Just In
- 1 hr ago எல்லாரும் ஃப்ளோரிடாவுக்கு கிளம்ப போறாங்க.. ரோல்ஸ் ராய்ஸ் காரை இலவசமா தர போறாங்களாம்!! ஒரே ஒரு நிபந்தனைதான்!
- 7 hrs ago ஜாக்பாட்... 4,000 எலெக்ட்ரிக் கார்களுக்கு ஆர்டர் கொடுத்த பிரபல நிறுவனம்... வரிசையா களத்துல எறக்க போறாங்க...
- 7 hrs ago இத்தாலி நாட்டை சேர்ந்த டூ-வீலர் உற்பத்தி நிறுவனத்தின் பெரும் பங்கை வாங்கிய கேடிஎம்-இன் தாய் நிறுவனம்..
- 8 hrs ago ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல... கிட்டத்தட்ட 20 ஆயிரம் கார்கள்!! மாருதி சுஸுகிக்கு எல்லா மாசமும் ஜாக்பாட் அடிக்குது!
Don't Miss!
- Finance சிங்கிளாக வாழும் பெண்களே.. இதை பாலோ பண்ணுங்க..!!
- News பிரியாணியால் வம்பில் மாட்டிய பிரேமலதா.. திடீரென பறந்த புகார்.. விஜயகாந்த் நினைவிடத்தில் என்ன நடந்தது
- Lifestyle Today Rasi Palan 19 March 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனையில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது...
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Movies Cook with Comali 5 promo: இது புது கூட்டணி.. கலக்கல் காம்பினேஷனில் குக் வித் கோமாளி 5.. விரைவில்!
- Technology புது SIM கார்டு ரூல்ஸ்.. இனி 7 நாட்களுக்கு ஒன்னுமே செய்ய முடியாது.. கஸ்டமர்கள் படப்போகும் பாடு.. எப்போது அமல்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
ஜனாதிபதி பாதுகாப்பு படையில் இணைந்த மஹிந்திரா தயாரிப்பு..! எந்த நாட்டு ஜனாதிபதி என்பதுதான் ஆச்சரியமே!
மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்பு ஒன்று ஜனாதிபதியின் பாதுகாப்பு படையில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எந்த நாட்டு ஜனாதிபதி, மஹிந்திராவின் எந்த தயாரிப்பு பாதுகாப்பு படையில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதை இந்த பதிவில் விரிவாக காணலாம்.
இந்தியாவின் மிக முக்கியமான வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக மஹிந்திரா நிறுவனம் இருக்கின்றது. இந்த நிறுவனத்தின் ஓர் அங்கமாக பீஜோ நிறுவனம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது. பிரான்ஸ் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம், நான்கு மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பை மையமாகக் கொண்டு இயங்கி வருகின்றது.
குறிப்பாக முச்சக்கர வாகனத்தை தயாரிப்பதில் இந்நிறுவனம் பெயர்போன ஒன்றாக இருக்கிறது. எனவேதான் பீஜோ தயாரிப்பில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் பிரபல மெட்ரோபாலிஸ் முச்சர வாகனத்தை பிரான்ஸ் நாடு, அதன் குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு பணியில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.
மெட்ரோபாலிஸ் ஓர் மூன்று சக்கரங்களைக் கொண்ட ஸ்கூட்டராகும். இந்த வாகனத்தையே ஜனாதிபதியின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதற்காக குறிப்பிட்ட எண்ணிக்கையில் பிரான்ஸ் அரசு வாங்கி குவித்துள்ளது. மெட்ரோபாலிஸ் ஸ்கூட்டரை பீஜோ நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பே பிரான்சில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.
இம்மாதிரியான மூன்று சக்கர வாகன அமைப்பில் பீஜோ அறிமுகப்படுத்துவது இது இரண்டாவது மாடலாகும். முன்னதாக இ-லூதிக்ஸ் எனும் மாடலை அது களமிறக்கியிருந்தது. இது, ஓர் மின்சார ஸ்கூட்டராகும். இதனையும் பிரான்ஸ் அரசு குடியரசு தலைவரின் பாதுகாப்பு பணியில் கடந்த 2019ம் ஆண்டில் இருந்து பயன்படுத்தி வருகின்றது.
