Just In
- 30 min ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 38 min ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 1 hr ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 2 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- News சிறையில் கணவர்.. இடைத்தேர்தலில் களமிறங்கும் ஜார்கண்ட் Ex முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இப்படி நடக்கும்னு யாருமே எதிர்பாக்கல... இனி சொந்தமா ஒரு டூவீலர் வாங்கறது கூட ரொம்ப கஷ்டம்... ஏன் தெரியுமா?
புதிதாக டூவீலர் வாங்க முடிவு செய்திருப்பவர்களுக்கு அதிர்ச்சிகரமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
நடப்பு 2021ம் ஆண்டில் புதிய வாகனங்களை வாங்கியவர்கள் மற்றும் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு தொடர்ந்து அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளிக்கும் செய்திகள் வெளியாகி கொண்டே இருக்கின்றன. ஆம், நடப்பாண்டில் வாகனங்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே உள்ளது. வரும் நாட்களிலும் பல்வேறு நிறுவனங்களுடைய வாகனங்களின் விலை உயரும் போல் தெரிகிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் தனது இரு சக்கர வாகனங்களின் விலையை உயர்த்தவுள்ளதாக தற்போது அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு வரும் செப்டம்பர் 20ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு இந்த செய்தி கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விலை உயர்வுக்கு என்ன காரணம் தெரியுமா? நீங்கள் வாகனங்களின் விலை உயர்வு குறித்த செய்திகளை தொடர்ச்சியாக படித்து கொண்டிருப்பவர் என்றால், உங்களால் காரணத்தை மிக எளிதாக யூகித்து விட முடியும். இரு சக்கர வாகன உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரு சக்கர வாகனங்களின் உற்பத்தி செலவு அதிகரித்து வருவதால், அதனை ஈடு செய்ய வேண்டிய தேவை இருப்பதாகவும், எனவே விலையை உயர்த்துவது என்ற முடிவை எடுத்துள்ளதாகவும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்களின் விலை 3 ஆயிரம் ரூபாய் வரை உயரவுள்ளது.
அந்த நிறுவனத்தின் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர் என இரண்டு வகையான வாகனங்களின் விலையும் உயரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் மாடல்களை பொறுத்து விலை உயர்வு மாறுபடும் என்பதும் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம். ஒட்டுமொத்தமாக பார்த்தால், 3 ஆயிரம் ரூபாய் வரை விலை உயரவுள்ளது.
ஆனால் நடப்பாண்டில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது இரு சக்கர வாகனங்களின் விலையை உயர்த்துவது இது முதல் முறை கிடையாது. ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது இரு சக்கர வாகனங்களின் விலையை உயர்த்தியது. அதை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதமும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன இரு சக்கர வாகனங்கள் விலை உயர்வை சந்தித்தன.
இந்த வரிசையில் தற்போது மீண்டும் ஒரு முறை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன இரு சக்கர வாகனங்களின் விலை அதிரடியாக உயரவுள்ளது. முன்னதாக மாருதி சுஸுகி போன்ற முன்னணி கார் நிறுவனங்களும் வாகனங்களின் விலையை தொடர்ச்சியாக உயர்த்தி வருகின்றன. இது வாடிக்கையாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
தற்போது கோவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக பேருந்து மற்றும் ரயில் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்வதற்கு மக்கள் அச்சப்படுகின்றனர். அத்துடன் கோவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசும் அவ்வப்போது பொது போக்குவரத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து விடுகிறது.
ஊரடங்கு காரணமாக பேருந்து சேவைகள் திடீரென ரத்து செய்யப்படுகின்றன. அல்லது இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் தற்போது அனைவர் வீட்டிலும் சொந்தமாக ஒரு வாகனம் இருக்க வேண்டிய தேவை உள்ளது. ஆனால் இத்தகைய இக்கட்டான நேரத்தில் வாகனங்களின் விலை உயர்ந்து வருவது வாடிக்கையாளர்களை கவலையடைய செய்துள்ளது.
ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வாகனங்களின் விலையும் உயர்ந்து கொண்டே வருவது அவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தி கொண்டுள்ளது. ஆனால் இதன் காரணமாக வாகனங்களின் விற்பனை பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏனெனில் இந்தியாவில் விரைவில் பண்டிகை காலம் தொடங்கவுள்ளது. இதை முன்னிட்டு புதிய இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களை வாங்குவதற்கு பலரும் திட்டமிட்டுள்ளனர். எனவே தொடர்ச்சியாக விலை உயர்ந்தாலும், வாகனங்களின் விற்பனையில் பெரிய அளவில் சரிவு ஏற்படுவதற்கெல்லாம் வாய்ப்புகள் இல்லை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
-
வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!