முதன்முறையாக கேமிரா கண்ணில் சிக்கிய கேடிஎம் பைக்! என்ன மாடலா இருக்கும்? யோசிக்காதீங்க நீங்க எதிர்பார்த்ததுதான்
கேடிஎம் நிறுவனத்தின் விரைவில் அறிமுகமாக இருக்கும் பைக் ஒன்று சாலை பரிசோதனை ஓட்டத்தின்போது கேமிராவின் கண்களில் சிக்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

கேடிஎம் நிறுவனம் அதன் ஆர்சி வரிசையில் விற்பனைக்குக் கிடைக்கும் பைக்குகளை அடுத்த தலைமுறை மாடலாக அப்டேட் செய்து (உருவாக்கி) வருவதாக அண்மைக் காலங்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால், தற்போது தற்போது ஆர்சி குடும்பத்தில் விற்பனைக்குக் கிடைக்கும் ஆர்சி 125, ஆர்சி 200 மற்றும் ஆர்சி 390 ஆகிய மாடல் பைக்குகள் புதுப்பொலிவு பெற்ற வசதிகளுடன் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில் முழுமையாக மறைக்கப்பட்டநிலையில் கேடிஎம் நிறுவனத்தின் புதுமுக பைக் ஒன்று இந்திய சாலையில் வலம் வருவதை பத்திரிக்கையாளர் ஒரு கண்டிருக்கின்றார். அதனை அவரது கேமிரா வாயிலாக புகைப்படம் ஒன்றையும் எடுத்திருக்கின்றனர். இருசக்கர வாகனம் முழுமையாக மறைப்புகளைச் சுமந்தபடி இருந்திருந்தாலும், அவற்றை உற்று நோக்கு பார்வையுடன் பார்த்ததில் புதிய தலைமுறையாக மாறியிருக்கும் கேடிஎம் ஆர்சி குடும்பத்தைச் சார்ந்த பைக் என்பது தெளிவாக தெரிகின்றது.

ஆனால், என்ன மாடல் என்பதுதான் தெளிவாக தெரியவில்லை. இதனை ஆர்சி200 என்றும், ஆர்சி 125 என்றும் கூறுகின்றனர். மறைப்புகள் அதிகமாக இருக்கின்றன காரணத்தினால் எங்களால் இதனை துள்ளியமாக கூற முடியவில்லை. இருப்பினும், இவை இரண்டில் ஏதோ ஓர் மாடலாக மட்டுமே இப்பைக் இருக்க முடியும் என உறுதியாக எங்களால் கூற முடியும். இந்த புதுப்பிக்கப்பட்ட பைக் மாடல் இந்திய சாலையில் இதுபோன்று வலம் வருவது இதுவே முதல் முறையாகும்.

மேலும், கேமிராவின் கண்களில் சிக்குவதும் இதுவே முதல் முறையாகும். புதுப்பிக்கப்பட்ட பைக்கை இந்திய சாலையில் வைத்து நிறுவனம் தீவிர பல பரீட்சையில் ஈடுபடுத்தி வருகின்றது. அவ்வாறு ஆய்வு மேற்கொள்ளும்போதே இப்பைக் பத்திரிக்கையாளர்களின் கேமிராவின் கண்களில் சிக்கியிருக்கின்றது.

இந்தியாவைப் போலவே கேடிஎம் நிறுவனம் அண்மையில் ஐரோப்பிய நாட்டிலும் இந்த முன்மாதிரி மாடல்களை பல பரீட்சையில் ஈடுபடுத்தியது. தொடர்ச்சியாக சாலை இயக்கம்குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன. இந்தநிலையிலேயே இந்தியாவில் தற்போது பைக்குகளின் சாலை இயக்கம்குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஐரோப்பியாவில் முன்னோட்டம் செய்யப்பட்டது கேடிஎம் ஆர்சி390 பைக்காகும். இதற்கு இந்தியாவில் முன்னோட்டத்திற்கு ஈடுபடுத்திய பைக்கிற்கும் பல்வேறு வித்தியாசங்கள் தென்படுகின்றன. இதனடிப்படையிலேயே இந்த முன்மாதிரி மாடல் ஆர்சி 200 அல்லது ஆர்சி 125-ஆக இருக்க வேண்டும் என யூகிக்கப்படுகின்றது. இரு பைக்குகளுக்கும் இடையே பெரியளவில் வித்தியாசம் இருக்காதும் என்பதானலயே இந்த குழப்பம் நீடிக்கின்றது.

தற்போது சாலை பல பரீட்சை வரை இந்த பைக் வந்திருப்பதால், அடுத்தது பைக்கின் அறிமுகம்தான் என்பதை எண்ணி கேடிஎம் இருசக்கர வாகன பிரியர்களல் மிகுந்த உற்சாகத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். இந்த புதிய தலைமுறை இந்தாண்டிற்குள்ளாகவே விற்பனைக்கு வந்துவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுகுறித்த உறுதியான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

Source: Rushlane
அதேசமயம், பைக்கில் என்னென்ன மாற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்பது பற்றிய தகவலையும் நிறுவனம் தற்போதும் வெளியிடாமல் இருக்கின்றது. இருப்பினும், புதிய தலைமுறை வடிவமைப்பை இந்த வாகனம் பெற்றிருப்பதால் இதன் ஸ்டைல் இன்னும் ஸ்போர்டி தோற்றத்தில் இருக்கும் என இளைஞர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








