Just In
- just now 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 1 hr ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 2 hrs ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- 8 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
Don't Miss!
- News லோக்சபா தேர்தல் முடிந்தாலும்.. தமிழகத்தில் சில இடங்களில் பறக்கும் படை சோதனை தொடருமாம்! ஏன் தெரியுமா
- Sports மினி சென்னையில் ஆடினோம்.. 2 நாளில் இதை விட அதிகமாக இருக்கும்.. மனம் திறந்து சொன்ன கே எல் ராகுல்
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
புதுமணம் முடித்த கையோடு பைக்கில் புறப்பட்ட இளம் ஜோடி.. நடு வழியில் காத்திருந்து ஷாக் கொடுத்த போலீஸ்!
பைக்கில் வந்த புதுமண தம்பதிகளை ஆச்சரியப்படுத்தும் வகையில் பஞ்சாப் மாநில போலீஸார் நடந்துக் கொண்டுள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் நிலவி வரும் ஊரடங்கு உத்தரவு மக்களின் இயல்பு வாழ்க்கைய கடுமையாக மாற்றியமைத்துள்ளது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால், முடக்க நிலை காரணமாக மக்கள் இதுவரை சந்தித்திராத அசௌகரியங்களை தற்போது அனுபவித்து வருகின்றனர்.
சமூக தொற்று ஏற்படக் கூடாது என்பதற்காக இந்த ஊரடங்கு உத்தரவு வருகின்ற 3ம் தேதி வரை கட்டாயம் நிலுவையில் இருக்கும் என மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
ஆனால், வைரஸ் பரவும் வேகத்தை வைத்து பார்க்கையில் அரசின் இந்த நிலை எப்போது வேண்டுமானால் மாற்றப்படலாம் என தெரிகின்றது.
அதாவது, 2.0 வெர்ஷனில் இருக்கும் ஊரடங்கு உத்தரவு, அடுத்த வெர்ஷனுக்கு அப்கிரேட் செய்யப்படலாம் என்ற அச்சம் நிலவுகின்றது.
வைரஸ் தொற்றால் மக்கள் அவதியடையக் கூடாது என்ற நோக்கத்திலேயே இத்தகைய கடுமையான யுக்தியை அரசுகள் கையாண்டு வருகின்றன.
இதனால், மக்களின் நடைமுறை வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக, சமூக இடைவெளியை வலியுறுத்தி அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் திருமணங்கள் போன்ற சுப காரியங்கள் திட்டமிட்டபடி நடைபெறாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. எனவே, ஒரு சிலர் ஆன்லைன் மூலம் திருமணம் செய்துகொள்கின்றனர். பலர் எளிய முறையில் கோயில்களில் திருமணம் செய்து கொள்கின்றனர்.
மக்களின் இந்த நிலைக்கு அதிகப்படியானோர் ஒரே இடத்தில் கூடக்கூடாது என அரசு தடை விதித்ததே காரணம். எனவே, குடும்பத்தில் மிக முக்கியமான சிலரை மட்டுமே வைத்து எளிய திருமணங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், கோவிலில் மிக எளியமுறையில் திருமணம் முடித்த இளம் ஜோடிகள், ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது புல்லட் பைக்கில் வீடு திரும்பியுள்ளனர்.
அப்போது அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், புதுமண தம்பதியர்களை மடக்கி விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் எளிய முறையில் திருமணம் வீடு திரும்புவதாக தெரிவித்ததன் அடிப்படையில், அவர்கள் முன்னேறிச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், மிக எளிய முறையில் திருமணம் செய்து கொண்டதன் காரணத்தால், புதுமண ஜோடிகளுக்கு போலீசார் வாழ்த்து தெரிவித்து அனுப்பி வைத்தனர்.
பொதுவாக, தற்போது ஊரடங்கு உத்தரவு நீடித்து வருவதால் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வருபவர்களுக்கு போலீஸர் சிறப்பு ட்ரீட்மெண்ட் (தண்டனை) வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், எளிய முறையில் திருமணம் முடித்து ராயல் என்பீல்டு கிளாசிக் பைக்கில் வந்த ஜோடிக்களுக்கு போலீஸார் வாழ்த்து தெரிவித்திருப்பது, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விநோத நிகழ்வு பஞ்சாப் மாநிலம், நகா (Naka) என்னும் பகுதியில் அரங்கேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிகவும் சிம்பிளாக செய்யப்பட்ட திருமணத்தை காட்சிப்பதிவு செய்த ஃபோட்டோகிராஃபர்கள், இளம் தம்பதியனர்கள் பைக்கில் பயணிதவாறு வீடு திரும்பியதையும் காட்சிப்பதிவு செய்தனர்.
அவ்வாறு காட்சிப் பதிவு செய்தபோதே போலீஸார் வாழ்த்துத் தெரிவித்த சம்பவத்தையும் அவர்கள் பதிவு செய்து, தற்போது வெளியிட்டுள்ளனர். போலீஸார் வாழ்த்துத் தெரிவித்ததுடன் இளம் தம்பதியினருக்கு மலர் கொடுப்பதும் அந்த வீடியோவில் இடம்பெற்றிருக்கின்றது.
இவர்களின் திருமணத்தில் ஒட்டுமொத்தமாகவே 10-க்கும் குறைவானவர்களே பங்கேற்றதாக கூறப்படுகின்றது. அதில், உறவினர்கள் 5 மட்டுமே ஆவர். இதுமாதிரியான எளிய திருமணங்கள்தான் சமீபகாலமாக (கொரோனாவிற்கு பின்) இந்தியாவில் நடைபெற்று வருகின்றது.
ஆனால், பஞ்சாப் மாநிலத்தில் இதுபோன்று மிக எளிமையான திருமணம் நடைபெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பொது வட இந்தியர்களின் திருமணம் ஆட்டம், பாட்டத்துடன் மிகக் கொண்டமாக இருப்பது வழக்கம். இவர்களைக் காட்டிலும் பஞ்சாப் மாநிலத்தவர்களின் திருமணம் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும்.
இதற்கு மாறாக இளைஞர்களின் திருமணம் மிக எளிமையாக நடைபெற்றிருக்கின்றது. இது தற்போது வீணாக வெளியேச் சுற்றி வரும் இளைஞர்களுக்கு ஓர் சிறந்த முன்னுதாரணமாக இருக்கின்றது.
இந்த சம்பவத்தில் நாம் மிகவும் கவனிக்க வேண்டிய தகவல் சில உள்ளன. அதில், முக்கியமான ஒன்று திருமணம் அதிகாரிகளின் முழு அனுமதியுடன் நடைபெற்றிருப்பது.
கொரோனா வைரஸ் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி வருவதால் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றது. ஆனால், ஒரு சிலர் ஜாலியாக வெளியே வந்த வண்ணம் இருக்கின்றனர். இதற்காக கடுமையான தண்டனைகளையும் அவர்கள் அனுபவித்து வருகின்றனர்.
-
ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி
-
சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!