Just In
- 34 min ago குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- 1 hr ago வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- 1 hr ago பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!
- 2 hrs ago ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
Don't Miss!
- News ம்ம்.. என்னோட 90 நிமிஷ பேச்சை கேட்டு காங்கிரஸ் கூட்டணியே பீதியாகிபோய் கிடக்கு.. பெருமிதப்படும் மோடி
- Lifestyle இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Movies Actor Vikram: விக்ரம் படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்.. அறிவித்த படக்குழு!
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கமிஷனர் உத்தரவு... ராயல் என்பீல்டு பைக்கை மட்டும் மடக்கிய போலீஸ்... எவ்ளோ கலெக்ஷன் பண்ணியிருக்காங்க தெரியுமா?
இந்தியாவின் குறிப்பிட்ட ஓர் நகரத்தில் காவல்துறை ஆணையர் வழங்கிய உத்தரவின்பேரில் ராயல் என்பீல்டு பைக் பயனர்களை மட்டும் தேடி பிடித்து போலீஸார் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
இந்திய வாகன உரிமையாளர்கள் மத்தியில் வாகன மாடிஃபிகேஷன் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இது மோட்டார் வாகன சட்டத்தின்படி விதிமீறல் செயலாகும். எனவேதான் அண்மைக் காலங்களாக காவல்துறையினர் இந்த விதிமீறலுக்கு எதிராக போர் கொடி தூக்க ஆரம்பித்திருக்கின்றனர்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் மஹாராஷ்டிரா மாநிலத்தின் குறிப்பிட்ட ஓர் நகரத்தில் போலீஸார் வாகன மாடிஃபிகேஷனுக்கு எதிராக களமிறங்கி அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றனர். குறிப்பாக, ராயல் என்பீல்டு பயனர்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கையின்மூலம் 30 லட்ச ரூபாய் வரை அபராதத்தைப் பெற்றிருக்கின்றனர்.
மஹாராஷ்டிரா மாநிலத்தின் முக்கியமான நகரங்களில் பிம்ப்ரி-சின்ச்வாட்-ம் ஒன்று. இந்த நகரத்தின் காவல்துறை ஆணையர் அண்மையில் ஓர் சுற்றறிக்கை அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து காவல்நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தார். அந்த அறிவிப்பாணையில், வாகன மாடிஃபிகேஷனுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறப்பட்டிருந்தது.
குறிப்பாக, சந்தைக்கு பிறகான சைலென்சர்களைப் பயன்படுத்தும் ராயல் என்பீல்டு பயனர்களுக்கு எதிராக மிக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த உத்தரவை அடுத்தே போலீஸார், ஆஃப்டர் மார்க்கெட் அணிகலன்களைக் கொண்டிருந்த வாகனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.
இதன்படி சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான ராயல் என்பீல்டு பைக் பயனர்களுக்கு போலீஸார் அபராத செல்லாண் வழங்கியிருக்கின்றனர். இவர்களில் அதிகப்படியானோர் சந்தைக்கு பிறகான எக்சாஸ்ட் சிஸ்டத்தை (சைலென்சர்) பயன்படுத்தியிருந்ததாகக் கூறப்படுகின்றது. இதனடிப்படையிலேயே அவர்களுக்கான அபராத செல்லாண் வழங்கப்பட்டது.
கடந்த நான்கு மாதங்களாக நடைபெற்ற நடவடிக்கையின் வாயிலாகவே 3 ஆயிரம் வரையிலான ராயல் என்பீல்டு பைக் உரிமையாளர்கள் விதிமீறலில் ஈடுபடுவது கண்டறியப்பட்டிருக்கின்றது. இதில், ஒவ்வொருத்தரிடமும் ரூ. 1,000 வீதம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதுதவிர வேறு ஏதேனும் மோட்டார்சைக்கிளை போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனரா என்பது பற்றிய தகவல் கிடைக்கவில்லை.
அதேசமயம், முதல் 25 நாளில் மட்டும் 908 ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களைப் பயன்படுத்தி வந்த ராயல் என்பீல்டு பைக் பயனர்களைத் தாங்கள் கண்டறிந்ததாகவும், இதன் பின்னரே பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு மற்ற விதிமீறல் ராயல் என்பீல்டு பைக் உரிமையாளர்களைத் தாங்கள் களையெடுத்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் மட்டுமில்லைங்க கேரளா மற்றும் பிற இந்திய மாநிலங்களிலும் வாகன மாடிஃபிகேஷனுக்கு எதிராக போலீஸார் போர் தூக்கி வருகின்றனர். அந்தவகையில், அண்மையில் போலீஸார் கராஜில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதிகளவு உருமாற்றம் செய்யப்பட்ட ஓர் வாகனத்தை வீடு தேடி சென்று பறிமுதல் செய்தனர்.
இதுபோன்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வாகன மாடிஃபேகஷனுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையிலேயே பிம்ப்ரி-சின்ச்வாட் நகர காவல் ஆணையர் வழங்கிய உத்தரவின்பேரில் போலீஸார் ராயல் என்பீல்டு பயனர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.
குறிப்பு: புகைப்படங்கள் சில உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை ஆகும்.
-
நானோ காரை நமக்கு தெரியும்! ஆனா இது அது கிடையாது... டாடா உருவாக்கிய இந்த கார் கடைசி வர வெளியே வராமல் போய்டுச்சே
-
ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கிற்கு டிமாண்ட் அதிகமாகிட்டே போகுது!! இந்தியாவின் தேசிய பைக் என சொல்லலாம்!
-
ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!