Just In
- 1 hr ago அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- 6 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 6 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 7 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
Don't Miss!
- News பேராசான் பெரியார் மண்ணில் இருந்து.. இன்று பிரசாரத்தை தொடங்கும் முன்னரே சரவெடி கொளுத்திய கமல்ஹாசன்!
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
ஒரகடம் ஆலையில் உற்பத்திப் பணிகளை துவங்கியது ராயல் என்ஃபீல்டு
கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டு இருந்த ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஓரகடம் ஆலையில் உற்பத்திப் பணிகள் மீண்டும் துவங்கப்பட்டுள்ளன. அதேபோன்று, குறிப்பிட்ட பகுதிகளில் டீலர்கள் திறக்கப்பட்டு வர்த்தக நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கொரோனா பிரச்னை இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்ததால், கடந்த மார்ச் 24ந் தேதி முதல் தேசிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், கார், பைக் உள்ளிட்ட வாகன உற்பத்தி நிறுவனங்களும், அதன் டீலர்களும் மூடப்பட்டுள்ளன. வரும் 17ந் தேதி வரை தேசிய ஊரடங்கு அமலில் இருக்கும் என்று மத்திய அரசு அறிவித்தது.
அதன்படி, சென்னை அருகே ஓரகடத்தில் செயல்பட்டு வரும் ஆலையில் உற்பத்திப் பணிகளை நேற்று முதல் துவங்கி இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த ஆலையில் படிப்படியாக உற்பத்தி எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓரகடம் ஆலையின் சுற்று வட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பணியாளர்களை பணிக்கு திரும்ப அழைத்துள்ளது ராயல் என்ஃபீல்டு. மேலும், ஊரடங்கு முழுவதுமாக நீக்கப்பட்டவுடன் அனைத்து பணியாளர்களுடன் உற்பத்திப் பணிகளை சீரடைய செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஆலையில் சமூக இடைவெளி விதிமுறைகளையும், தூய்மை பணிகளையும் கடைபிடித்து உற்பத்திப் பணிகளை துவங்கி இருக்கிறது ராயல் என்ஃபீல்டு. அடுத்த கட்டமாக, சென்னை திருவொற்றியூர் மற்றும் வல்லம் வடகல் பகுதிகளில் உள்ள ஆலைகளிலும் உற்பத்திப் பணிகளை துவங்க திட்டமிட்டுள்ளது.
மேலும், சென்னை, குர்கான் நகரங்களில் இயங்கி வரும் கார்ப்பரேட் அலுவலகங்கள் மற்றும் இங்கிலாந்தில் உள்ள தொழில்நுட்ப மையம் ஆகியவை தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். இந்த அலுவலகப் பணியாளர்கள் தொடர்ந்து வீட்டிலிருந்து பணிபுரிவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனனர்.
இதனிடையே, கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் செயல்படும் 120 டீலர்கள் திறக்கப்பட்டு விற்பனை பணிகள் துவங்கப்பட்டு இருப்பதாக ராயல் என்ஃபீல்டு தெரிவித்துள்ளது. இந்த மாத மத்தியில் 300 ஷோரூம்கள் வரை செயல்பட துவங்கும். கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளுடன் திறக்கப்பட்ட ஷோரூம்களில் வர்த்தகப் பணிகள் நடைபெறும்.