Just In
- 2 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 2 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 3 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 3 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Movies Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
ஒர்க்ஷாப்பில் நிறுத்தி இருந்த உலகின் நீளமான பைக்கை பைக்கை தூக்கிய ஆர்டிஓ அதிகாரிகள்... இதெல்லாம் நியாயமே இல்ல!
பல சாதனைகள் படைத்த உலகின் மிக நீளமான பைக்கை ஆர்டிஓ அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
உலக சாதனைப் படைக்கும் வகையில் மிக நீளமான தோற்றத்தில் உருவாக்கப்பட்ட ஓர் பைக்கை காவலர்கள் பறிமுதல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஓர் 13 நீளமான பைக்காகும். இந்த அதிகபட்ச உயரமே போலீஸார் பைக்கை பறிமுதல் செய்ய காரணமாக அமைந்துள்ளது.
இதுல ஆச்சரியப்படுவதற்கு ஒன்னும் இல்லைங்க. இந்தியாவில் வாகன மாடிஃபிகேஷன் என்பது ஓர் தடை செய்யப்பட்ட செயலாகும். இந்த விதியை மீறியே இருசக்கர வாகனத்தை இளைஞர்கள் சிலர் மிக பிரமாண்ட தோற்றம் கொண்ட பைக்காக மாற்றியிருக்கின்றனர்.
கர்நாடாக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் ஜாகீர் கான் என்ற இளைஞரே இந்த வாகனத்தை உருவாக்கியவர் ஆவார். இவர், அவரது இருசக்கர வாகன பழுது பார்க்கும் நிலையத்தில் வைத்து இப்பைக்கை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வந்திருக்கின்றார்.
இதையறிந்த பெங்களூரு நகர போக்குவரத்து துறை போலீஸார்கள் ஒர்க்ஷாப்பில் நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து அதிரடி காட்டியிருக்கின்றனர். ஜாகீர்கானின் இப்பைக் கின்னஸ் சாதனைப் படைத்த வாகனம் ஆகும். இத்துடன் இன்னும் பல சாதனைகளையும் அப்பைக்கை படைத்திருக்கின்றது.
இத்தகைய சூப்பர் சிறப்புமிக்க இருசக்கர வாகனத்தையே காவலர்கள் பறிமுதல் செய்திருக்கின்றனர். மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட ஒற்றை காரணத்திற்காகவே இப்பைக் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றது. ஆனால், இதுபோன்று தனியார் இடங்களான வாகன நிறுத்துமிடம், ஒர்க்ஷாப், ஆட்டோமொபைல் கண்காட்சி மற்றும் தனியார் சாலை, ரேசிங் டிராக் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் வாகனங்களை பறிமுதல் செய்யக் கூடாது என்பதே விதியாகும்.
இந்த விதிமீறல் செயல் தற்போதைய பெங்களூரு சம்பவத்தில் அரங்கேறியிருக்கின்றது. எனவே ஆகையால் ஆர்டிஓ அதிகாரிகளின் செயலுக்கு வாகன ஆர்வலர்கள் மத்தியில் கண்டனங்கள் எழும்பியிருக்கின்றன. பொதுவாகவே, மாடிஃபை செய்யப்பட்ட வாகனங்கள் பொதுசாலையில் பயணிக்கும் என்றால் மட்டுமே அதனை சட்ட விதிமீறலாக எடுத்துக் கொள்ளப்படும்.
இந்த விதி இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமல்ல கார்களுக்கும் பொருந்தும். உருவம் மாற்றம் செய்யப்பட்ட வாகனங்கள் எதுவும் சாலையில் பயணிப்பது அதிகாரப்பூர்வமற்றவை ஆகும். அதேசமயம், உரிய அனுமதியை ஆர்டிஓ-விடம் பெற்றிருந்தால் அதனை பொது சாலைகளில் பயன்படுத்தலாம்.
தான் ஆர்டிஓ-வின் அனுமதியை பெறவில்லை என்றாலும் இந்த வாகனத்தை பொது சாலையில் பயன்படுத்தவில்லை. ஆகையால், அதிகாரிகளின் இச்செயலுக்கு எதிராக நான் போராட இருக்கின்றேன் என ஜாகீர் கான் கூறியுள்ளார். இதுமட்டுமின்றி, தனது பிரமாண்ட இருசக்கர வாகனத்தைத் திருப்பி தருமாறு உயர் அதிகாரிகளிடம் கோரிக்கைகளை முன் வைக்க தொடங்கியிருக்கின்றார் ஜாகீர்கான்.
இதனடிப்படையிலேயே ஆர்டிஓ கமிஷனர் சிவக்குமாரை கவரும் வகையில், சாதனைப் படைத்த தனது இருசக்கர வாகனம் குறித்த ஓர் வீடியோவை அவர் உருவாக்கி, தற்போது, அதனை வெளியிட்டும் இருக்கின்றார். இந்த இருசக்கர வாகனத்தை ஜாகீர்கான் சுமார் 6 லட்ச ரூபாய் செலவில் உருவாக்கியிருக்கின்றார்.
பஜாஜ் அவென்ஜர் பைக்கை பயன்படுத்தியே 13 அடி நீளமான பைக்கை அவர் உருவாக்கியிருக்கின்றார். இந்த பைக்கில் 220 சிசி எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், டயர் மற்றும் சேஸிஸ் போன்றவை மாற்றப்பட்டிருக்கின்றன. இந்த பைக்கில் 50 லிட்டர் எரிபொருளை நிரப்பும் வகையில் பெரிய ப்யூவல் டேங்க் நிறுவப்பட்டுள்ளது. இதன் ஒட்டுமொத்த எடை 450கிலோவாகும். இது ஓர் இலகு ரக காருக்கு நிகரான எடை என்பதுகுறிப்பிடத்தகுந்தது.
Image Courtesy: Dr-Zakir Khan And Ruptly
இத்தகைய பிரமாண்ட வசதிக் கொண்ட உருமாற்றம் செய்யப்பட்ட பைக்கையே பெங்களூரு நகர ஆர்டிஓ அதிகாரிகள் தற்போது பறிமுதல் செய்து அதிரடி காட்டியிருக்கின்றனர். இதுபோன்று ஆர்டிஓ அதிகாரிகள் மாடிஃபை செய்யப்பட்ட வாகனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையில் இறங்குவது முதல் முறையல்ல. இதற்கு முன்பாகவும் இதுமாதிரியான பல சம்பவங்கள் நாட்டில் அரங்கேறியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!