நம்பவே முடியல!! ரூ.1,100 இருந்தால் ஹோண்டா டூ-வீலரை ஓட்டி செல்லலாம்... வட்டியும் ரொம்ப ரொம்ப கம்மி...
ஹோண்டா நிறுவனம் இருசக்கர வாகன விற்பனையை அதிகரிக்கச் செய்வதற்காக குறைந்த பட்ச வட்டி மற்றும் மிக குறைந்த முன்தொகை திட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ஹோண்டா நிறுவனம் அதன் இருசக்கர வாகனங்களின் பக்கம் மக்களைக் கவர வேண்டும் என்பதற்காக பல்வேறு சிறப்பு சலுகைகளையும், தள்ளுபடிகளையும் அறிவித்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிதியாண்டில் விற்பனை விகிதத்தை இரு மடங்காக அதிகரிக்கும் நோக்கில் இந்த முயற்சியில் நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது.

இம்முயற்சியின் ஒரு பங்காக நிறுவனம் தற்போது புதிய திட்டம் பற்றிய தகவலை வெளியிட்டிருக்கின்றது. எளிய வட்டி மற்றும் சுலப தவணை திட்டத்தை நிறுவனம் அறிவித்திருக்கின்றது. புதிய மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களை 6.5 சதவீதம் என்ற குறைந்த பட்ச வட்டியில் விற்பனைக்கு வழங்க இருப்பதாக நிறுவனம் அறிவித்திருக்கின்றது.

இதுமட்டுமின்றி இருசக்கர வாகனங்களின் விற்பனையை அதிகரிக்க செய்ய வேண்டும் என்பதற்காக பூஜ்ஜியம் பிராசஸிங் கட்டணத் திட்டத்தையும் நிறுவனம் அறவிதித்துள்ளது. ஆகையால், எந்தவொரு ஆவண சரிபார்ப்பிற்கும் ஹோண்டா ஒரு ரூபாயையைகூட கட்டணமாக வசூலிக்காது என்பது தெரிய வந்துள்ளது.

மேலும், டீலர்களிடத்தில் இருக்கும் ஸ்டாக்கினை பொருத்து இத்திட்டம் மாறுபடவும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், அதிக ஸ்டாக் உள்ள இருசக்கர வாகனங்களுக்கு நிச்சயம் மேற்கூறிய சலுகைகள் கிடைக்கும் என்பது தெரிய வருகின்றது.

ஆகையால், ஒரு டீலரிடத்தில் மட்டுமே விசாரிக்காமல் அருகில் இருக்கும் பிற டீலர்களிடத்திலும் இச்சலுகை குறித்து ஆராய்ந்த பின்னர் புதிய ஹோண்டா வாகனத்தை வாங்கும் முயற்சியில் இறங்கலாம் என்பதே எங்களின் கருத்தாகும்.

இதுமட்டுமில்லாமல் ரூ. 1,100 என்ற குறைந்தபட்ச முன்தொகையில் இருசக்கர வாகனங்களை விற்பனைக்கு வழங்க இருப்பதாகவும் நிறுவனம் கூறியுள்ளது. இந்த சிறப்பு சலுகை எத்தனை நாட்களுக்கு இருக்கும் என்பதை நிறுவனம் அறிவிக்கவில்லை. அதேசமயம், தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி இச்சிறப்பு திட்டங்கள் குறைந்த கால திட்டம் என்பது தெரிய வந்திருக்கின்றது.

ஹோண்டா நிறுவனம் அண்மையில் புதிய மின்சார மோட்டார்சைக்கிளுக்கான காப்புரிமையை பெற்றது. மினி பைக் உருவத்தில் உருவாக இருக்கும் அப்பைக்கின் வரைபடம் பற்றிய தகவலும் வெளியாகியது. இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களைத் தன் வசம் கவரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

அந்தவகையிலேயே புதிய தயாரிப்புகளை களமிறக்குதல் மற்றும் சிறப்பு சலுகளை அறிவித்தல் ஆகியவற்றையும் நிறுவனம் செய்து வருகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையிலே மக்களை தன் வசம் ஈர்க்கும் வகையில் குறைந்த வட்டி விகிதம் மற்றும் முன்தொகை திட்டத்தை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








