குடை பயன்படுத்த கூடாது... மீறினா கடும் அபராதம்... காவல்துறை எச்சரிக்கை! இந்த விநோத தடை எங்கு தெரியுமா?

இந்தியாவின் ஓர் மாநிலத்தில் குடை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏன் இத்தகைய தடை, யாருக்கு இந்த தடை பொருந்தும் என்பது பற்றிய தகவலை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

குடை பயன்படுத்த கூடாது... மீறினா கடும் அபராதம்... காவல்துறை எச்சரிக்கை! இந்த விநோத தடை எங்கு தெரியுமா?

விபத்து மற்றும் வாகனங்கள் சார்ந்து நடைபெறும் குற்றச் சம்பவங்களைக் தவிர்க்கும் பொருட்டு பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒன்றிய அரசும், மாநில அரசும் இணைந்து இப்பணியில் ஈடுபட்டு வருகின்றன.

குடை பயன்படுத்த கூடாது... மீறினா கடும் அபராதம்... காவல்துறை எச்சரிக்கை! இந்த விநோத தடை எங்கு தெரியுமா?

பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கிலும் ஒன்றிய அரசு பல்வேறு புதிய திட்டங்களை நாட்டில் அமல்படுத்தி வருகின்றது. மாநில அரசுகள் சிலவும் தங்களின் சார்பாக போக்குவரத்து விதிகளில் இதற்காக பல்வேறு புதிய திருத்தங்களை மேற்கொண்டு வருகின்றன.

குடை பயன்படுத்த கூடாது... மீறினா கடும் அபராதம்... காவல்துறை எச்சரிக்கை! இந்த விநோத தடை எங்கு தெரியுமா?

இந்த நிலையில், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு குடையை பயன்படுத்த ஓர் மாநில அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது மழைக் காலம் ஆரம்பித்திருக்கின்றது. ஆகையால், வெளியில் பயணிப்போர் அவசியம் குடை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.

குடை பயன்படுத்த கூடாது... மீறினா கடும் அபராதம்... காவல்துறை எச்சரிக்கை! இந்த விநோத தடை எங்கு தெரியுமா?

இந்த மாதிரியான சூழ்நிலையில் வாகன ஓட்டிகள் குடை பயன்படுத்துவதற்கு தடை விதித்திருப்பது பொதுமக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. கேரள மாநில போக்குவரத்துத்துறை கமிஷனரே இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றார்.

குடை பயன்படுத்த கூடாது... மீறினா கடும் அபராதம்... காவல்துறை எச்சரிக்கை! இந்த விநோத தடை எங்கு தெரியுமா?

இந்த தடை உத்தரவானது இருசக்கர வாகனத்தில் பயணிப்போருக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இருசக்கர வாகனத்தை இயக்கிக் கொண்டே ஒரு சிலர் குடையைப் பயன்படுத்துவதாக எழும்பிய குற்றச்சாட்டை அடுத்து இந்த தடை உத்தரவை கேரளா மோட்டார் வாகனத்துறை வெளியிட்டிருக்கின்றது.

குடை பயன்படுத்த கூடாது... மீறினா கடும் அபராதம்... காவல்துறை எச்சரிக்கை! இந்த விநோத தடை எங்கு தெரியுமா?

இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது குடையைப் பயன்படுத்துவது பெரும் ஆபத்தை விளைவிக்கும். மழையின்போது அதிக வேகத்தில் காற்று வீசக்கூடம், அந்த நேரத்தில் குடையை பயன்படுத்தினால் அது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். உதாரணமாக, மழையின்போது சில நேரங்களில் மணிக்கு 50 கிமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் காற்று வீசக் கூடும்.

குடை பயன்படுத்த கூடாது... மீறினா கடும் அபராதம்... காவல்துறை எச்சரிக்கை! இந்த விநோத தடை எங்கு தெரியுமா?

அந்த நேரத்தில் இருசக்கர வாகனம் மணிக்கு 40 கிமீ வேகத்தில் செல்கின்றது என்றால், காற்றின் வேகத்துடன் சேர்ந்து அது 80க்கும் அதிகமான வேகத்தில் செல்ல நேரிடும். இதன் விளைவாக கட்டுப்பாடை இழத்தல் மற்றும் பேராபத்தை சந்தித்தல் போன்ற நிலை உருவாகும். இதுவே, காற்று எதிர் திசையில் வீசினால், குடையினால் திசைமாற நேரிடும். இதுவும் கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்தும்.

குடை பயன்படுத்த கூடாது... மீறினா கடும் அபராதம்... காவல்துறை எச்சரிக்கை! இந்த விநோத தடை எங்கு தெரியுமா?

இதுபோன்ற ஆபத்தான சூழ்நிலை நிலவுகின்ற காரணத்தினாலேயே கேரளா மோட்டார் வாகனத்துறை அதிரடியாக, இருசக்கர வாகன ஓட்டிகள் குடையை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த காலங்களில் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருக்கும்போது குடையை விரித்ததால் பல விபத்து சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன.

குடை பயன்படுத்த கூடாது... மீறினா கடும் அபராதம்... காவல்துறை எச்சரிக்கை! இந்த விநோத தடை எங்கு தெரியுமா?

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டே குடைக்கு தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. அதேநேரத்தில், மழை நேரத்தில் இருசக்கர வாகனத்தில் பயணிப்பது பாதுகாப்பற்றது என்கிற காரணத்தினால் பாதுகாப்பான உடை மற்றும் கவசங்களை அணிந்து செல்லும்படி அறிவுறுத்தப்படுகின்றது.

குடை பயன்படுத்த கூடாது... மீறினா கடும் அபராதம்... காவல்துறை எச்சரிக்கை! இந்த விநோத தடை எங்கு தெரியுமா?

மழை நேரங்களில் சாலைகள் ஈரப்பதத்துடன் இருக்கும். இது டயருக்கும், சாலைக்கும் இருக்கும் உராய்வை தடுக்கும். குறிப்பிட்டு கூற வேண்டுமானால், ஈரபதத்துடன் இருக்கும் சாலை பிடிமானம் குறைந்து, அதிக வழு வழுப்புடன் காட்சியளிக்கும். ஆகையால், மழை காலங்களில் அதிக கவனத்துடன் பயணிப்பது மிகவும் சிறந்தது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kerala mvd banned using umbrellas on two wheelers
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X