Just In
- just now 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- 1 hr ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 4 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 5 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
Don't Miss!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பர்க்மேனுக்கு போட்டி.. மலிவு விலை மேக்ஸி ஸ்கூட்டரை களமிறக்கும் அப்ரில்லா! புள்ளிங்கோக்களை கவர அதிரடி
அப்ரில்லா நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்திய மலிவு விலை மேக்ஸி ரகத்திலான ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அது எப்போது என்பதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.
2020 ஆட்டோ எக்ஸ்போ கிரேட்டர் நொய்டாவில் அமோகமாக நடைபெற்றது. இங்கு உலகளாவிய வாகன உற்பத்தி நிறுவனங்கள் அவற்றின் புத்தம் புதிய தயாரிப்புகளை காட்சிப்படுத்தின. அதில் பெரும்பாலும் புதிதாக அப்கிரேட் செய்யப்பட்ட மற்றும் எதிர்காலத்தில் களமிறக்கப்பட உள்ளே வாகனங்களே அதிகமாக படையெடுத்திருந்தன.
அந்தவகையில், ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் தற்போது இந்திய சந்தையில் விற்பனைக்கு உறுதி செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அப்ரில்லா நிறுவனமும் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியிருந்த அதன் குறைந்த விலை எஸ்எக்ஸ்ஆர் 125 மற்றும் எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
அநேகரின் கண்களை தன் வசம் ஈர்த்த இந்த ஸ்கூட்டர்கள் நடப்பாண்டின் இறுதிக்குள் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என்ற தகவலை அது உறுதி செய்திருக்கின்றது. இதில், எஸ்எக்ஸ்ஆர் 125 ஸ்கூட்டர் தற்போது விற்பனையில் இருக்கும் மற்ற மேக்ஸி ரக ஸ்கூட்டர்களைக் காட்டிலும் மலிவு விலைக் கொண்டதாக இருக்கும் என்ற தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றது.
இந்த ஸ்கூட்டர் மலிவு விலையைக் கொண்டதாக இருந்தாலும், அப்ரில்லா நிறுவனத்திற்கே உரித்தான டிசைன் தாத்பரியங்களுடன் விற்பனைக்குக் கிடைக்கும் என்றும் கூறப்படுகின்றது. குறிப்பாக இந்த ஸ்கூட்டர் ஸ்போர்ட் மேக்ஸி வடிவமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கின்றது.
ஆகையால், இது விற்பனைக்கு வரும் பட்சத்தில் அநேகளவிலான புள்ளிங்கோக்களைக் கவரும் என தெரிகின்றது. இதன் ஸ்டைல் மற்றும் திறன் அவர்களைக் கவர்கின்ற வகையிலேயே இருக்கின்றது.
ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டரில் காணப்படும் அனைத்து மின் விளக்குகளும் எல்இடி தரத்தில் இருக்கின்றது. இத்துடன், இந்த ஸ்கூட்டரில் டிஸ்க் பிரேக் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதன் சிறிய மாடலாக காட்சிப்படுத்தப்பட்ட எஸ்எக்ஸ்ஆர் 125 ஸ்கூட்டரில் டிஸ்க் பிரேக் மற்றும் ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப் நீக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்கூட்டரின் விலையை மலிவானதாக மாற்றும் நோக்கில் அப்ரில்லா நிறுவனம் இத்தகைய நடவடிக்கையை கையாண்டுள்ளது. இதேபோன்று, ஒரு சில சிறப்பு அம்சங்கள் இந்த ஸ்கூட்டரில் தவறலாம் என கூறப்படுகின்றது. இவையனைத்தையும் விலை குறைப்பு நடவடிக்கையாக அப்ரில்லா மேற்கொண்டுள்ளது.
அதேசமயம், ஏற்கனவே விற்பனையில் இருக்கும் எஸ்ஆர் 125 மாடலில் காணப்படுகின்ற ஒரு சில அம்சங்களை இந்த எஸ்எக்ஸ்ஆர்125 மாடலில் காணமுடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக இவ்விரு ஸ்கூட்டர்களிலும் ஒரே மாதிரியான எஞ்ஜின்தான் காணப்படுகின்றது. அது, 124 சிசி திறன் கொண்ட ப்யூவல் இன்ஜெக்டட் எஞ்ஜின் ஆகும். இது அதிகபட்சமாக 9.4 பிஎச்பி மற்றும் 8.2 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் சக்தியைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்கூட்டரில் சிறப்பான சஸ்பென்ஷனை வெளிப்படுத்தும் வகையில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் முன்பக்கத்ததிலும், பின் பக்கத்தில் சிங்கிள் ஷாக் அப்சார்பரும் நிறுவப்பட்டுள்ளது.
இத்துடன், இரு முனைகளிலும் 12 இன்ச் கொண்ட வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், அப்ரில்லாவின் பெரிய அளவு மாடலான எஸ்எக்ஸ்ஆர் 160 வருகின்ற செப்டம்பர் மாத்திலும், இதையடுத்து எஸ்எக்ஸ்ஆர் 125 நடப்பாண்டின் இறுதியிலும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளன.
இவ்விரு ஸ்கூட்டர்களும் இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் பர்க்மேன் 125 மற்றும் ஹோண்டா ஆக்டிவா 125 ஆகிய ஸ்கூட்டர்களுக்கு கடுமையான போட்டியை வழங்கவிருக்கின்றன.
Source: bikewale
-
7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
-
ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!