பாண்டா கரடியை முதுகில் சுமந்து சென்ற டெலிவரி பாய்... ஏன் தெரியுமா? காரணத்தை கேட்டு மிரண்டுபோன மலேசியர்கள்!!
ஃபுட் பாண்டா டெலிவரி பாய் ஒருவர் தனது முதுகில் பாண்டா கரடியை சுமந்து சென்ற சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தின் உண்மை தகவல் என்பது பற்றிய தகவலை இப்பதிவில் காணலாம்.

பண்டா கரடிகளை பிடிக்காதவர்கள் நிச்சயம் யாரும் இருக்க மாட்டார்கள். அதன் விளையாட்டையும், உண்ணும் அழகையும் ரசிப்பதற்கென்றே பலர் இருக்கின்றனர். இந்த பாண்டாக்களை சீனாவில் மட்டுமே காண முடியும். இது ஓர் பாலூட்டி விலங்கினம் ஆகு். சோம்பேறி தனத்திற்கு பெயர்போன விலங்குகளில் இதுவும் ஒன்று. ஆனால், ரசிகர்களை அதிகம் கொண்ட விலங்கு இதுவாகும்.

இத்தகைய ஓர் பிராணியை தனது செல்ல பிராணியாக தேர்வு செய்த ஓர் இளைஞரே தனது டெலிவரி பயணத்தின் முதுகில் சுமந்தவாறு பயணித்திருக்கின்றார். இதுகுறித்த புகைப்படங்களை அவரே, அவரது சமூக வலை தளங்களில் பதிவிட்டிருக்கின்றார்.

ஃபுட் பாண்டா எனும் நிறுவனத்தின் டெலிவரி பார்ட்னராக பணி புரிபவர் உசைர். இவர் மலேசியா நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். இவரே தனது செல்லப் பிராணி பாண்டாவை முதுகில் சுமந்து சென்றவர். ஃபுட் பாண்டா நிறுவனத்தை விட்டு வெளியேற இருப்பதாக மிக சமீபத்தில் அறிவிப்பு கடிதத்தை இவர் வழங்கியிருக்கின்றனர்.

இதன்படி, கடந்த 11ம் தேதி இவரின் கடைசி பணி நாளாகும். இந்த நாளையே ருசிகரமானதாக மாற்றும் வகையில் தனது பாண்டாவுடன் பயணித்திருக்கின்றார். குறிப்பாக, கடைசி நாளை மறக்க முடியாத நாளாக மாற்றும் நோக்கிலேயே இத்தகைய விநோத செயலை அவர் மேற்கொண்டிருக்கின்றார்.

இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்ததாவது, "கடைசி நாள், நான் வெளியேறுவதற்கு முன்பு இந்த சோம்பேறி சிறுவனை அழைத்து வந்தேன்" என கூறியுள்ளார்.

இந்த பதிவையும், புகைப்படங்களையும் பார்த்த பலர் இதனை நம்பியேவிட்டனர். உண்மை என்னவென்றால், இளைஞரின் முதுகில் இருப்பது நிஜ பாண்டா கரடி அல்ல. ஆமாங், இந்த பாண்டா கரடியை தனது ஃபோட்டோஷாப் திறன் வாயிலாகவே அவர் தன்னுடன் இருக்குமாறு வடிவமைத்திருக்கின்றார்.

பாண்டா கரடியைத் தவிர பிற அனைத்தும் உண்மை ஆகும். அதாவது, ஃபுட் பாண்டாவின் டெலிவரி பார்ட்னர் மற்றும் பணியின் கடைசி ஆகியவை நிஜமானவை ஆகும். இந்த நிலையிலேயே, தனது கடைசி பணி நாளை சிறப்பிக்கும் வகையில் ஃபோட்டோஷாப் வாயிலாக கரடி அவர் தன்னுடன் கொண்டு வந்திருக்கின்றனர்.

மிக தத்ரூபமாக அமைந்திருக்கும் இப்புகைப்படங்கள் பார்வையாளர்களை இது உண்மை சம்பவம் என்றே நம்ப வைத்துவிட்டது. ஆனால், இதனை தன்னுடைய மற்றுமொரு பதிவின் வாயிலாகவே உடைத்து நொருக்கிவிட்டார் உசைர். இப்புகைப்படம் தற்போது 46 ஆயிரம் லைக்குகள் மற்றும் 15,900 ரீடுவீட் என மிக ஸ்பீடாக வைரலாகி வருகின்றது.

உண்மையில் இதுபோன்ற பாண்டா போன்ற அரிய வகை விலங்குகளை பாதுகாப்பாற்ற முறையில் வாகனத்தில் எடுத்து சென்றிருந்தால் அது மிகப்பெரிய குற்றமாகும். வன விலங்குகள் மட்டுமின்றி எந்தவொரு விலங்குகளையும் பாதுகாப்பு இன்றி வாகனங்களில் எடுத்துச் சென்றால் போலீஸாரின் நடவடிக்கைகளுக்கு ஆளாகக்கூடும் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








