ஒரு விநாடிதான்... ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் மயிரிழையில் தப்பிய இளைஞர்..! வீடியோ..!

ஓட்டுநரின் சாமார்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வைரலாகி வரும் வீடியோ மற்றும் தகவலைத் தொடர்ந்து காணலாம்.

ஒரு விநாடிதான் கேப்... ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் தப்பிய இளைஞர்... இந்த வீடியோவ பாக்க தனி தைரியம் வேணும்!!

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் நூற்றுக் கணக்கான விபத்து சம்பவங்கள் அரங்கேறுகின்றன. அதில், பெரும்பாலான விபத்துகள் இருசக்கர வாகனங்களை மையமாகக் கொண்டே நடைபெறுகின்றன. எனவேதான், இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர் மட்டுமன்றி பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் தலைக் கவசம் அணிய வேண்டும் என இந்திய மோட்டார் வாகன சட்டம் கூறுகின்றது.

ஒரு விநாடிதான் கேப்... ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் தப்பிய இளைஞர்... இந்த வீடியோவ பாக்க தனி தைரியம் வேணும்!!

இருப்பினும், பெரும்பாலான இருசக்கர வாகன பயனர்கள் இதைக் கடைப்பிடிப்பதே இல்லை. இதுதவிர, பல்வேறு விதிமீறல் செயல்களிலும் அவர்கள் ஈடுபடுகின்றனர். இதுவே, இருசக்கர வாகன ஓட்டிகள் அதிகளவில் விபத்தில் சிக்குவதற்கு முக்கிய காரணமாக அமைகின்றது.

ஒரு விநாடிதான் கேப்... ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் தப்பிய இளைஞர்... இந்த வீடியோவ பாக்க தனி தைரியம் வேணும்!!

பெரும்பாலான இருசக்கர வாகன ஓட்டிகள் விதிக்கப்பட்ட வேகத்தைக் காட்டிலும் உச்சபட்ச வேகத்தில் செல்கின்றனர். இதுவும் அவர்கள் மிக எளிதில் விபத்தைச் சந்திக்க காரணமாக இருக்கின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், கேரள மாநிலத்தில் ஓர் சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. இதுகுறித்து வெளியாகியிருக்கும் வீடியோ பற்றிய தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

ஒரு விநாடிதான் கேப்... ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் தப்பிய இளைஞர்... இந்த வீடியோவ பாக்க தனி தைரியம் வேணும்!!

வீடியோவில், இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் நொடிப் பொழுதில் பெரும் விபத்தில் இருந்து தப்பிப்பதுப் போன்ற பரபரப்பான காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. அவர், தப்பிப்பதற்கு பேருந்தை ஓட்டி வந்த டிரைவரின் அசாத்தியமான திறனே காரணம் ஆகும். ஆம், பேருந்து ஓட்டுநர் சாமார்த்தியமாக செயல்பட்டதினாலயே மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

ஒரு விநாடிதான் கேப்... ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் தப்பிய இளைஞர்... இந்த வீடியோவ பாக்க தனி தைரியம் வேணும்!!

இதுகுறித்த பதற வைக்கும் காட்சிகளே தற்போது வெளியாகியிருக்கின்றன. இது விபத்து நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட காட்சிகளாகும். இந்த வீடியோவே இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஒரு விநாடிதான் கேப்... ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் தப்பிய இளைஞர்... இந்த வீடியோவ பாக்க தனி தைரியம் வேணும்!!

இருசக்கர வாகன ஓட்டி திடீரென சருக்கி விழுவதை வீடியோ சுட்டிக் காட்டுகின்றது. சாலை மழை நீரால் ஈரமாக இருந்ததே இதற்கு காரணம் ஆகும். இந்த நேரத்தில் இருசக்கர வாகன ஓட்டி தனது வேகத்தைக் குறைக்கும் விதமாக பிரேக்கை பிடித்துள்ளார். ஆனால், அது அவரை எதிர்பாராத விதமாக சாலையில் சருக்கி விழ வைத்துவிட்டது.

ஒரு விநாடிதான் கேப்... ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் தப்பிய இளைஞர்... இந்த வீடியோவ பாக்க தனி தைரியம் வேணும்!!

அந்த நேரத்தில் பைக்கை பின் தொடர்ந்தவாறு தனியார் பேருந்து ஒன்றும் வந்துக் கொண்டிருந்தது. ஆனால், அதன் டிரைவர் இருசக்கர வாகனம் சரிந்து விழுவதைச் சுதாரித்துக் கொண்டு உடனடியாக பிரேக்கைப் பிடித்தார். மேலும், பேருந்தின் திசையையும் மாற்றினார். இதனாலயே பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

ஒரு விநாடிதான் கேப்... ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் தப்பிய இளைஞர்... இந்த வீடியோவ பாக்க தனி தைரியம் வேணும்!!

சாலை ஈரமாக இருந்த காரணத்தால் பேருந்துக் கட்டுப்பாடில்லாமல் வழுக்கியவாறு சென்று, பைக்கின்மீது லேசாக மோதுவதை நம்மால் காண முடிகின்றது. ஆனால், டிரைவரின் முயற்சி வீண் போகவில்லை. ஆம், இதனால் இருசக்கர வாகன ஓட்டிக்கு சிறு கீறல்கூட ஏற்படவில்லை. இந்த விபத்துச் சம்பவத்தால் அப்பகுதியில் சில நிமிடங்கள் பதற்றமான சூழல் காணப்பட்டது.

ஒரு விநாடிதான் கேப்... ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் தப்பிய இளைஞர்... இந்த வீடியோவ பாக்க தனி தைரியம் வேணும்!!

இந்த சம்பவம் நடைபெறுவதற்கு சில நொடிகள் முன்னாடிகள் வரை அதே சாலையில் பல வாகனங்கள் கடந்துச் செல்வதை நம்மால் வீடியோவின் வாயிலாக காண முடிகின்றது. அவையனைத்தும் எந்தவொரு சிக்கலையும் சந்திக்காமலே சென்றன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக வேகத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக இருசக்கர வாகன ஓட்டி செய்த செயல் அவருக்கே நொடி பொழுதில் ஆபத்தை ஏற்படுத்திவிட்டது.

ஒரு விநாடிதான் கேப்... ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் தப்பிய இளைஞர்... இந்த வீடியோவ பாக்க தனி தைரியம் வேணும்!!

இருப்பினும், அதிர்ஷ்டவசமாக அவர் தப்பினார். மேலும், யாருக்கும் எந்த அசம்பாவிதமும் அப்போது நேரவில்லை. மேலும், உடனடியாக விரைந்து வந்த பாதசாரிகள் கீழே பைக்குடன் சரிந்து விழுந்த இளைஞரை தூக்கி சாலையோரத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம், ஈரமான சாலையில் அதிவேகமாக செல்லக் கூடாது என்பதை விளக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஒரு விநாடிதான் கேப்... ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் தப்பிய இளைஞர்... இந்த வீடியோவ பாக்க தனி தைரியம் வேணும்!!

ஈரமான சாலைகளில் போதுமான பிடிமானம் கிடைப்பதில்லை. இதனால், வாகனத்தின் இழுவை மற்றும் நிலைத் தன்மை முழுமையாக குறைந்துவிடும். இதனால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்துவிடும். இந்த சூழ்நிலையே பெரும் விபத்து ஏற்பட காரணமாக அமைகின்றது. இதனால்தான் மழை பெய்யும்போது மெதுவாக செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, October 19, 2020, 14:38 [IST]
English summary
Kerala Bus Driver Saves Motorcycle Rider Who Skidded On A Wet Road. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+