Just In
- 16 min ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 1 hr ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- 7 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 7 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
Don't Miss!
- News இதுதான் நம்ம தமிழ்நாடு.. மூக்கு மேல் விரல் வைத்த ஈரோடு.. புது டிரஸ்ஸில்.. யாரிந்த 3 பெண்கள்.. சபாஷ்
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
35 நகரங்களுக்கு சந்தையை விரிவுப்படுத்தும் ரிவோல்ட்!! நம்மூரிலும் கிடைக்குமா இதன் எலக்ட்ரிக் பைக்குகள்..?
ரெவோல்ட் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் நிறுவனம் அதன் வணிகத்தை 35 நகரங்களுக்கு விரிவுப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.
எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ரெவோல்ட் இண்டெலிகார்ப், ரத்தன் இந்தியா எண்டர்பிரைஸஸிற்கு சொந்தமாக உள்ளது.
தற்போது இந்தியாவில் 35 நகரங்களுக்கு வணிகத்தை விரிவுப்படுத்த ரெவோல்ட் பயன்படுத்தவுள்ள ரூ.150 கோடியை ரத்தன் இந்தியா எண்டர்பிரைஸஸ் தான் வழங்கியுள்ளது. இதற்கு ஈடான மீதி பங்கை ரத்தன் இந்தியா நிறுவனம் வைத்து கொண்டுள்ளது.
இலாபத்தை பிரித்து கொள்ளும் அதேநேரத்தில் ரத்தன் இந்தியா எண்டர்பிரைஸஸின் நிர்வாகமற்ற தலைவராக ராஜிவ் ரத்தன் பதவியேற்று கொள்ளவுள்ளார். இந்தியாவில் வணிகத்தை விரிவுப்படுத்துவதுடன் தென் ஆசிய சந்தைகளுக்கு செல்லவும் இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் ரெவோல்ட் இண்டெலிகார்ப் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள் 18 மில்லியன் தூரங்களை கவர் செய்துள்ளன. வாடிக்கையாளர்களுக்கு சொந்த நிறுவனத்திலேயே தயாரிக்கப்பட்ட தொழிற்நுட்பங்கள் மூலமாக இணைப்பு இல்லா வசதிகளை வழங்க ரெவோல்ட் தீவிரமாக உள்ளது.
கூட்டணி குறித்து ரத்தன் இந்தியா க்ரூப்பின் தலைவர் ராஜிவ் ரத்தன் கூறுகையில், ரெவோல்ட் இண்டெலிகார்ப் உடன் கைகோர்ப்பதிலும், இந்தியாவின் எதிர்கால பசுமை போக்குவரத்திற்கு ஒரு பகுதியாகுவதிலும் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைக்கிறோம்.
பசுமை வாகன துறையின் எதிர்காலம் மற்றும் ரெவோல்ட் மோட்டார்ஸில் இருந்து இதுவரையில் வெளிவந்துள்ள தயாரிப்புகள் குறித்து நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம். தற்போது எடுக்கப்பட்டுள்ள முயற்சியின் மூலம், நாடு முழுவதும் உள்ள பயணிகளுக்கு ஸ்மார்ட்டான, தூய்மையான மற்றும் பசுமை போக்குவரத்தை பெருக்குவதில் ஒரு பகுதியாக இருப்போம் என்று நம்புகிறோம் என கூறியுள்ளார்.
ரெவோல்ட் இண்டெலிகார்ப் நிறுவனர் ராகுல் ஷர்மாவும் ரத்தன் இந்தியா உடன் கூட்டணி சேர்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ளார். ரெவோல்ட் பிராண்டில் இருந்து தற்சமயம் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 என்ற இரு எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இதில் ஆர்வி300 எலக்ட்ரிக் பைக்கில் 2.7 கிலோவாட்ஸ்.நேரம் லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு, 1.5 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் உடன் வழங்கப்படுகிறது. அதிகப்பட்சமாக மணிக்கு 65கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய இந்த எலக்ட்ரிக் பைக்கை சிங்கிள்-முழு சார்ஜில் 180கிமீ தூரம் வரையில் இயக்கி செல்ல முடியும்.
ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்கில் 3.24kWh லித்தியம்-இரும்பு பேட்டரி, 3 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டாரில் வழங்கப்படுகிறது. இதன் அதிகப்பட்ச வேகம் 85kmph ஆகும். சிங்கிள்-முழு சார்ஜில் இந்த பைக் 156கிமீ தூரத்திற்கு இயங்கும் திறன் கொண்டது.