Just In
- 1 hr ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 2 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 2 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 3 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
Don't Miss!
- News பீகாரில் தொகுதி உடன்பாடு ஓவர்.. பாஜகவுக்கு சவால் கொடுக்க பகாக் பிளான் உடன் இறங்கும் இந்தியா கூட்டணி!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேரும் பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு பேட்டிங் இறங்கிட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான RR
- Movies Baakiyalakshmi: சரியாயிடுச்சு.. மீண்டும் இணைந்த செழியன் -ஜெனி.. சாதித்த பாக்கியா!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இந்தியாவில் சந்தையை விரிவுப்படுத்தும் ஒகினாவா... டீலர்ஷிப்களின் எண்ணிக்கை 500ஆக உயருகிறது...
எலக்ட்ரிக் இரு-சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஒகினாவா கூடுதலாக 150 புதிய டீலர்ஷிப் மையங்களை ஏற்படுத்தி இந்தியாவில் தனது சந்தையை விரிப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் வேகமாக உலகம் முழுவதும் பரவியதை அடுத்து கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு கொண்டுவரப்பட்டது என்று தான் சொல்ல வேண்டும். இந்த இரு மாத ஊரடங்கினால் பெரும்பான்மையான நாடுகள் கடும் பொருளாதார சரிவை சந்திந்துள்ளன.
ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளை மூடியிருந்ததால் ஆட்டோமொபைல் துறையும் பெரிய அளவில் பாதித்துள்ளது. இந்த நிலையில் கடந்த மே மாதத்தில் இருந்து ஊரடங்கில் சற்று தளர்வுகள் படிப்படியாக கொண்டுவரப்பட்டு கொண்டிருப்பதால் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றன.
மேலும் அடைந்த நஷ்டத்தை ஈடுக்கட்ட தங்களது முழு திறமையும் வெளிக்காட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த வகையில் இந்தியாவில் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்து வரும் ஒகினாவா தனது டீலர்ஷிப்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆயத்தமாகி வருகிறது.
இந்நிறுவனம் தற்சமயம் நாடு முழுவதும் 350 டீலர்ஷிப்களுடன் செயல்பட்டு வருகிறது. இதனுடன் கூடுதலாக 150 டீலர்ஷிப் மையங்கள் கொண்டுவரப்பட்டு மொத்த எண்ணிக்கை 500ஆக உயர்த்தப்படவுள்ளது. இதுமட்டுமின்றி இந்த முதன்மை டீலர்களுடன் சப்-டீலர்களையும் கொண்டுவர இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இவற்றுடன் டீலர்ஷிப் விளிம்பை 8 சதவீதத்தில் இருந்து 11 சதவீதமாகவும் உயர்த்தவுள்ளதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி தவித்துவரும் கூட்டணி நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கும் என ஒகினாவா கணித்து வைத்துள்ளது.
இந்நிறுவனம் முதன்மையாக மஹாராஷ்டிரா, பிகார் மற்றும் அசாம் போன்ற வட மற்றும் கிழக்கிந்திய மாநிலங்களில் தான் கூடுதல் டீலர்ஷிப்களை கொண்டுவரவுள்ளது. தற்சமயம் இந்நிறுவனத்தின் டீலர்ஷிப்கள் இந்திய அரசாங்கத்தின் தகுந்த வழிமுறைகளோடு சமூக இடைவெளியை பின்பற்றி செயல்பட்டு வருகின்றன.
இந்திய சந்தையில் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதை கடந்த 2020 பொருளாதார ஆண்டின் புள்ளி விபரங்களின் மூலம் பார்த்தோம். இதனால் டீலர்ஷிப்களை அதிகரிக்கும் ஒகினாவாவின் முயற்சியில் உண்மையில் சிறந்த முடிவே.
-
ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
-
ஒரு புறாவுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா!! இலவச பஸ் டிக்கெட் இருந்தும் பெரிய தொகையை செலவழித்த பாட்டி - பேத்தி!
-
இந்தியாவுக்கு எதாவது பாதிப்பா? ஒரு சின்ன மிஸ்டேக் எங்க கொண்டுவந்து நிறுத்தி இருக்கு!!