சுஷாந்த் இழப்பின் அதிர்வலையே இன்னும் ஓயல... அதுக்குள்ள இதுவேறயா! பிரியா விடைபெறும் செக்வே பிடி...
இந்த உலகம் மிக புகழ்வாய்ந்த வாகனம் ஒன்றை இழக்க இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

மின்சார இருசக்கர வாகன உலகில் புரட்சியை ஏற்படுத்திய ஓர் வாகனம்தான் செல்ஃப் பேலன்ஸிங் டூ-வீலர். இது எந்தவொரு சூழ்நிலையிலும் குப்புற சாயாவோ, விழவோ செய்யாது. இந்த திறனின் காரணமாக உலக நாடுகள் பலவற்றில் இது புகழ்வாய்ந்த மாடலாக இருக்கின்றது.

இதனை தயாரித்து வந்த செக்வே இன்க் நிறுவனம், இதன் உற்பத்தியை கைவிட இருப்பதாக அறிவித்துள்ளது. அதாவது, தனி நபர் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த புகழ்வாய்ந்த வாகனத்தின் விற்பனையைக் கைவிட இருப்பதாக செக்வே அறிவித்துள்ளது.

செக்வே நிறுவனம், அதனை செக்வே பிடி எனும் பெயரில் களமிறக்கியது. இந்த இருசக்கர வாகனம் காவல்துறையில் அதிக பங்களிப்பை வழங்கி வருகின்றது. அவர்களின் ரோந்து மற்றும் கண்கானிப்ப பணிகளில் கார் மற்றும் மோட்டார்சைக்கிள்களைக் காட்டிலும் இதுவே அதிக பயனை அளித்து வருகின்றது.

இதுமட்டுமின்றி, சுற்றுலாப் பயணிகள் டூரிஸ்ட் ஸ்பாட்டை சுற்றிப் பார்க்கவும் இந்த வாகனம் அதிக பயனை அளித்து வருகின்றது. இத்தகைய சிறப்புமிக்க வாகனத்தைதான் செக்வே நிறுவனம் உற்பத்தி மற்றும் விற்பனையில் இருந்து நீக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த வாகனத்தை கடந்த இரு வருடங்களுக்கு முன்புதான் செக்வே நிறுவனம் உலக நாடுகளில் அறிமுகம் செய்தது. இதில், ஒரு நபர் மட்டுமே பயணிக்க முடியும். இதுதான் அந்த வாகனத்தின் மிகப்பெரிய குறையே. எனவேதான், காவல்துறை மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் மட்டுமே இதன் பங்கு தலையோங்கிக் காணப்படுகின்றது.

அதேசமயம், தனி நபர் வாகன சந்தையில் இடம்பெறுவதில் செக்வே பிடி தவறுவிட்டது. இதன் விளைவு மிக குறைந்த விற்பனையை அது பெற்றது. இதுதான் தற்போது இதன் உற்பத்தியை செக்வே இன்க் நிறுத்த காரணம்.
இதைத்தொடர்ந்து, புதிய தொழில் தொடங்கும் விதமாக செக்வே நிறுவனம் ஷேர்ட் ஸ்கூட்டர் (shared scooter business) சேவையில் களமிறங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

செக்வே நிறுவனம், செக்வே எஸ்இ-3 பேட்ரோல்லர் மற்றும் செக்வே ரோபோட்டிக்ஸ் மொபிலிட்டி ஆகிய மின் வாகனங்களின் உற்பத்தியை நிறுத்த இருப்பதால் 21 பேரின் பணியிடம் பறிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும், தற்போதைய கொரோனாவின் இக்கட்டான சூழ்நிலையில் அவர்களின் நிலை கூடுதல் கேள்விக் குறியாக மாற இருக்கின்றது.

உண்மையில் இந்த செக்வே மிக முக்கியமான பிரம்மிப்பை ஆழ்த்தும் ஓர் தயாரிப்பு ஆகும். ஏனென்றால் இதன் தோற்றம் மட்டுமின்றி இயக்கமும் நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்தும் வகையில் இருக்கின்றது. இந்த மின்சார வாகனம் வலது மற்றும் இடது என இருபக்கங்களில் சக்கரங்களைக் கொண்டிருக்கின்றது. நடுவில் மேடைப் போன்ற அமைப்பைக் கொண்டிருக்கும்.

அதில், பயனர்கள் நின்று பயணிகள் வேண்டும். முன்னோக்கி சாய்வது மற்றும் ஹேண்டில் கொடுக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாட்டு அம்சங்களைக் கொண்டு செக்வே வாகனத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியும். திருப்புவதற்கும் அதே ஹேண்டில் பார்களில்தான் வசதி வழங்கப்பட்டிருக்கும். இதற்கான பேட்டரி மற்றும் மின் மோட்டார் பயணிகள் நிற்கும் மேடைப் போன்ற அமைப்பிற்கு கீழே வழங்கப்பட்டிருக்கும்.

இதுபோன்ற அமைப்பைக் கொண்டிருப்பதன் காரணத்தினாலயே சில கேமிரா மேன்கள் இந்த வாகனத்தை தங்களின் ஷூட்டிங் பணியின்போது பயன்படுத்துகின்றனர். அவ்வாறு, செக்வே வாகனத்தை பயன்படுத்திய ஓர் கேமிரா மேன் விளையாட்டு வீரர் உசேன் போல்ட் மீது மோதும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் செம்ம ஃபேமஸ்.

இதுமட்டுமா, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் இந்த வாகனத்தில் செல்லும்போது தவறி விழும் காட்சிகளும் இணையத்தில் செம்ம வைரல்.
இந்த செல்ஃப் பேலன்ஸ் வாகனம் விழாமல் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், சில நேரங்களில் விபத்தின் காரணமாக கவிழ்ந்து விடுகின்றது. இந்த அச்சத்தின் காரணமாகவும் இதன் விற்பனைக் குறைந்ததாகக் கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








