Just In
- 54 min ago மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- 1 hr ago நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- 2 hrs ago 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- 3 hrs ago இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
Don't Miss!
- News மோடியின் ரத்த அணுக்களில் "முஸ்லிம் வெறுப்பு".. இனி பாஜக அவ்ளோதான்.. கோபத்துடன் சொன்னது யார் பாருங்க
- Lifestyle எகிப்தியர்கள் ஏன் உலகின் சிறந்த நாகரீகமாக கருதப்படுகிறார்கள் தெரியுமா? இந்த 3 அதிசயங்களே அதற்கு சாட்சி!
- Technology சத்தியமா ரூ.11999 தான்.. 16GB ரேம், 1TB மெமரி, IP64 ரேட்டிங், 6000mAh பேட்டரி, 44W சார்ஜிங்.. VIVO வெறித்தனம்!
- Finance அமெரிக்காவுக்கு பிறக்கும் இந்திய நகை கடைகள்.. சின்ன கல்லு பெத்த லாபம்..!!
- Movies அச்சச்சோ.. ரசிகர் மரணம்.. ஓடிப்போய் குடும்பத்துக்கு ஆதரவு சொன்ன ஜெயம் ரவி
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
மீண்டும் பிரச்சனையா? சிபி350 பைக்குகளை திரும்ப அழைக்கும் ஹோண்டா!! ஆக்டிவா ஸ்கூட்டர்களும் தான்...
கடந்த மூன்று மாதங்களில் இரண்டாவது முறையாக ஹோண்டா டூ வீலர்ஸ் நிறுவனம் அதன் விற்கப்பட்ட ஹைனெஸ் சிபி350 பைக்குகளை மீண்டும் அழைத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
தயாரிப்பு வாகனங்களில் ஏற்படும் பிரச்சனைகளை கண்டறிந்தால் உடனே அவற்றை அழைத்து பழுது பார்க்கும் நடவடிக்கையை ஹோண்டா மேற்கொண்டு வருகிறது. இந்த வகையில் தான் சில மாதங்களுக்கு முன்பு ஹைனெஸ் சிபி350 பைக்குகள் திரும்ப அழைக்கப்பட்டன.
தற்போது மீண்டும் அழைக்கப்பட்டுள்ளன. ஆனால் இம்முறை இந்த ரெட்ரோ-ஸ்டைல் ரோட்ஸ்டர் மட்டுமின்றி எக்ஸ்ப்ளேட், ஹார்னெட் 2.0, ஆக்டிவா 5ஜி, ஆக்டிவா 6ஜி, ஆக்டிவா 125 மற்றும் சிபி ஷைன் பைக் உள்பட சிபி300ஆர் பைக்குகளும் திரும்ப அழைக்கப்பட்டுள்ளன.
இந்த ஹோண்டா இருசக்கர வாகனங்களில் 2019 நவம்பரில் இருந்து 2021 ஜனவரி வரையிலான காலக்கட்டத்தில் தயாரிக்கப்பட்டவை மட்டுமே திரும்ப அழைக்கப்படுகின்றன. இவற்றில் முன் ஃபோர்க்கில் பொருத்தப்படுகின்ற ஒளி பிரதிபலிபான்களில் பிரச்சனை இருப்பதை ஹோண்டா நிறுவனம் கண்டறிந்துள்ளது.
இதுகுறித்த இந்த ஜப்பானிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனத்தின் அறிக்கையில், இந்த பிரதிபலிப்பான்கள் தேவையான ஒளிமின்னழுத்த விதிகளில் இருந்து சற்று மாறுபடுகின்றன, இதன் விளைவாக போதிய ஒளி பிரதிபலிப்பு திறன் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் இந்த பழுதினை சரிசெய்ய வாகனத்தின் உட்புற இயந்திர பாகங்களில் கை வைக்க தேவை இருக்காது. பாதுகாப்பு ஒளி பிரதிப்பலிப்பானில் கண்டறியப்பட்டுள்ள இந்த குறையை இலவசமாக பழுது பார்த்து தரப்படும் எனவும் ஹோண்டா தெரிவித்துள்ளது.
இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கைகள் நடப்பு ஜூன் மாத துவக்கத்தில் இருந்தே ஆரம்பித்துவிட்டன. இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு அருகில் உள்ள ஹோண்டா டீலர்ஷிப் மையத்தினை அணுகவும்.
சிபி300ஆர் மற்றும் ஹைனெஸ் சிபி350 பைக்குகளை பிக்விங் அவுட்லெட்கள் மூலம் ஹோண்டா டூவீலர்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதனால் இந்த ஹோண்டா பைக்குகளின் உரிமையாளர்கள் தங்களது பைக்கும் இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கையில் உட்படுகிறதா என்பதை அறிய பிக்விங் அவுட்லெட்களை தொடர்பு கொள்ள வேண்டும்.
அல்லது, ஹோண்டா டூ வீலர்ஸின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தையும் தொடர்பு கொள்ளலாம். இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கையை பொறுத்தவரையில் வாகனத்தின் உத்தரவாத காலத்தை பொருட்படுத்த வேண்டாம்.
சிபி350 மட்டுமின்றி சிபி350 ஆர்எஸ் மோட்டார்சைக்கிளும் இந்தியாவில் விற்பனையில் உள்ளது. இவை இரண்டிலும் ஒரே 348.36சிசி சிங்கிள்-சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் தான் பொருத்தப்படுகிறது. ஆனால் இவற்றின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலைகள் முறையே ரூ.1.89 லட்சம் மற்றும் ரூ.1.96 லட்சமாக உள்ளன.
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
-
இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!
-
கேரளா கேரளாதான்யா! 100 வயசு கார் டிரைவரை பார்த்து மிரண்டு நிற்கும் மக்கள்! காருக்கே 50 வயசு ஆச்சுங்க!