Just In
- 47 min ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- 1 hr ago உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
- 1 hr ago 20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
- 3 hrs ago குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
Don't Miss!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே கேப்டனாக மாபெரும் சாதனை.. தோனியின் ரெக்கார்டை உடைத்து எறிந்த ருதுராஜ்
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மத்திய அரசின் தடாலடி அறிவிப்பு... மின்சார இருசக்கர வாகனங்களின் விலை கணிசமாக குறைந்தது
மின்சார இருசக்கர வாகன விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் அதிரடி அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதனால், மின்சார இருசக்கர வாகனங்களின் விற்பனையில் முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்பு எழுந்துள்ளது.
பெருநகரங்களில் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையால் காற்று மாசுபாடு அபாய கட்டத்தை எட்டி இருக்கிறது. எனவே, பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக புகை வெளியேற்றாத மின்சார வாகனங்களின் விற்பனையை ஊக்குவிப்பதற்கு மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக, பெருநகரங்களில் மின்சார இருசக்கர வாகனங்களின் விற்பனையை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இதன்படி, ஃபேம்-2 என்ற மின்சார வாகனங்களுக்கான மானியத் திட்டத்தின் கீழ் ஒரு அதிரடி அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, மின்சார இருசக்கர வாகனங்களுக்கான மானியம் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால், மின்சார இருசக்கர வாகனங்களின் விலை கணிசமாக குறைய இருக்கிறது. ஏத்தர் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த அறிவிப்பு வந்த உடனே, மானியத்தை கணக்கில்கொண்டு விலையை ரூ.14,500 வரை குறைப்பதாக அறிவித்துள்ளன. மேலும், சில முன்னணி நிறுவனங்களும் விலை குறைப்பு அறிவிப்புகளை வெளியிடத் துவங்கி இருக்கின்றன.
இதனால், மின்சார ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு விலையில் கூடுதல் பலன் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இது மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கும் மகிழ்ச்சியை தரும் வகையில் அமைந்துள்ளது.
ஃபேம்-2 திட்டத்தின் கீழ் மின்சார இருசக்கர வாகனங்களின் பேட்டரியில் ஒவ்வொரு kWh திறனுக்கும் ரூ.10,000 மானியம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது ஒரு kWh திறனுக்கு ரூ.15,000 என்ற அடிப்படையில் மானியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, மானியம் 50 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் அறிவிப்புக்கு ஏத்தர் எனெர்ஜி நிறுவனத்தின் சிஇஓ தருண் மேத்தா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மின்சார இருசக்கர வாகனங்கள் மீதான மானியம் 50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது சிறப்புமிக்க முடிவாக கருதுகிறோம். இது நிச்சயம் மின்சார இருசக்கர வாகனங்களின் விற்பனையை அதிகரிப்பதற்கு உதவும்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக, மின்சார இருசக்கர வாகன விற்பனை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு நிச்சயம் விற்பனையை அதிகரிக்க உதவும். வரும் 2025ம் ஆண்டில் மின்சார இருசக்கர வாகனங்களின் விற்பனை 6 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்," என்று தெரிவித்துள்ளார்.
சிம்பிள் எனெர்ஜி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுகாஸ் ராஜ்குமார் கூறுகையில்,"மின்சார இருசக்கர வாகனங்களுக்கான மானியம் வெகுவாக அதிகரிக்கப்பட்டு இருப்பது பெரு மகிழ்ச்சியை தருகிறது. எங்களை போன்ற மின்சார இருசக்கர வாகன உற்பத்தியாளர்களுக்கு இது நிச்சயம் பேருதவியாக இருக்கும்," என்று தெரிவித்துள்ளார்.
ஃபேம்-2 திட்டத்தின் கீழ் மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்குவதற்காக ரூ.8,800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், மின்சார வாகனங்களுக்கான சார்ஜ் ஏற்றும் கட்டமைப்பை நிறுவதற்காக ரூ.1,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் 10 லட்சம் மின்சார இருசக்கர வாகனங்களையும், 5 லட்சம் மின்சார மூன்று சக்கர வாகனங்களையும், 55,000 மின்சார கார்களையும், 7,000 மின்சார பஸ்களையும் விற்பனை செய்ய இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் வாகனங்களின் நச்சுப் புகையால் மூச்சு திணறி வரும் பெரு நகரங்களில் மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிப்பதற்கு இந்த ஃபேம்-2 திட்டம் பேருதவியாக அமையும். குறிப்பாக, மின்சார இருசக்கர வாகனங்களுக்கும், பெட்ரோல் இருசக்கர வாகனங்களின் விலைக்கும் இடையிலான பெரிய வித்தியாசத்தை குறைக்க இந்த மானியத் திட்ட அறிவிப்பு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதனால், மின்சார இருசக்கர வாகனங்களின் விற்பனை அதிகரிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.
-
நானோ காரை நமக்கு தெரியும்! ஆனா இது அது கிடையாது... டாடா உருவாக்கிய இந்த கார் கடைசி வர வெளியே வராமல் போய்டுச்சே
-
கார் கப்பல் மாதிரி இருக்காம்! இவ்ளோ மைலேஜ் வேற தருதா! மொத்த கூட்டமும் மாருதி சுஸுகி ஷோரூம்லதான் இருக்கு!
-
7 பேர் வரை ஒன்னா போகலாம்! 26 கி.மீ மைலேஜூம் தரும் ஆனா இந்த எர்டிகா கார் பத்தி இது யாருக்கும் தெரியாது!