Just In
- 23 min ago சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- 5 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 5 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 6 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஒரே நேரத்தில் 20 சூப்பர் பைக் உரிமைதாரர்களுக்கு செல்லாண்... லிஸ்ட்லையே இல்லாத காரணத்தை கூறிய போலீஸ்!!
ஒரே நேரத்தில் இருபது சூப்பர் பைக் உரிமையாளர்களுக்கு அபராத செல்லாண் வழங்கிய போலீஸார் லிஸ்ட்லையே இல்லாத ஓர் காரணத்தை கூறியிருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
சில நேரங்களில் காவல்துறையில் பணியாற்றும் ஒரு சில அதிகாரிகள் கார்பரேட் நிறுவன ஊழியர்களைப் போல் செயல்படுகின்றனர். வாகனங்களுக்கு அபராதம் விதிப்பது தொடங்கி சாலையோர கடைகளுக்கு பெட்டி கேஸ் போடுவது வரை டார்கெட் வைத்து அவர்கள் செயல்படுவதை நம்மால் காண முடிகின்றது.
இதனை உறுதி செய்யும் வகையில் ஓர் சம்பவம் புனே-பெங்களூரு நெடுஞ்சாலையில் அரங்கேறியிருக்கின்றது. இதுகுறித்த தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். இந்தியாவில் அண்மைக் காலங்களாக சூப்பர் பைக் பயனர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
சூப்பர் பைக்குகளைப் பயன்படுத்தும் இளைஞர்கள் குழுவாக கூடி வார இறுதி நாட்களை நெடுந்தூர பயணத்தின் வாயிலாக எஞ்ஜாய் செய்து வருகின்றனர். அந்தவகையில், 20க்கும் மேற்பட்ட சூப்பர் பைக் உரிமையாளர் வார இறுதி நாள் பயணத்தை மேற்கொள்ளும்போது மும்பை நகர போலீஸாரால் அபராத செல்லாணைப் பெற்றிருக்கின்றனர்.
இந்த அபராத செல்லாணை வழங்கியதற்காக போலீஸார் கூறியிருக்கும் காரணம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புனே-பெங்களூரு நெடுஞ்சாலையில் சூப்பர் பைக்குகள் பயணிக்க அனுமதி இல்லை என்று அவர்கள் கூறியிருக்கின்றனர்.
இதற்காக அபராதமாக ரூ. 1000 அவர்களிடத்தில் இருந்து வசூலிக்கப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு பைக்கரிடமும் இருந்து இவ்வாறு ரூ. 1000 என 20க்கும் மேற்பட்ட சூப்பர் பைக் உரிமையாளர்களைக் கொண்ட அக்குழுவிடம் போலீஸ் மிக கராராக அபராதத்தை வசூலித்திருக்கின்றது.
சூப்பர் பைக்குகள், பெங்களூரு-புனே நெடுஞ்சாலையில் பயணிக்கக் கூடாது என விதிக்கப்பட்டிருக்கும் தடை உத்தரவை காண்பிக்குமாறு சூப்பர் பைக் உரிமையாளர்கள் போலீஸிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால், காவல்துறை தரப்பில் இருந்து எந்த பதிலும். இல்லை ஆதாரம் இல்லா வாய்வழி அறிவிப்பை மட்டுமே அவர்கள் கூறியிருக்கின்றனர்.
தொடர்ந்து, "சூப்பர் பைக்கர்களால் அருகில் இருக்கும் கிராமவாசிகள் அதிகம் பிரச்னைகளைச் சந்திக்கின்றனர். சமீபத்தில்கூட சூப்பர் பைக் ஒன்று ஏற்படுத்திய விபத்தால் அப்பாவி கிராமவாசி ஒருவர் கொல்லப்பட்டதாக" காவல்துறை மூத்தி அதிகாரி ஒருவர் சூப்பர் பைக் குழுவிடும் கூறினார்.
இவ்வாறு சில முரண்பாடான கருத்துகளையே காவல்துறையினர் அபராதம் வழங்குவதற்கு காரணமாக கூறினர். தொடர்ந்து, சூப்பர் பைக்குகள் செல்ல வேறு ஏதேனும் பாதை இருக்கின்றதா? என கேட்கப்பட்டதற்கு, அதை நீங்கள் அரசாங்கத்திடம்தான் கேட்க வேண்டும் எனவும் அந்த காவல்துறை மூத்த அதிகாரி பதில் கூறினார்.
போலீஸாரின் இந்த முரண்பாடான செயல்பாடுகுறித்த வீடியோவை அமே டில்லூ எனும் தளம் வெளியிட்டுள்ளது. மிகவும் ஜாலியாக மேற்கொண்ட வார இறுதி பயணம் போலீஸாரின் நடவடிக்கையால் கசப்பான அனுபவமாக ரைடர்களுக்கு மாறியிருக்கின்றது.
Image Courtesy: Amey Tilloo
பொதுவாக, சூப்பர் பைக் ரைடர்கள் என்றாலே அதிக வேகத்தில் பயணிப்பவர்கள், குழுக்களிடையே ரேஸ் செய்துகொள்வார்கள் என்பதுபோன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலவிய வண்ணம் இருக்கின்றன. இதுமாதிரியான எந்தவொரு காரணத்தையும் முன் வைக்காமல் சூப்பர் பைக்குகள் செல்லவே தடை விதிக்கப்பட்டுள்ளது என போலீஸார் புதுமையான காரணத்தை கூறியிருப்பது சூப்பர் பைக் பயனர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!