அட போங்க புது வண்டி வாங்குற ஆசையே போய்டும் போலிருக்கு! ஹோண்டாவின் அதிரடி முடிவால் மக்கள் புலம்பல்!
ஹோண்டா நிறுவனம் எடுத்திருக்கும் அதிரடி முடிவால் ஹோண்டா இருசக்கர வாகன பிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மிகக் கடுமையாக உயர்ந்து வருகின்றது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இன்றைய (ஜூலை 7) தேதி நிலவரப்படி பெட்ரோல் விலை 31 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் 101.06 ரூபாய்க்கும், டீசல் விலை 15 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் 94.06 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ச்சியாக எரிபொருள் விலையுயர்ந்து வருவதனால் மக்கள் மிகக் கடுமையாக அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதிலும், தினசரி இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர் சொல்ல முடியா துயரங்களைச் சந்திக்க ஆரம்பித்திருக்கின்றனர். இந்த நிலையால், பலர் இருசக்கர வாகனங்களை ஒதுக்கிவிட்டு தற்போது சைக்கிள் பயன்பாட்டிற்கு களமிறங்கியிருக்கின்றனர்.

தொடர்ச்சியாக எரிபொருள் விலையுயர்ந்து வருவதனால் மக்கள் மிகக் கடுமையாக அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதிலும், தினசரி இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர் சொல்ல முடியா துயரங்களைச் சந்திக்க ஆரம்பித்திருக்கின்றனர். இந்த நிலையால், பலர் இருசக்கர வாகனங்களை ஒதுக்கிவிட்டு தற்போது சைக்கிள் பயன்பாட்டிற்கு களமிறங்கியிருக்கின்றனர்.

இந்த மாதிரியான சூழ்நிலையில் புதிய வாகனங்களை வாங்குவதற்கு ஆப்பு வைக்கும் வகையில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் புதிய வாகனங்களின் விலையை உயர்த்திய வண்ணம் இருக்கின்றன. அந்தவகையில், கார் உற்பத்தி நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ், மாருதி சுசுகி மற்றும் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் விலையுயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றன.

இதுமட்டுமின்றி, இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப்பும் விலையுயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தநிலையில், மேற்கூறிய நிறுவனங்களின் வரிசையில் தற்போது ஹோண்டாவும் இணைந்துள்ளது.

ஆமாங்க, ஹோண்டா இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் அதன் புகழ்வாய்ந்த டூ-வீலர்களின் விலையை உயர்த்தியிருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. ஆக்டிவா 6ஜி மற்றும் 125 தேர்வுகளின் விலையையே தற்போது நிறுவனம் உயர்த்தியுள்ளது.

முன்னதாக ஹோண்டா ஆக்டிவா 6ஜி ரூ. 69,479 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைத்து வந்தது. ஆனால், புதிய விலையுயர்வால் அது தற்போது ரூ. 70,716ஆக மாறியுள்ளது. இதேபோன்று, ஆக்டிவா 6ஜியின் லிமிடெட் எடிசன் மற்றும் ஆக்டிவா 125 ஆகியவற்றின் விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

முழுமையான விலை பட்டியலைக் கீழே காணலாம்:
- ஆக்டிவா 6ஜி எஸ்டிடி: புதிய விலை ரூ. 70,716 (பழைய விலை ரூ .69,479)
- ஆக்டிவா 6ஜி டிஎல்எக்ஸ்: புதிய விலை ரூ. 72,461 (பழைய விலை ரூ. 71,225)
- ஆக்டிவா 6ஜி லிமிடெட் எடிசன் எஸ்டிடி: புதிய விலை ரூ. 72,216 (பழைய விலை ரூ .70,979)
- ஆக்டிவா 6ஜி லிமிடெட் பதிப்பு டிஎல்எக்ஸ்: ரூ. 73,961 (பழைய விலை ரூ. 72,725)
- ஆக்டிவா 125 ஸ்டீல் / டிரம்: புதிய விலை ரூ. 75,084 (பழைய விலை ரூ. 74,120)
- ஆக்டிவா 125 அலாய் / டிரம்: புதிய விலை ரூ. 78,752 (பழைய விலை ரூ. 77,788)
- ஆக்டிவா 125 அலாய் / டிஸ்க்: புதிய விலை ரூ. 82,256 (பழைய விலை ரூ .81,293)

உற்பத்தி விலையுயர்வு காரணமாக இந்த விலையுயர்வைச் செய்து வருவதாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் புதிய வாகனங்களின் விலையை உயர்த்தி வருகின்றன. இதே காரணத்தைதான் ஹோண்டா நிறுவனமும் தெரிவித்திருக்கின்றது.

அப்டேட் (புதுப்பித்தல்) பணிகள் எதுவும் மேற்கொள்ளாமல் விலையுயர்வைச் செய்திருப்பது மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கின்றது. ஏற்கனவே, பெட்ரோல்-டீசல் விலையுயர்வு மக்களை வாட்டி வதைத்து வரும்நிலையில் புதிய வாகனங்களின் விலையும் உயர்ந்து வருவது மக்களை வேதனையில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரில் 109.51 சிசி திறனை வெளியேற்றக் கூடிய ஏர் கூல்டு எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 7.68 பிஎச்பி மற்றும் 8.79 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் 124 சிசி திறனை வெளிப்படுத்தக் கூடிய ஏர் கூல்டு எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 8.18 பிஎச்பி மற்றும் 10.3 என்எம் டார்க் ஆகியவற்றை வெளியேற்றும் திறன் கொண்டது.


Click it and Unblock the Notifications








