Just In
- 1 hr ago என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- 6 hrs ago ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
- 7 hrs ago சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- 7 hrs ago குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
Don't Miss!
- Sports IPL 2024 CSK : சிஎஸ்கே அணியின் அடுத்த மேட்ச் எப்போது? எந்த அணியுடன்? முழு விவரம்
- Technology அடிச்சார் பாரு அம்பானி! மாசத்துக்கு ரூ.150 தான்.. SMS, அன்லிமிடெட் Calls, டேட்டா, Jio Cinema-னு எல்லாமே உண்டு!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
நடு நடுங்க வைக்கும் காரியத்தை துணிச்சலாக செய்த இளைஞர்... வீடியோவ பாக்குறதுக்கே தனி துணிச்சல் வேணும்!
இளைஞரின் சாகச வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. அதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
இந்தியாவில் பருவ மழை காலம் ஆரம்பித்துள்ளது. இதனால், நாட்டின் பெரும்பாலான மாநிலங்கள் வெள்ளக் காடாக மாறியிருக்கின்றன. இதற்கு மிகச் சிறந்த உதாரணம் மும்பை நகரத்தின் தற்போதைய நிலை. தமிழகம் போன்ற ஒரு சில மாநிலங்கள் மழைக்காக காத்துக் கொண்டிருக்கின்ற அதேவேலையில், நாட்டின் ஒரு சில பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்த நிலை காணப்படுகின்றது.
இந்நிலையில், பெருக்கெடுத்து ஓடும் காட்டாற்று வெள்ளத்தில், இருசக்கர வாகன ஓட்டி ஒருவர், அவரது யமஹா ஆர்3 பைக்குடன் கடப்பது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. பிறர் செய்ய தயங்கும் இந்த ஆபத்தான செயலை உள்ளூர் வாசி ஒருவரின் உதவியுடன் அந்த இளைஞர் செய்திருக்கின்றார். இதுகுறித்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.
யமஹா ஆர்3 பைக் உரிமையாளரின் இந்த செயல் அவருக்கு மட்டுமின்றி, உதவிக்காக வந்தவரின் உயிருக்கும் பேராபத்தை விளைவிக்கக்கூடிய ஓர் செயலாகும். ஆனால், அதிர்ஷ்டவசமாக இருவரும் எந்தவொரு சிக்கலிலும் சிக்காமல் தப்பித்துள்ளனர். இதற்கு பைக்கின் அதி திறன் மற்றும் அது கடக்க உதவியபவர் மட்டுமே காரணம்.
இந்த பைக்கில் யமஹா நிறுவனம் 321 சிசி திறன் கொண்ட லிக்யூடு கூல்ட், பாரல்லல் ட்வின் எஞ்ஜினைப் பயன்படுத்துகின்றது. இது அதிகபட்சமாக 41 பிஎச்பியையும், 29.6 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது. இத்தகையத் திறனை யமஹா ஆர்3 பைக் கொண்டிருப்பதனாலயே அதன் உரிமையாளர் மிகவும் துணிச்சலாக காட்டாற்று வெள்ளத்தைக் கடந்திருக்கின்றார்.
பெருக்கெடுத்து ஓடும் நீரில் செங்குத்தாக செல்வதே மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும். ஆனால், இங்கோ அதிக வேகத்தில் பாய்ந்துக்கொண்டிருக்கும் நீர், பைக்கின் பக்கவாட்டு பகுதியைத் தாக்குகின்ற வகையில் அந்த இளைஞர் சென்றிருக்கின்றார். இதனாலயே பலர் இந்த வீடியோவை வெட வெடத்து பார்க்கும் சூழல் ஏற்பட்டிருக்கின்றது. வீடியோவைப் பார்த்த நமக்கு மட்டுமில்லைங்க சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் இவ்வாறே உணர்ந்ததாகக் கூறப்படுகின்றது.
இருப்பினும், அங்கிருந்த ஒரு சிலர் யமஹா ஆர்3 பைக்கரை உற்சாகப்படுத்தும் விதமாக கோஷம் எழுப்பியிருக்கின்றனர். அவ்வாறு காட்டாற்று வெள்ளத்தை வேடிக்கைப் பார்க்க சென்றவர்களில் ஒருவரே இந்த சம்பவம் முழுவதையும் தனது செல்போனில் படமாக பிடித்து வைரலாக்கியிருக்கின்றார்.
இந்த சம்பவம் லடாக்கில் அரங்கேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக, லடாக்கின் பெரும்பாலான சாலைகள் கரடு, முரடானதாகவே காட்சியளிக்கின்றன. அதுமட்டுமின்றி, அங்கு பனிப் பாறைகள் உருகி வருவதால் சில நேரங்களில் வழக்கத்திற்கு மாறாக ஆற்றில் நீரோடுவதுண்டு. அதிலும், உச்சி வெயில் நேரங்களில் கூடுதலாக ஆற்றில் நீர் பெருக்கெடுப்பதுண்டு.
இதனால்தான் அப்பகுதி வாசிகள் பெருவாரியானோர் காலைப் பொழுதிலேயே ஆற்றைக் கடந்துவிடுகின்றனர். இதனடிப்படையிலேயே குறைந்தளவு வெள்ள நீர் வரும்போதே இந்த இருசக்கர வாகன ஓட்டி ஆற்றைக் கடந்திருக்கின்றார். அந்த நேரத்தில் அந்த ரைடர், அனைத்துவிதமான பாதுகாப்பு கவசங்களையும் அணிந்திருப்பதை நம்மால் காண முடிகின்றது.
ஒரு வேலை அதிக நீரோட்டத்தில் அவர் சருக்கி விழ நேர்ந்திருந்தாலும், அந்த ரைடிங் கியர்கள் அவருக்கு தேவையான பாதுகாப்பை வழங்கும். இருப்பினும், இதுபோன்று வெள்ள நீர் ஓடும் பாதையில் இருசக்கர வாகனத்தை இயக்குவது முட்டாள் தனமானது என வீடியோவைப் பார்த்த பலர் கமெண்ட் செய்திருக்கின்றனர். அதேசமயம், பைக்கரின் துணிச்சலுக்கு ஒரு சிலர் புகழாரம் சூட்டியும் வருகின்றனர். இதுகுறித்த வீடியோவைக் காண இங்கே க்ளிக் செய்யவும்.
அந்த இளைஞர் பயன்படுத்திய யமஹா ஆர்3 பைக் புதிய மாசு உமிழ்வு விதி காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் விற்பனையில் இருந்து நீக்கப்பட்டது. ட்யூவல் சேனல் ஏபிஎஸ் , டிஸ்க் பிரேக் என பல்வேறு வசதிகளுடன் விற்பனையில் இருந்த பைக், புதிய பிஎஸ்-6 உமிழ்வு விதியுடன் விரைவில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
-
இந்தியாவுலேயே நல்லா சேல்ஸ் ஆகுற கார் இதெல்லாம்! ஆனா இந்த விஷயம் தெரிஞ்சா யாரும் வாங்க மாட்டாங்க!
-
73 வயதில் நம்மால் எழுந்து நிற்க முடியுமானு கூட தெரியல!! இந்த பாட்டிக்கு வயசு வெறும் நம்பர் தான்!
-
எதை பாக்கறதுனே தெரியல! அவங்களை மாதிரியே காரும் அழகா இருக்கு! இவங்க யார்னு அடையாளம் தெரியுதா?