Just In
- 5 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 5 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 7 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 8 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ரூ. 30,000 செலவில் நான்கு பேர் செல்லும் ஸ்கூட்டர் தயார்! இப்படி ஒரு வண்டி நமக்கும் கிடைச்சா செம்மையா இருக்கும்
இரண்டு பேர் மட்டுமே செல்லக் கூடிய இருசக்கர வாகனத்தை நான்கு பேர் செல்லக் கூடிய மூன்று சக்கர வாகனமாக இளைஞர் ஒருவர் மாற்றியமைத்திருக்கின்றார். இந்த சுவாரஷ்ய நிகழ்வு பற்றிய முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் ஒருவர் (மூன்றாவது நபர்) செல்வது போக்குவரத்து விதிகளின்படி குற்ற செயலாகும். ஆனால், இங்கு ஓர் மனிதர் மூன்று அல்ல நான்கு பேர் வரையில் செல்லும் வகையில் தனது இருசக்கர வாகனத்தை மூன்று சக்கர வாகனமாக மாற்றி அமைத்திருக்கின்றார். இந்நிகழ்வு பற்றிய பல சுவாரஷ்ய தகவல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இளைஞரே, இரண்டு பேர் பயணிக்கக் கூடிய இரு சக்கர வாகனத்தை நான்கு பேர் பயணிக்கக் கூடிய மூன்று சக்கர வாகனமாக மாற்றியிருக்கின்றார். பழைய பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரை அவர் இவ்வாறு மாடிஃபை செய்திருக்கின்றார். கூடுதலாக இரு பயணிகள் அமர்வதற்கான இருக்கை அமைப்பையும் ஸ்கிராப் செய்யப்பட்ட பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரில் இருந்தே அவர் பெற்றிருக்கின்றார்.
இரண்டையும் இணைத்ததன் வாயிலாக தற்போது நான்கு பேர் அமர்ந்து செல்லும் பயணிக்கக் கூடிய வாகனமாக பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டர் மாறியிருக்கின்றது. இரண்டாவதாக பின் பகுதியில் சேர்க்கப்பட்டிருக்கும் பஜாஜ் சேத்தக்கின் முகப்பு பகுதி முழுமையாக நீக்கப்பட்டிருக்கின்றது. கால் வைக்கும் பகுதி வரை விடப்பட்டு மற்ற முன் பக்க அம்சங்கள் பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.
இதையடுத்தே இயக்க நிலையில் இருக்கும் மற்றுமொரு சேத்தக் ஸ்கூட்டரின் பின் பகுதியுடன் அது இணைக்கப்பட்டு நான்கு பேர் செல்லும் வாகனமாக மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றது. இதுபோன்ற வாகன மாடிஃபிகேஷன்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இருப்பினும், வாகன ஆர்வலர்கள் சிலர் தங்களின் இதுபோன்ற தனித்துவமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருசக்கர வாகனத்தை மூன்று சக்கர வாகனமாக மாற்றியிருக்கும் அதுல் தாஸ், சொந்தமாக ஏடி ஆட்டோமொபைல்ஸ் (AD Automobile) நிறுவனத்தை நடத்தி வருகின்றார். அவர் சில வாரங்களுக்கு முன்னரே இருசக்கர வாகனத்தை மூன்று சக்கர வாகனமாக மாற்றியமைத்ததாக தெரிவித்திருக்கின்றார்.
தற்போதைய எரிபொருள்களின் அதிகபட்ச விலை மற்றும் பெரிய குடும்பத்தினர்களின் பயன்பாடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த ஸ்கூட்டரை வடிவமைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இருசக்கர வாகனத்தின் உருமாற்றத்திற்காக அவர் ரூ. 30 ஆயிரம் வரை செலவு செய்திருப்பதாக தெரிவித்திருக்கின்றார். இந்த மிகக் குறைவான தொகையிலேயே நான்கு பேர் செல்லக் கூடிய மூன்று சக்கர வாகனம் தயார் செய்யப்பட்டிருக்கின்றது.
தற்போது இந்த இருசக்கர வாகனத்திலேயே தனது மனைவி, பிள்ளைகளுடன் அவர் வலம் வந்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது மட்டுமின்றி தனது நண்பர்களுடனும் பயணிக்க இவ்வாகனத்தை பயன்படுத்தி வருவதாக தாஸ் கூறியிருக்கின்றார். ஆனால், இது போக்குவரத்து விதிகளின்படி குற்ற செயலாகும்.
இதுபோன்ற வாகன மாடிஃபிகேஷன் அங்கீகாரம் இல்லை என்பதால் போக்குவரத்துத்துறை எப்போது வேண்டுமானாலும் தாஸ் மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம் என தெரிகின்றது. வாகனங்களின் உருவத்தையோ அல்லது அடையாளத்தையோ மாற்றுவதற்கு எந்தவொரு அங்கீகாரமும் இல்லை. அதே நேரத்தில் உரிய அனுமதியைப் பெற்று வாகனங்களை மாற்றிக் கொள்ளலாம்.
சில பெரும் நிறுவனங்கள் இதுமாதிரியான செயல்களில் ஈடுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேநேரத்தில், ஆய்விற்காக தயாரிக்கப்படும் வாகனங்கள் பொதுசாலையில் பயன்படுத்தாத வரையிலும் அந்த வாகனங்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் காவல்துறை எடுக்காது என்பதும் இங்கு கவனிக்கத்தகுந்தது.
கடந்த காலங்களில் இதுபோன்று மாடிஃபை செய்யப்பட்ட வாகனங்கள் பலவற்றின்மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இருப்பினும், வாகன ஆர்வலர்கள் இதுமாதிரியான செயல்களில் ஈடுபடுவதை நிறுத்தியதாக தெரியவில்லை. அதேநேரத்தில், வாகன மாடிஃபிகேஷன்கள் முரண்பாடானதாக தெரிந்தாலும் அவற்றை ரசிக்காமல் இருக்க முடியவில்லை என்று கூறுமளவிற்கு சில வாகனங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.
உதாரணமாக, அதிக லக்சூரி வசதி மற்றும் கவர்ச்சியான தோற்றத்துடன் பல வாகனங்கள் நம் நாட்டு வாகன ஆர்வலர்களின் கை வண்ணத்தால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. சமீபத்தில்கூட பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் காட்ஸில்லாவை போல் ராயல் என்பீல்டு பைக் ஒன்று மாற்றியமைக்கப்பட்டது. அதுகுறித்த சுவாரஷ்ய தகவலை அறிய இங்கே க்ளிக் செய்யவும்.
குறிப்பு: முதல் இரு படங்கள் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!