Just In
- 4 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 4 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 5 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 6 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
நடந்து போக பழகிக்க வேண்டியதுதான்... மக்களை புலம்ப வைத்த முன்னணி நிறுவனத்தின் அறிவிப்பு... என்னனு தெரியுமா?
முன்னணி நிறுவனத்தின் அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் விலை உயர்வை அறிவித்துள்ளது. இதன்படி இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஹோண்டா நிறுவனத்தின் அனைத்து மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையும் உயரவுள்ளது. வாகனங்களின் உற்பத்தி செலவு அதிகரித்து வரும் அதே நேரத்தில், எரிபொருள் விலையும் வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது.
இதனால் ஏற்படக்கூடிய சுமையில் சிறிய அளவை வாடிக்கையாளர்களின் தலையில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இறக்கவுள்ளது. இதன்படி ஹோண்டா நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலை 2 ஆயிரம் ரூபாய் வரை உயரவுள்ளது. இந்த விலை உயர்வு வரும் ஜூலை 3ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
ஹோண்டா நிறுவனம் தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் ஆக்டிவா, டியோ, க்ரேஸியா, ஹார்னெட் 2.0, எக்ஸ்பிளேடு, லிவோ, யூனிகார்ன், ஷைன், எஸ்பி 125 மற்றும் சிடி 110 உள்ளிட்ட பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. அதே நேரத்தில் தனது பிரீமியம் பிக்விங் டீலர்ஷிப்கள் வாயிலாக விலை உயர்ந்த பைக்குகளை ஹோண்டா விற்பனை செய்கிறது.
இதன்படி கோல்டுவிங், சிபி500 எக்ஸ், சிபி650 ஆர், சிபிஆர்650 ஆர், சிபி1000 ஆர், சிபிஆர்1000ஆர்ஆர்-ஆர் ஃபயர் பிளேடு, ஹைனெஸ் சிபி350 மற்றும் சிபி350 ஆர்எஸ் ஆகிய பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், ஹோண்டா ஹைனெஸ் சிபி350 கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்திய சந்தையில் இந்த பைக் வேகமாக பிரபலமாகி வருகிறது.
ராயல் என்பீல்டு மீட்டியோர் 350, ராயல் என்பீல்டு கிளாசிக் 350 உள்ளிட்ட பைக்குகள் உடன், ஹோண்டா ஹைனெஸ் சிபி350 போட்டியிட்டு வருகிறது. இதற்கிடையே ஹோண்டா தவிர இன்னும் பல்வேறு நிறுவனங்களும் வாகனங்களின் விலையை உயர்த்தி வருகின்றன. இதன்படி பெனெல்லி நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள்களின் விலையை உயர்த்தியுள்ளது.
இதுதவிர உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தனது இரு சக்கர வாகனங்களின் விலையை உயர்த்தவுள்ளது. ஹீரோ டூவீலர்களின் விலை 3 ஆயிரம் ரூபாய் வரை உயரவுள்ளது. இந்த விலை உயர்வு ஜூலை 1ம் தேதி (நாளை) முதல் அமலுக்கு வரவுள்ளது.
இதுதவிர மாருதி சுஸுகி நிறுவனமும் தனது கார்களின் விலையை உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது. நடப்பாண்டில் மூன்றாவது முறையாக மாருதி சுஸுகி நிறுவன கார்களின் விலை உயரவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. வாகன நிறுவனங்களின் இந்த விலை உயர்வு நடவடிக்கை வாடிக்கையாளர்களை கவலையடைய செய்துள்ளது.
ஏற்கனவே கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் வருவாய் இழப்பு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆகிய பிரச்னைகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நேரத்தில் வாகனங்களின் விலையும் உயரவுள்ளதால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
-
வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!