ராயல் என்பீல்டு புல்லட் பைக்கில் கிளம்பிய பெண் சிங்கங்கள்.. எதற்காக தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

கொரோனா வைரஸ் நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் வேலையில் நமது அண்டை மாநிலமான கேரள அரசு, தனித்துவமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை கீழே காணலாம்.

ராயல் என்பீல்டு புல்லட் பைக்கில் கிளம்பிய பெண் சிங்கங்கள்.. எதற்காக தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

உலகம் முழுவதிலும் பரவியுள்ள உயிர்கொல்லி கொரோனா வைரஸ் இந்தியாவையும் தனது கோரப்பிடியில் ஆட்டிபடைத்துக் கொண்டிருக்கின்றது. நாள்தோறும் நூற்றுக் கணக்கோரை தொற்றி வரும் இந்த வைரஸ், சிலரை தனது ஆறாத பசிக்கு இரையாக்கியும் வருகின்றது. இதற்கு தினந்தோறும் வைரஸ் தொற்றால் இறப்போரின் எண்ணிக்கையே சான்று

ராயல் என்பீல்டு புல்லட் பைக்கில் கிளம்பிய பெண் சிங்கங்கள்.. எதற்காக தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்த வைரசின் அபாயகரமான பிடியில் தென் மாநிலங்களில் ஒன்றான கேரளாவே ஆரம்பத்தில் கடுமையாக பாதித்திருந்தது. இதனால், கடவுளின் தேசம் என்றழைக்கப்பட்ட அம்மாநிலத்தை இறைவன் கை விட்டுவிட்டார் என்று கூறி அண்டை மாநிலங்கள் பரிதாபப்பட்டன. ஆனால், இன்றோ நிலைமை அப்படியே தலைகீழாக மாறியுள்ளது.

ராயல் என்பீல்டு புல்லட் பைக்கில் கிளம்பிய பெண் சிங்கங்கள்.. எதற்காக தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

கொரோனாவிற்கு எதிரான போரில் முழு வீச்சுடன் களமிறங்கிய அம்மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை மக்களுக்கு விதித்தது. அதுமட்டுமின்றி வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த துரிதமான நடவடிக்கைகளையும் அது மேற்கொண்டது.

ராயல் என்பீல்டு புல்லட் பைக்கில் கிளம்பிய பெண் சிங்கங்கள்.. எதற்காக தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இதன் விளைவாக ஆரம்பத்தில் வைரஸ் தொற்றில் முதல்நிலை வகித்து வந்த கேரளா, தற்போது கடைநிலை இடத்திற்கு நகர்ந்துள்ளது.

அதாவது வைரஸ் தொற்று ஏற்படுவதைத் தடுக்கும் மாநிலங்களில் இம்மாநிலமே தற்போது முன்னணியில் இருக்கின்றது.

ராயல் என்பீல்டு புல்லட் பைக்கில் கிளம்பிய பெண் சிங்கங்கள்.. எதற்காக தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

கேரளாவின் இந்த நிலைக்கு அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளே முக்கிய காரணம் என கூறப்படுகின்றது. அதேசமயம், மக்களின் ஒத்துழைப்பில்லாமல் கேரளாவால் இந்த நிலையை எட்டியிருக்க முடியாது என்பதையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

ராயல் என்பீல்டு புல்லட் பைக்கில் கிளம்பிய பெண் சிங்கங்கள்.. எதற்காக தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

தற்போதைய சூழ்நிலையில் கேரளாவில் ஓராளவிற்கு நிலைமைக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும், நாடு முழுவதும் வைரசின் தீவிரம் அதிகரித்த நிலையிலேயே உள்ளது.

எனவே, தற்போது குறைந்த எண்ணிக்கையை அப்படியே தக்க வைத்து, படிப்படியாக வைரஸ் தொற்றை முற்றிலுமாக ஒழித்துகட்டுவதற்கான முயற்சிகள் கேரளாவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ராயல் என்பீல்டு புல்லட் பைக்கில் கிளம்பிய பெண் சிங்கங்கள்.. எதற்காக தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இதற்காக மாநிலத்தின் முக்கிய நகரங்களில் சிறப்பு போலீஸார் படை உருவாக்கப்பட்டு தீவிர கண்கானிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்தவகையில், கேரளாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான திரிசூர் பகுதியில் சிறப்பு பெண்கள் காவலர் படை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காவலர் படை நகரத்தின் அனைத்து மூலை முடுக்கெல்லாம் அலசி ஆராய்ந்து மக்கள் நடமாட்டத்தை தவிர்க்கும் பணியை மேற்கொள்ள இருக்கின்றனர்.

ராயல் என்பீல்டு புல்லட் பைக்கில் கிளம்பிய பெண் சிங்கங்கள்.. எதற்காக தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

அதுமட்டுமின்றி, தனித்திருக்கும் முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கும் இந்த பேரிடர் காலத்தில் உதவி புரிய இருக்கின்றனர்.

இந்த சிறப்பு பெண்கள் படைக்கென ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பிரபலமான புல்லட் பைக்குகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இவர்கள் சிங்கம் படம் சூர்யாவைப் போல் இந்த பைக்கில் புறப்பட்டு சென்றே தனி சிறப்பு வாய்ந்த பணியை மேற்கொள்ள இருக்கின்றனர்.

ராயல் என்பீல்டு புல்லட் பைக்கில் கிளம்பிய பெண் சிங்கங்கள்.. எதற்காக தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

ஒவ்வொரு பைக்கிலும் இரு பெண் காவலர்கள் பயணிப்பர். அவர்களுக்கு ஒரே மாதிரியான அடையாளம் பொருந்திய ஹெல்மெட்டுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுதவிர வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையிலான முகமூடி மற்றும் கிருமி நாசினியும் அவர்களின் பயன்பாட்டிற்கு கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராயல் என்பீல்டு புல்லட் பைக்கில் கிளம்பிய பெண் சிங்கங்கள்.. எதற்காக தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

முன்னதாக அறிவிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு உத்தரவு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, கடந்த 14ம் தேதியோடு முடிவடைய இருந்த தடையுத்தரவு, வருகின்ற மே 3ம் தேதி வரை நீடித்துள்ளது. இம்மாதிரியான சூழ்நிலையில் மக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்ப்பது ஒவ்வொரு மாநில அரசின் தலையாய கடமையாக மாறியுள்ளது. இதனடிப்படையிலேயே கேரளாவில் சிறப்பு பெண்கள் காவலர் படை உருவாக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, April 18, 2020, 11:51 [IST]
English summary
Women Police Officers peforming Covid Patrolling on Royal Enfield Motorcycles. Read in Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+