விளையாட்டாக செய்த செயல்... எஞ்ஜின் சீஸில் முடிந்த சோகம்... என்ன ஆச்சுனு தெரிஞ்சா இனி இப்படி செய்யவே மாட்டீங்க!

விளையாட்டாக செய்த செயல் எஞ்ஜின் சீஸானதில் முடிந்துள்ளது. இருசக்கர வாகனத்தை ஏன் அதிகம் நீர் நிறைந்த சாலையில் இயக்கக் கூடாது என்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய ஓர் பதிவை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

விளையாட்டாக செய்த செயல்... எஞ்ஜின் சீஸில் முடிந்த சோகம்... என்ன ஆச்சுனு தெரிஞ்சா இனி இப்படி செய்யவே மாட்டீங்க!

தமிழகம், கேரளா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மழை காலம் தொடங்கியிருக்கின்றது. குறிப்பாக, கேரளாவில் மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கின்றது என்றே கூறலாம். மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் கடும் மழையில் சிக்கி தற்போதும் தவித்து வருகின்றது. இதேபோல், நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை தற்போது வெளுத்து வாங்கி வருகின்றது.

விளையாட்டாக செய்த செயல்... எஞ்ஜின் சீஸில் முடிந்த சோகம்... என்ன ஆச்சுனு தெரிஞ்சா இனி இப்படி செய்யவே மாட்டீங்க!

இதனால், குறிப்பிட்ட சில மாநிலங்களின் குறிப்பிட்ட சில பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியிருக்கின்றன. குறிப்பாக, தாழ்வான பகுதிகளை மழை நீர் சூழ்ந்த வண்ணம் காட்சியளிக்கின்றது. இந்த மாதிரியான நேரத்தில் நம்மை மட்டுமின்றி நமது வாகனங்களையும் பத்திரமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம் என வாகன வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.

விளையாட்டாக செய்த செயல்... எஞ்ஜின் சீஸில் முடிந்த சோகம்... என்ன ஆச்சுனு தெரிஞ்சா இனி இப்படி செய்யவே மாட்டீங்க!

மழை நீர் நிறைந்த பகுதிகள் அதிக ஆபத்தானவை மற்றும் அது வாகனங்களை மிகக் கடுமையாகப் பாதிக்கும் என எச்சரித்தும் வருகின்றனர். இருப்பினும், ஒரு சிலர் இதனை மீறி வாகனங்களை மழை நீர் நிறைந்த சாலைகளில் இயக்கி வருகின்றனர். அவ்வாறு, விளையாட்டாக மழை நீர் நிறைந்த பாதையில் தனது இருசக்கர வாகனத்தை இயக்கிய ஓர் இளைஞர் பெரும் சிக்கலில் சந்தித்திருக்கின்றார்.

விளையாட்டாக செய்த செயல்... எஞ்ஜின் சீஸில் முடிந்த சோகம்... என்ன ஆச்சுனு தெரிஞ்சா இனி இப்படி செய்யவே மாட்டீங்க!

ஆம், இளைஞரின் மோட்டார்சைக்கிளின் எஞ்ஜினுக்குள் மழை நீர் புகுந்து பெருத்த சேதத்தை (சீஸாகி) ஏற்படுத்தியிருக்கின்றது. விளையாட்டாக செய்த செயலால் பெரும் வினைக்கு இளைஞர் ஆளாகி இருக்கின்றார். இது நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

விளையாட்டாக செய்த செயல்... எஞ்ஜின் சீஸில் முடிந்த சோகம்... என்ன ஆச்சுனு தெரிஞ்சா இனி இப்படி செய்யவே மாட்டீங்க!

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கான்டினென்டல் ஜிடி 650 பைக்கின் எஞ்ஜினே மழை நீரால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றது. இந்த மாதிரியான செயலை வேறும் யாரும் செய்யக் கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்த பதிவை நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் வெளியிட்டிருக்கின்றது.

