கல்லாகட்டத் தொடங்கியிருக்கின்றன.
விரைவில் தமிழகத்திலும் மது விற்பனை ஆரம்பிக்கப்பட இருப்பதாக தமிழக அரசு அறிவித்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.
அதவாது, நாளை (மே7) முதல் சென்னை தவிர மாநிலத்தின் பிற மாவட்டங்களில் மது விற்பனைக்கு அரசு அனுமதியளித்துள்ளது. ஆனால், அண்டை மாநிலமான கர்நாடாகவில் மது விற்பனை ஏற்கனவே கோலாகளமாக தொடங்கிவிட்டது. இதனால் மது பிரியர்கள் வரிசைக் கட்டி பல ஆயிரங்களுக்கு மதுவினை வாங்கி குவிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.
அவ்வாறு, நீண்ட நாட்கள் கழித்திருந்து மதுவினை வாங்கி குடித்த ஒரு இளைஞர், அவர் சென்ற பாதையை தடுத்ததாக கூறி பாம்பு ஒன்று கடித்தே கொன்றுள்ளார்.
கர்நாடகா மாநிலத்தின் கோலார் பாகுதியில்தான் இந்த சம்பவம் அரங்கேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தை அரங்கேற்றிய அந்த நபர், அதே பகுதியில் வசித்து வரும் குமார் என்பது கண்டறியப்பட்டுள்ளது. கூலித் தொழிலாளியான இவருக்கு மூன்று வயதில் குழந்தை உள்ளது.
இந்நிலையில், நேற்று (செவ்வாய்) மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது, அவர் வந்த பாதையில் பாம்பு ஒன்று குறுக்கே வந்ததாகக் கூறப்படுகின்றது.
அப்போது, போதையில் இருந்த அவர், அந்த பாம்பு அவரின் வழியை மறைப்பதாக எண்ணி, அதனை கைகளால் பிடித்தார். அதுமட்டுமின்றி, நீண்ட நேரம் பாம்பை கோவமாக திட்டி தீர்த்திய அவர் திடீரென அதனை கடிக்க ஆரம்பித்தார்.
"என் பாதையை எவ்வாறு நீ தடுப்பாய்" என்று கூறியவாறே அதனை வெறும் பற்களால் கடித்து துப்ப ஆரம்பித்தார்.
போதை ஆசாமியின் இந்த செயல் அப்பகுதி மக்களை ஒரு நிமிடம் உறைய வைக்கின்ற வகையில் இருந்துள்ளது. முன்னதாக பாம்பை எடுத்து கழுத்தில் மாட்டிக்கொண்ட குமார், வெகு நேரமாக அதை திட்டியவாறு இருந்தார். இதைத்தொடர்ந்தே, பாம்பினை கடித்து துப்பியுள்ளார்.
மேலும், பாம்பினை கடிக்கும்போது தனது கோபத்த ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தும் விதமாக அவர் ஓட்டி வந்த ஹீரோ ஹோண்டா ஃபேசன் பிளஸ் பைக்கின் ஆக்சலரேட்டரையும் கூடவே முறுக்கி சத்தத்தை எழுப்பியுள்ளார்.
இச்சம்பவம்குறித்து தகவல் அறிந்த போலீஸார், சுமார் 30 நிமிடங்கள் கால தாமதத்திற்கு பின்னரே சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்துள்ளனர்.
ஆனால், அதற்குள் பாம்பு இறந்துவிட்டதாக கூறப்படுகின்றது. அதேசமயம், குமார் கொன்ற பாம்பு விஷமுடையதா அல்லது விஷமற்றதா என்பது தெரியவில்லை. இருப்பினும், இதையறியாமலே மது போதையில் பாம்பினை கையிலெடுத்து குமார் இவ்வாறு செய்துள்ளார்.
மேலும், "தான் இதுவரை மருத்துவமனை செல்லவில்லை. சம்பவ தினத்தன்று காலையிலும் இதேபோன்று ஒரு பாம்பு என் வேலையை தடுத்தது. மீண்டும், மாலையும் நான் வீடு திரும்பும்போதும் வேறொரு பாம்பு என் பாதையில் குறுக்கிட்டது. எனவேதான் நான் பாம்பை கொன்றேன்" என்றார்.
இளைஞரின் இந்த செயல் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பையும், பெரும் அதிர்வலையையும் ஏற்படுத்தியது. "நீண்ட நாட்களாக மதுக் கடைகள் திறக்காத காரணத்தால் இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் கிராமத்தில் அரங்கேறாமல் இருந்தது. ஆனால், மது விற்பனைத் தொடங்கிய முதல் நாளே இதுபோன்ற அருவறுக்கத்தக்க சம்பவம் நடைபெற்றிருக்கின்றது" என அக்கிராம பெண்கள் வேதனை தெரிவித்தனர்.
முன்பெல்லாம் குடித்துவிட்டு வாகனத்தில் செல்லும்போது, அவர்களுக்கும், சக வாகன ஓட்டிகளுக்குமே ஆபத்தை விளைவிக்கும் வகையில் போதை ஆசாமிகள் இருந்து வந்தனர். ஆனால், இம்முறை முற்றிலும் வித்தியாசமாக விலங்குகள்மீது ஆதிக்கத்தைக் காட்ட தொடங்கியிருக்கின்றனர்.
எனவே, மது அருந்துவிட்டு வாகனத்தை இயக்குபவர்களால் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் ஆபத்தான சூழலே ஏற்பட்டுள்ளது.
-
இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணி கொண்டு போலாம்!
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!