Just In
- 3 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- 3 hrs ago விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- 4 hrs ago லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- 6 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
Don't Miss!
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Lifestyle சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- News தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு! 2019இல் தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு - தொகுதி வாரியான விவரம்
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பெண் நண்பர் முன்னிலையில் இளைஞருக்கு அரங்கேறிய சம்பவம்... இது அவங்களுக்கு தேவைதான்... வீடியோ பாருங்க!
பெண் இருந்த காரணத்தினால் தலை-கால் புறியாமல் யமஹா ஆர்15 பைக்கில் சென்றவருக்கு சுசுகி ஹயபுசா பைக்கில் வந்த இளைஞருக்கு தக்க பாடம் புகட்டியிருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
"புள்ளிங்கோ இளைஞர்களின் அடாவடி தனத்திற்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது. நாளுக்கு நாள் அவர்களின் விதிமீறல்களும், சேட்டைகளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன" இவ்வாறான புலம்பல்களை நாள்தோறும் புள்ளிங்கோ இளைஞர்களின் குறும்புத்தனத்தால் அவதிக்குள்ளாகும் வாகன ஓட்டிகளிடம் நம்மால் கேட்க முடியும்.
அந்தளவிற்கு அவர்களின் ஒழுங்கற்ற செயலால் பாதிக்கப்பட்டோர் பலர் இருக்கின்றனர். ஆனால், நாம் இப்போது பார்க்க இருக்கும் சம்பவத்தில், புள்ளிங்கோ இளைஞர்போல் தனது பெண் நண்பருடன் சேட்டையில் ஈடுபட்ட இளைஞருக்கு சுசுகி ஹயபுசா பைக்கில் வந்த இளைஞர் தக்க பாடம் கற்பித்திருக்கின்றார். அது என்ன என்பது பற்றிய தகவலை இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.
புள்ளிங்கோ இளைஞர்களின் பொதுவான செயல்களில் ஒன்று வாகனங்களை வளைத்து, வளைத்து ஓட்டுவது. இச்செயலையே யமஹா ஆர்15 பைக்கில் கேர்ள் ஃபிரண்டுடன் (பெண் நண்பருடன்) வந்த இளைஞர் ஒருவர் செய்திருக்கின்றார். அவர், சூப்பர் திறன் கொண்ட சுசுகி ஹயபுசா பைக்கை ஓரம்கட்டும் வகையில் ஓவர்டேக் செய்ய முயன்றார்.
ஆனால், இந்த செயல் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. அதாவது, சுசுகி ஹயபுசா பைக்கை மோதும் வகையில் அமைந்தது. ஹயபுசா பைக்கர் இதனை உடனடியாக சுதாரித்ததன் காரணத்தினாலேயே பெரும் தவிர்க்கப்பட்டது. யமஹா ஆர்15 பைக்கின் ஓவர்டேக்கிங்கை உணராமல் ஹயுபுசா பைக்கர் இருந்திருந்தால் நிச்சயம் நிலை விபரீதமானதாக மாறியிருக்கும்.
மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் ஆர்15 பைக் ஓவர்டேக் செய்வதை உணர்ந்து ஹயபுசா பைக்கர் தனது வாகனத்தை லேசாக அசைந்துக் கொடுத்தார். இதனாலயே பெரும் விபரீதம் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து, யமஹா ஆர்15 பைக்கின் அடாவடி செயலால் அதிர்ச்சியுற்ற ஹயபுசா பைக் உரிமையாளர், யமஹா ஆர்15 பைக் மடக்கிப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
தொடர்ந்து, பைக்கை நிறுத்திய உடன், அதன் சாவியை உடனடியாக அவர் எடுத்துக் கொண்டார். இதனைச் சற்றும் எதிர்பார்த்திராத யமஹா ஆர்15 பைக்கரும், அவருடன் வந்த இளம் பெண்ணும் வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். வாக்குவாதம் சிறிது நேரத்தில் சூடுபிடிக்க ஆரம்பித்தது. தொடர்ந்து, இரு இளைஞருக்கு இடையிலும் கைகளப்பு ஏற்படுமளவிற்கு நிலைமை மாறியது.
இருப்பினும், சில நிமிடங்களில் நிலைமை அப்படியே மாற ஆரம்பித்துவிட்டது. ஹயபுசா பைக்கை ஓட்டி வந்த நபர், "என்னுடைய ஹெல்மெட்டிக் கேமிரா இருக்கின்றது. நீங்க ஹெல்மெட் போடல. என்னுடைய பைக்கை மோதுவதை போல் ரேஷ் டிரைவ் செய்தது என எல்லாம் கேமிராவில் பதிவாகியிருக்கு" என அடுக்கடுக்காக புகார்களை அடக்கினார்.
இந்த உரையாடலைத் தொடர்ந்து இளைஞரும் அவரது பெண் தோழியும் சில நொடிகளில் ஆக்ரோஷத்தை கைவிட ஆரம்பித்தனர். இதனையடுத்து, ஹயபுசா பைக்கில் வந்தவரிடம் இளைஞர் மட்டும் மன்னிப்பு கேட்க் ஆரம்பித்தார். தொடர்ந்து, தன்னுடைய பைக்கின் சாவியையும் கொடுக்குமாறும் ஹயபுசா பைக்கரிடத்தில் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, பைக் சாவி கொடுக்கப்பட்டு அவர்கள் இருவரும் கிளம்பினர். இந்த சம்பவத்தில் இளம்பெண்ணுடன் பைக்கில் வந்தவர் தவறு செய்திருப்பதை நம்மால் உணர முடிகின்றது. அதேசமயம், ஆர்15 பைக்கின் சாவியை பிடுங்கிய ஹயபுசா பைக்கில் வந்தவர் எடுத்த விதமும் தவறானதாகும். இதுமாதிரியான சம்பவங்களில் போலீஸாரின் உதவியை நாடுவதே இருவருக்கும் பாதுகாப்பானது ஆகும். இது தேவையற்ற சட்ட சிக்கலைச் சந்திப்பதைத் தவிர்க்க உதவும்.
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...
-
முதியவர்களுக்கு லோயர் பெர்த் கிடைக்க என்ன செய்யனும் தெரியுமா? சூப்பர் அட்வைஸ் சொன்ன ரயில்வே!
-
மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..