Just In
- 1 hr ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 2 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 4 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 10 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- News ஏசி ராத்திரியெல்லாம் ஓடுதா? நீங்க AC யூஸ் பண்ணும்போது, இந்த 5 மேட்டரை நோட் பண்ணுங்க.. பெஸ்ட் டிப்ஸ்
- Technology TDS முழுசா வேணுமா? அப்போ உங்க PAN கார்டுல இது முக்கியம்.. உடனே செஞ்சிடுங்க.. Income Tax-ன் திடீர் உத்தரவு!
- Movies டெய்லர் ஸ்விஃப்டுடன் கச்சேரி நடத்தப் போகிறாரா ஏ.ஆர். ரஹ்மான்?.. அந்த விருது வேற கிடைச்சிருக்கே!
- Lifestyle தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஹீரோவின் உதவியுடன் இப்போதே மூன்றாம் அலையை சமாளிக்க தயாராகும் டெல்லி! எத்தனை அலை வந்தாலும் சமாளிக்கலாம்!
மூன்றாம் அலை பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஹீரோ தலைநகர் டெல்லியில் தரமான சம்பவத்தை செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.
கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவலால் இந்தியாவில் ஏற்பட்ட இழப்புகள் எண்ணற்றவை. இதன் தாக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளின் தீவிரமே இன்னும் ஓயாத நிலையில் மிக விரைவில் இந்தியாவை மூன்றாம் அலை வைரஸ் பரவல் தாக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.
ஆகையால், பொதுவெளியில் மக்கள் அதிக பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவலில் மிகக் கடுமையாக பாதிப்படைந்த தலை நகர் டெல்லிக்கு ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் உதவி கரிம் நீட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருசக்கர வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் ஹீரோ மோட்டோகார்ப், 50 படுக்கைகள் அடங்கிய கோவிட்-19 வார்டினை டெல்லியின் ஜனக்புரி பகுதியில் தொடங்கியிருக்கின்றது. இது ஓர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆகும். இதனை பீப்பிள் டூ பீப்பிள் ஹெல்த் ஃபவுண்டேஷன் எனும் அறக்கட்டளையின் கூட்டணியில் இந்த மருத்துவமனையை ஹீரோ பராமரிக்க இருக்கின்றது.
இந்த மருத்துவமனையை ஒன்றிய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் திறந்து வைத்தார். வைரஸ் காரணமாக நாடு முழுவதும் மருத்துவமனை மற்றும் மருத்துவ உபகரணங்கள் தலைவிரித்தாடியது. குறிப்பாக, ஆம்புலன்ஸ் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை மிகக் கடுமையாக நிலவியது.
இதனால், பல உயிர்கள் பரிதாபமாக பலியாகின. இந்த மாதிரியான சூழ்நிலை வரும் மூன்றாம் அலையில் ஏற்படக் கூடாது என்பதற்காகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் தலைநகர் டெல்லியில் புதிய கோவிட் 19 மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை மட்டுமின்றி சுகாதார பணியாளர்களுக்கு தனது இருசக்கர வாகனங்களையும் ஹீரோ நிறுவனம் வழங்கயிருக்கின்றது. ஹர்யானா மாநிலத்தின் தருஹேரா பகுதியில் உள்ள ஏழு மருத்துவமனைகளுக்கும், உத்தர்காண்டில் உள்ள நான்கு மருத்துவமனைகளுக்கும், குருகிராம் மற்றும் ஹர்யானா ஆகிய நகரங்களில் தலா நான்கு மருத்துவமனைகளுக்கும் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
இதுமட்டுமின்றி ஜெய்பூர், ரஜாஸ்தான், ஹலோல் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளின் சுகாதாரப் பணியாளர்களுக்கும் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி ஆக்ஸிஜன் சிலிண்டர், பிபிஇ கிட் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களையும் ஹீரோ வழங்கியிருக்கின்றது.
இதைத்தொடர்ந்தே, தற்போது நாட்டின் தலைநகரில் மருத்துவமனையை திறந்து வைத்து தனது கோவிட் வைரசுக்கு எதிரான போராட்டத்தை ஹீரோ விரிவாக்கம் செய்திருக்கின்றது. ஹீரோவின் இந்த செயல் மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை, நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?