விளையாட்டாக செய்த செயல்... எஞ்ஜின் சீஸில் முடிந்த சோகம்... என்ன ஆச்சுனு தெரிஞ்சா இனி இப்படி செய்யவே மாட்டீங்க!

நிகழ்வுகுறித்த சிறிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், இளைஞர் தனது ராயல் என்பீல்டு பைக்கில் மழை நீர் நிறைந்த பாதையில் செல்வதைப் போன்றும், விரைவில் மோட்டார்சைக்கிள் ஆஃபாகி நிற்பது போன்ற காட்சிகளும் அடங்கி உள்ளன.

விளையாட்டாக செய்த செயல்... எஞ்ஜின் சீஸில் முடிந்த சோகம்... என்ன ஆச்சுனு தெரிஞ்சா இனி இப்படி செய்யவே மாட்டீங்க!

இதைத்தொடர்ந்து, இரு சக்கர வாகனம் மெக்கானிக் ஷெட்டில் ரிப்போராகி நிற்பதைப் போன்ற காட்சிகளும் இடம் பெற்றிருக்கின்றன. எஞ்ஜினுக்குள் இருந்து மழை நீரை வெளியேற்றும் காட்சிகளும் அதில் இடம் பெற்றிருக்கின்றன. தண்ணீர் நிறைந்த சாலைகள் வாகனங்களுக்கு மிக பெரிய எதிரி ஆம். இதை விளக்கும் வகையிலேயே இந்த காட்சிகள் உள்ளன.

பெரும் பொருட் செலவை ஏற்படுத்தக் கூடியவை. இருப்பினும், ஒரு சிலர் விளையாட்டாக மழை நீர் நிறைந்த சாலைகளில் வாகனங்களை இயக்குகின்றனர். அவர்களுக்கு இந்நிகழ்வு ஓர் விழிப்புணர்வு பாடம் என்றுகூட கூறலாம். அதிகமான உயரமான அளவில் நீர் நிறைந்த பாதையில் இருசக்கர வாகனத்தை இயக்கும்போது வாகனத்தின் ஏர் இன்டேக் பகுதி வாயிலாக மழை நீர் உட் புகுந்துக் கொள்கின்றன. இது பெரும் பொருட் செலவை ஏற்படுத்தக் கூடியது.

விளையாட்டாக செய்த செயல்... எஞ்ஜின் சீஸில் முடிந்த சோகம்... என்ன ஆச்சுனு தெரிஞ்சா இனி இப்படி செய்யவே மாட்டீங்க!

ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி 650 ஓர் உயரமான இருசக்கர வாகனம் ஆகும். இருப்பினும், அது மழை நீர் வெள்ளத்தினால் பாதிப்பைச் சந்தித்திருக்கின்றது. இப்பைக் 790 மிமீ உயரம் கொண்டது. ஆனால், இதன் ஏர் இன்டேக் துவாரம் 100 மிமீ உயரத்திலேயே இருக்கின்றது.

விளையாட்டாக செய்த செயல்... எஞ்ஜின் சீஸில் முடிந்த சோகம்... என்ன ஆச்சுனு தெரிஞ்சா இனி இப்படி செய்யவே மாட்டீங்க!

இதன் விளைவாகவே மிகவும் சுலபமாக ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி 650 பைக் மழை நீரில் சிக்கி பாதிப்பைச் சந்தித்திருக்கின்றது. இதனால் என்னென்ன பிரச்னைகளை பைக் சந்தித்திருக்கின்றது என்பது பற்றிய துள்ளியமான தகவல் வெளியாகவில்லை. இருப்பினும், பெரும் பொருட் செலவை மழை நீர் ஏற்படுத்தியிருக்கின்றது என்பது தெளிவாக தெரிகின்றது.

Most Read Articles
English summary
Why we need to avoid waterlogged roads here is full details
Story first published: Saturday, October 23, 2021, 19:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X