Just In
- 51 min ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 1 hr ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- 8 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 8 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
Don't Miss!
- News லோக்சபா தேர்தல் முடிந்தாலும்.. தமிழகத்தில் சில இடங்களில் பறக்கும் படை சோதனை தொடருமாம்! ஏன் தெரியுமா
- Sports மினி சென்னையில் ஆடினோம்.. 2 நாளில் இதை விட அதிகமாக இருக்கும்.. மனம் திறந்து சொன்ன கே எல் ராகுல்
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் படத்தை வெளியிட்டது ஹீரோ... ஆஹா ஸ்டைலு செம்மையா இருக்கே!
ஹீரோ மோட்டோகார்ப் அதன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் படத்தை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
ஹீரோ-ஹோண்டா கூட்டணியின் சகாப்தம் 2011ம் ஆண்டுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, இரு நிறுவனங்களும் இந்தியாவில் தனி-தனியாக செயல்பட்டு வருகின்றன. இந்த நிகழ்வின் பத்தாம் ஆண்டு நினைவு தினத்தையே ஹீரோ மோட்டோகார்ப் தற்போது அனுசரித்து வருகின்றது.
மேலும், இத்தினத்தை முன்னிட்டு நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் தலைவர், நிர்வாகன இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான பவன் முஞ்சல் ஸ்கூட்டரின் படத்தை வெளியிட்டார்.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முழு படமும் வெளியிடப்படவில்லை. வெறும், அதன் பக்கவாட்டு தோற்றம் மட்டுமே தற்போது வெளியிடப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் பற்றிய தகவலையும் நிறுவனம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுகுறித்த முக்கிய விபரங்களை ஹீரோ மிக விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேசமயம், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிக விரைவில் விற்பனைக்கு வர இருக்கின்றது என்ற தகவல் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பவன் முயஞ்சல் உறுதிப்படுத்தியுள்ளார். ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ப பற்றி முக்கிய தகவல்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், தற்போது வெளியாகியிருக்கும் படங்கள் வாயிலாக சில முக்கிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
அதாவது, ஹீரோ மோட்டோகார்ப்பின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 12 இன்சிலான வீல் முன் பக்கத்திலும், 10 இன்சிலான வீல் பின் பக்கத்திலும் இடம் பெற இருக்கின்றது. இத்துடன், சிறந்த பயண அனுபவத்திற்காக முன் பக்க வீலில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின் பக்க வீலில் மோனோஷாக் அப்சார்பரும் இடம் பொருத்தப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கின்றது.
தொடர்ந்து, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நவீன கால தோற்றத்தில் கவர்ச்சியான ஸ்டைலைக் கொண்டிருப்பதும் தெரிய வந்திருக்கின்றது. சாய்வான ஏப்ரான், சிறிய ஃப்ளை திரை என கூடுதல் கவர்ச்சிக்கான வேலைகளும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்காகவே தாய்வான் நிறுவனத்துடன் ஹீரோ மோட்டோகார்ப் கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றது. இந்த கூட்டணியானது கடந்த ஏப்ரல் மாதமே தொடங்கிவிட்டது. கோகோரோ எனும் நிறுவனத்துடனே அது கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றது.
இந்நிறுவனமே ஹீரோவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான ஸ்வாப்பபிள் (கழட்டி மாட்டக் கூடிய) பேட்டரியை தயாரித்து வருகின்றது. இந்த கூட்டணியின் அடிப்படையிலேயே எதிர்கால ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான பேட்டரியும் தயாரிக்கப்பட இருக்கின்றது.
இந்தியாவில் மின் வாகனங்களுக்கான டிமாண்ட் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. கடந்த காலங்களைக் காட்டிலும் நடப்பாண்டில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை பல மடங்கு உயர்ந்திருப்பதை நம்மால் காண முடிகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே ஹீரோ மோட்டோகார்ப் அதன் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் படத்தை வெளியிட்டிருக்கின்றது.
இந்தியாவில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மட்டுமில்லைங்க மிக விரைவில் இன்னும் பல எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. மிக முக்கியமாக ஓலா மற்றும் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்தியர்கள் மத்தியில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் வரும் 15ம் தேதி விற்பனைக்கு வர இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த தினத்திலேயே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை மற்றும் என்னென்ன சிறப்பம்சங்கள் இடம் பெற இருக்கின்றன என்பது போன்ற பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாக இருக்கின்றன.
எனவே, வரும் ஆகஸ்டு 15ம் தேதி இந்தியர்களுக்கு ஓர் மறக்க முடியாத நாளாக அமைய இருக்கின்றது. குறிப்பாக, மின் வாகன பிரியர்களுக்கு வரும் சுதந்திர தினம் மிகவும் சிறந்த நாளாக அமைய இருக்கின்றது. இந்த நாளில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமின்றி இன்னும் சில புதுமுக வாகனங்களும் விற்பனைக்கு அறிமுகமாக இருக்கின்றன. மஹிந்திரா நிறுவனம் அதன் ஏழு இருக்கைகள் வசதிக் கொண்ட எக்ஸ்யூவி 700 காரை வரும் 15ம் தேதி அன்றே அறிமுகம் செய்ய இருக்கின்றது.
குறிப்பு: நான்காவது படத்தை தவிர மற்ற அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.
-
ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி
-
ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு