Just In
- 19 min ago வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- 3 hrs ago ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- 4 hrs ago ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- 6 hrs ago 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
Don't Miss!
- News நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்றால் மோடி பேசவே கூடாது.. சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம்!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸ் மிஸ் பண்ணசடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Movies இப்படி செய்வீங்கணு நினைக்கல..கல்யாணமே பண்ணியிருக்க மாட்டேனே..மேடையில் ஓபனா பேசிய ரெடின் கிங்ஸ்லி!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் இறங்குகிறது ஓலா... தமிழகத்திற்கு ஜாக்பாட் அடிக்குமா?
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் இறங்குதற்காக புதிய தொழிற்சாலையை அமைக்கும் முயற்சிகளில் ஓலா டாக்சி நிறுவனம் இறங்கி உள்ளதாக பரபரப்பு செய்தி வெளியாகி இருக்கிறது.
இந்திய பெருநகரங்களின் போக்குவரத்து சேவையில் ஓலா மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஸ்மார்ட்ஃபோன் அப்ளிகேஷன் மூலமாக எளிதாகவும், மிக சரியான கட்டணத்தில் விரைவான டாக்சி சேவையை வழங்கி வருவதால், வலுவான வாடிக்கையாளர் வட்டத்தை பெற்றுள்ளது. இந்த நிலையில், தனது வர்த்தகத்தை விரிவாக்கும் திட்டத்தில் ஓலா இறங்கி இருக்கிறது.
இதன்படி, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் களமிறங்குவதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கி இருக்கிறது. இதற்காக, புதிய தொழிற்சாலையை அமைப்பதற்காக பல்வேறு மாநில அரசுகளுடன் ஓலா டாக்சி நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தளத்தின் செய்தி தெரிவிக்கிறது.
ஆண்டுக்கு 2 மில்லியன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் திறனுடன் இந்த புதிய ஆலையை அமைப்பதற்கு ஓலா திட்டமிட்டுள்ளது. இதற்காக, 100 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாகவும், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் சிறப்பு சலுகைகளை பெறுவது தொடர்பாக நான்கு மாநில அரசுகளுடன் ஓலா பேச்சுவார்த்தை நடத்தி வருவதும் தெரிய வந்துள்ளது.
எனினும், இந்த பட்டியலில் தமிழகமும் உள்ளதா என்பது குறித்த தகவல்கள் இல்லை. தமிழகத்தில் வாகன உற்பத்திக்கு சாதகமான நிலை உள்ளதால், பட்டியலில் இடம்பெற்றிருக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
குஜராத் மாநிலம் ஹோண்டா இருசக்கர வாகன ஆலையில் ஆண்டுக்கு 1.2 மில்லியன் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் பெற்றுள்ளது. இதுதான் தற்போதைக்கு இந்தியாவில் உள்ள அதிக உற்பத்தி திறன் கொண்ட இருசக்கர வாகன ஆலையாக உள்ளது. ஆனால், ஓலா இதனை விட அதிக உற்பத்தி திறன் கொண்ட ஆலையை அமைக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு நெதர்லாந்து நாட்டை சேர்ந்த எடர்கோ என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனத்தை ஓலா கையகப்படுத்தியது. அந்த நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியை துவங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக கருதப்படுகிறது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. எனவே, தனது பிராண்டிற்கு இருக்கும் பிரபலத்தை வைத்து எளிதாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் வலுவான வர்த்தகத்தை பெற முடியும் என்று ஓலா கருதுகிறது. மாதச் சந்தா, தனது டாக்சி நிறுவனம் மூலமாக வாடகை பயன்பாடு உள்ளிட்ட திட்டங்கள் மூலமாகவும் ஓலா தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வர்த்தகம் செய்யும் வாய்ப்புகள் உள்ளன.