இந்த நிலையிலேயே புதிய தயாரிப்பான மெட்ரோபாலிஸ் ஸ்கூட்டரையும் பிரான்ஸ் அரசு தனது பாதுகாப்பு வாகனங்களின் அணிவகுப்பில் சேர்ப்பதற்காக களமிறக்கியிருக்கின்றது. பீஜோ பிரான்ஸை மையமாகக் கொண்டு இயங்கினாலும், அது தற்போது இந்திய தயாரிப்பாக மாறியிருக்கின்றது. உரிமையாளராக மஹிந்திரா குழுமம் மாறியதை அடுத்து இந்த அந்தஸ்தை அது பெற்றிருக்கின்றது. எனவேதான் இந்த நிகழ்வை இந்தியா தற்போது கொண்டாடி வருகின்றது.
இதுகுறித்து மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது டுவிட்டர் பக்கத்தின் வாயிலாக, "நாங்கள் நல்ல நிறுவனத்தின் வாயிலாக மிக சுமூகமாக நகர தொடங்கியுள்ளோம். "பீஜோ மோட்டார்சைக்கிள்" ஓர் @MahindraRise நிறுவனத்தின் தயாரிப்பு" என அவர் பெருமிதம் கொண்டார்.
மஹிந்திரா குழுமத்தின் சர்வதேச செயல்பாட்டு நிர்வாகியாக பிரகாஷ் வகங்கர் செயல்பட்டு வருகின்றார். இவரும், தனது டுவிட்டர் பக்கத்தில் ஆனந்த் மஹிந்திராவின் கூற்றையே உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், பீஜோ மெட்ரோபாலிஸ் 2020 குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு பணிக்காக எலிசி அரண்மனை முன்பு நிறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
பிரான்ஸ் அரசு மெட்ரோபாலிஸ் முச்சக்கர வாகனத்தை பாதுகாப்பு பணிக்காக களமிறக்கியதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக, அதன் முச்சக்கர வாகன அமைப்பே மிக முக்கியமான காரணமாக இருக்கின்றது. இந்த வாகனத்தை சென்டர் அல்லது பக்கவாட்டு ஸ்டாண்ட்டுகளைப் பயன்படுத்தாமலே தன்னிச்சையாக நிறுத்த முடியும். மேலும், ஓட்டுநர் திடீரென எழுந்து நின்றாலும் இந்த ஸ்கூட்டர் எந்தவொரு சிக்கலைச் சந்திக்காமல் தொடர்ச்சியாக முன்னேறும்.
எனவே பாதுகாப்பு பணியின் போது திடீர் மோதல்களை போலீஸாரால் எளிதில் கையாள முடியும். குறிப்பாக, மோட்ரோபாலிஸ் நகர்ந்துக் கொண்டிருக்கும்போதே போலீஸாரால் எழுந்து நின்று எதிரிகளைக் கையாள முடியும். எனவேதான் இந்த சிறப்பு திறன் வாய்ந்த மெட்ரோபாலிஸ் ஸ்கூட்டரை பிரான்ஸ் அரசு அதன் பாதுகாப்பு பணியில் களமிறக்கியிருக்கின்றது.
பாதுகாப்பு படை வீரர்கள் இந்த மோட்டார்சைக்கிளை எப்படி பயன்படுத்துகின்றனர் என்ற வீடியோவைக் காண இங்கே க்ளிக் செய்யவும். இதுபோன்ற சிறப்பு வசதிகளை இந்த முச்சக்கர வாகனம் கொண்டிருப்பதன் காரணத்தினாலயே பிரான்ஸ் அரசு மெட்ரோபாலிஸ் ஸ்கூட்டரைக் களமிறக்கியிருக்கின்றது. தற்போது வெளியாகியிருக்கும் வீடியோவானது குவாங்டாங் காவல்துறை வீரர்கள் பயற்சி எடுக்கும்போது எடுக்கப்பட்டதாகும்.
-
இனி தடுக்கி விழுந்தா கூட இவங்க ஷோரும்லதான் விழுகணும்! மாருதி, டாடாக்கு போட்டியா கடை திறக்க போறது அவங்களா!
-
அடிபட்டு வரவங்ககிட்ட இனி லட்சகணக்குல பில் போட முடியாது! தனியார் மருத்துவமனைகளுக்கு ஆப்பு வச்ச மோடி அரசு!
-
அமெரிக்காவில் ஒட்டுமொத்த இந்தியாவைவும் பெருமைப்பட வைத்த இளைஞர்!! நடுரோட்டில் இதை செய்யாமல் இருந்து இருக்கலாம்!