Just In
- 2 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 2 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 3 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 4 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இளைஞரையும், விலையுயர்ந்த பைக்கையும் கொத்தாக தூக்கிய போலீஸ்... சொந்த செலவில் சூனியம் வச்சுக்கிட்டாரு... வீடியோ!
விலையுயர்ந்த பைக்கையும், அதன் உரிமையாளரையும் காவல்துறையினர் கொத்தாக தூக்கியிருக்கின்றனர். இதற்கு காரணம் இளைஞர் வெளியிட்ட வீடியோதான் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த முழு தகவலையும் கீழே காணலாம்.
அண்மைக் காலங்களாக இந்தியாவில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக மிக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. விபத்துகளுக்கு வித்திடும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக விதிமீறல்கள் இருக்கின்றன. எனவேதான் இதனை முற்றிலும் ஒழித்துக்கட்டும் விதமாக மிகக் கடுமையான நடவடிக்கைகளை காவல்துறையினர் நாடு முழுவதிலும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சமூக வலைதளத்தில் வைரலாகிய வீடியோவை அடிப்படையாகக் கொண்டு இளைஞர் ஒருவர்மீது போலீஸார் மிக கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவிலேயே இந்த சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.
தலைநகர் டெல்லியில் உள்ள கிரிஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பேந்நதிர சிங். இவர் தற்போது நொய்டாவில் வசதித்து வருகின்றார். இவரே தனது இருசக்கர வாகனத்தை பொதுவெளியில் வாகன ஸ்டண்ட் ஈடுபட்டவர் ஆவார். வாகனம் மீதும், வாகனங்களை இயக்குவதிலும் அதிகம் ஆர்வம் கொண்டவரே புஷ்பேந்திர சிங். இதுமட்டுமின்றி, வாகனம் சார்ந்து பல்வேறு சாகசங்களை நிகழ்த்தும் திறன் கொண்டவராகவும் இவர் இருக்கின்றார்.
அந்தவகையில், நொய்டாவின் முக்கியமான சாலைகளில் ஒன்றான செக்டார் 62 சாலையில் இவர் வீலிங் செய்து ஸ்டண்ட் மேற்கொண்டதாகக் கூறப்படுகின்றது. இதனடிப்படையிலேயே காவல்துறையினர் புஷ்பேந்திர சிங்கை கைது செய்திருக்கின்றனர்.
பொதுவாக, வாகன ஸ்டண்டில் ஈடுபடுவதே குற்றம் என இந்திய போக்குவரத்து சட்டம் கூறுகின்றது. குறிப்பாக, பொது சாலையில் இது அறவே கூடாது என்பது முக்கிய விதியாகும். இவ்விரு விதிகளையும்தான் புஷ்பேந்திர சிங் உடைத்தெறிந்திருக்கின்றார். இதற்கான சன்மானமாக தற்போது வழக்கு பதிவு மற்றும் வாகன பறிமுதலை அவர் சந்தித்திருக்கின்றார்.
புஷ்பேந்திர சிங் பயன்படுத்தியது கேடிஎம் நிறுவனத்தின் விலையுயர்ந்த ட்யூக் பைக் என கூறப்படுகின்றது. ஸ்டண்டில் ஈடுபட்டதன் காரணத்தினால் இப்பைக்கையும் நொய்டா போலீஸார் தற்போது பறிமுதல் செய்திருக்கின்றனர். புஷ்பேந்திர சிங் போலீஸாரிடத்தில் சிக்குவதற்கு முக்கிய காரணம் அவர் வெளியிட்ட வீடியோதான்.
ஆமாங்க, தனது ஸ்டண்ட்குறித்த காட்சிகளை புஷ்பேந்திர சிங், அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டதே போலீஸாரிடத்தில் அவர் சிக்க காரணமாக அமைந்துள்ளது. இந்த வீடியோ அவரது நண்பர்கள் மற்றும் பிற நெட்டிசன்கள் வாயிலாக அதிகம் பகிரப்பட்டுள்ளது. இந்தநிலையில், மாநில காவல்துறையினர்களின் கண்களில் அடிப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்தே, பிற இளைஞர்கள் இதுமாதிரியான சாகச சம்பவங்களில் ஈடுபடக் கூடாது என்பதற்கு முன்னுதாரணமாக, வைரலாகிய வீடியோவை அடிப்படையாகக் கொண்டு இளைஞர்மீது போலீஸார் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். இளைஞரை போலீஸார் கைது செய்திருப்பதாக மட்டுமே தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பது பற்றிய விபரம் வெளியாகவில்லை.
கவனிக்க வேண்டயது.
பொதுசாலையில் இதுமாதிரியான ஸ்டண்டுகளில் ஈடுபடும்போதே போலீஸார் வாகன ஓட்டிகள் மீது மிகக் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்கின்றனர். அதேசமயம், அங்கீகரிக்கப்பட்ட ரேஸ் தளங்கள் மற்றும் பிற தனியார் பகுதிகளில் இதுமாதிரியான ஸ்டண்டுகளில் ஈடுபட தடையில்லை என்பது நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகையால், பொதுவெளியில் நமக்கும், பிறருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் ஸ்டண்ட் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
காருக்குள் பறக்கும் வாகனம்.. சாலையில் ஓட்டிக்கலாம்.. தேவைப்பட்டால் வானிலும் பறந்துக்கலாம்!
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!