உலகின் முதல் ஒளிரும் சைக்கிள்... இது இந்திய நிறுவனத்தின் தயாரிப்பு... விலை எவ்வளவு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
இந்தியா நிறுவனம் ஒன்று உலகின் முதல் ஒளிரும் சைக்கிளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை மற்றும் பிற சிறப்பு வசதிகள் பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

உலகளவில் மக்கள் மத்தியில் சைக்கிள்கள் மீதான வரவேற்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்த காலத்தில் மக்கள் பலர் சைக்கிள் பயன்பாட்டிற்கு பெருமளவில் மாற தொடங்கினர். அதிலும், இந்தியாவில் திடீரென சைக்கிள் பயனர்கள் மலையளவில் அதிகரிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

பலர், தங்களின் உடல் நலனைக் கருத்தைக் கொண்டு சைக்கிள் பயன்பாட்டிற்கு மாறி வந்தாலும், நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வரும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையுயர்வே இதற்கு முக்கியமான காரணமாக அமைந்திருக்கின்றது. எனவே, மக்கள் மத்தியில் சைக்கிள்கள் மீதான வரவேற்பு சற்று அதிகரித்தநிலையில் காணப்படுகின்றது.

இந்த நிலையைக் கவனத்தில் கொண்டு மிதிவண்டி தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் புதுமுக அறிமுகங்களை சூடுபிடிக்கச் செய்திருக்கின்றன. அந்தவகையில் பிரபல இந்திய சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான அஹோய் அதன் புத்தம் புதிய லுமினோஸ் சைக்கிள்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

பன்முக தேர்வில் இச்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமட்டுமின்றி, இந்த சைக்கிளில் அதிக பாதுகாப்பை வழங்கும் வகையில் ஒளிரும் வசதியை தயாரிப்பு நிறுவனம் வழங்கியிருக்கின்றது. உலகிலேயே இந்த வசதியுடன் விற்பனைக்கு வரும் முதல் சைக்கிள் இதுவாகும். ஆகையால், இதனை இந்தியாவிற்கான பெருமிதமான நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.

எலெக்ட்ரோ லூமினசென்ட்:
எலெக்ட்ரோ லுமினசென்ட், இது மின் விளக்குகளுக்கு இணையான ஒளிரும் தன்மையை வெளிப்படுத்தும் அம்சம் ஆகும். இத்தகைய அம்சம் கொண்ட ஃப்ரேமினையே லுமினஸ் சைக்கிளில் அஹோய் பயன்படுத்தியுள்ளது. இத்தகைய திறன்பாட்டை இதன் ஃப்ரேம்கள் வெளிப்படுத்துவதால் விபத்து போன்றவற்றில் தப்பிக்க முடியும்.

அதாவது, கடும் இருட்டில் இச்சைக்கிள் வந்தாலும், ஒளிரும் தன்மை இதில் இருப்பதால் பிற வாகனங்கள் சைக்கிள் வருவதை இனம் கண்டு ஒதுங்கிச் செல்ல வழி வகுக்கும். இந்த காரை அதிக பாதுகாப்பானது என அஹோய் நிறுவனம் கூறுகின்றது.

இச்சைக்கிளுக்கு ரூ. 20 ஆயிரம் என்ற விலையை நிறுவனம் நிர்ணயித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 200 விற்பனையாளர்கள் வாயிலாக இச்சைக்கிளை விற்பனைக்கு வழங்க திட்டமிட்டுள்ளது. மேலே கூறியது ஆரம்ப நிலை தேர்வின் விலை மட்டுமே ஆகும்.

ஃப்ரேமில் பூசப்படும் பெயிண்டே இந்த ஒளிரும் தன்மைக் காரணம் ஆகும். இத்தகைய அம்சத்துடன் உலகில் வேறு எந்த நிறுவனமும் தயாரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








