Just In
- 3 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 3 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 4 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 5 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஹெல்மெட், இன்சூரன்ஸ் வரிசையில் இணைந்த கண்ணாடி! இது இல்லனா வாரண்டி க்ளைம் பண்ண முடியாது!
ஹெல்மெட், இன்சூரன்ஸ் போல இனி இருசக்கர வாகனங்களில் கண்ணாடி இருப்பதும் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் அரங்கேறும் பெரும்பாலான விபத்து சம்பவங்கள் இருசக்கர வாகனங்களை சார்ந்தே நடைபெறுவதாக ஓர் அறிவிக்கப்படாத குற்றச்சாட்டு நாடு முழுவதும் உலா வந்த வண்ணம் இருக்கின்றது. இதற்கு இருசக்கர வாகன ஓட்டிகளின் ஒழுக்கமற்ற இயக்குதலே முக்கிய காரணமாகும்.
ஆமாங்க, ஒரு சிலரை தவிரத்து பெரும்பாலான இருசக்கர வாகன ஓட்டிகள் வாகன போக்குவரத்து விதிகள் என்றால் என்ன என்று கேட்குமளவிற்கு விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வற்றவர்களாக இருக்கின்றனர். சிக்னலை மீறுவது, ஒரு வழி (நோ என்ட்ரீ) பாதையில் நுழைவது, பாதுகாப்பு கவசம் அணியாமல் பயணிப்பது போன்ற பல்வேறு விதிமீறல்களை அவர்கள் செய்கின்றனர்.
இதன் விளைவாகவே அதிக விபத்துகள் அரங்கேறுகின்றன. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் போக்குவரத்து விதிகளை மீறும் இருசக்கர வாகன ஓட்டிகளினாலேயே அதிகளவில் விபத்து சம்பவங்கள் ஒவ்வொரு நாளும் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில்தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட மனுவின் அடிப்படையில் ஓர் புதிய உத்தரவு இருசக்கர வாகனங்கள் சார்ந்து வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது, இருசக்கர வாகனங்களில் கட்டாயம் கண்ணாடி இருக்க வேண்டும் என்ற உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. கண்ணாடிகளை அகற்றுவோர்க்கு வாரண்டியை ரத்து செய்யவும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. வளைவுகள் மற்றும் திருப்பத்தின்போது உதவும் வகையில் அனைத்து வாகனங்களிலும் கண்ணாடிகள் வழங்கப்படுகின்றன.
ஆனால், இதனை ஸ்டைலுக்காக ஒரு சிலர் நீக்கிவிடுகின்றனர். இதன் விளைவாக திருப்பங்கள் மற்றும் வளைவுகளில் கண்ணாடி இல்லா இருசக்கர வாகன ஓட்டிகள் திரும்பி பார்த்து வாகனங்களை திருப்பும் நிலை நிலவுகின்றது. இந்த மாதிரியான நேரங்களிலேயே அதிக விபத்துகள் அரங்கேறுவதாகக் கூறப்படுகின்றது.
இத்தகைய நிலையை போக்க வேண்டும் என திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், கண்ணாடிகள் அகற்றப்பட்ட இருசக்கர வாகனங்களினாலேயே அதிக விபத்துகள் அரங்கேறுவதாக குற்றாச்சாட்டி இருந்தார்.
கண்ணாடி இல்லாத இருசக்கர வாகன ஓட்டிகள் நினைத்த இடத்தில், நினைத்த பக்கத்தில் திரும்புவதே விபத்துகளுக்கு முக்கிய காரணம் என்றும், ஆகையால், கண்ணாடிகளை கட்டாயமாக்க வேண்டும் என்றும் அம்மனுவில் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து, கண்ணாடி இல்லாமல் இயங்கும் இருசக்கர வாகனங்களுக்கு அதிகபட்சமாக ரூ. 500 வரை அபராதம் விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அவர் முன் வைத்திருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, இருசக்கர வாகனங்களில் கண்ணாடிகள் பொருத்த வேண்டும் என்ற விதியை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என தமிழக போக்குவரத்துத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டனர்.
தொடர்ந்து, டூ-வீலர்களில் இருக்கும் கண்ணாடிகளை அகற்றினால் அந்த வாகனத்தின் உத்தரவாதம் ரத்து செய்யப்படும் என தனது வாடிக்கையாளர்களை வாகன உற்பத்தியாளர்கள் எச்சரிக்க அறிவுறுத்துமாறு போக்குவரத்து ஆணையருக்கு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி தேவைப்பட்டால் இதற்காக புதிய வாரண்டி விதிகளை உருவாக்கிக்கொள்ளவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு இருசக்கர வாகன ஓட்டிகளின் வயிற்றில் புளியைக் கரைக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, வீணாக ஸ்டைல் என கூறிக் கொண்டு கண்ணாடிகளை அகற்றிவிட்டு சுற்றி திரியும் இருசக்கர வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை இந்த உத்தரவு ஏற்படுத்தியுள்ளது.
ஹெல்மெட் அணிவது, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாஸ்க் அணிவது ஆகியவற்றின் வரிசையில் தற்போது வாகனங்களில் கண்ணாடி இருப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே மிக விரைவில் போலீஸார் அதிக கண்டிப்புடன் இந்த விஷயத்தில் செயல்பட இருக்கின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!