Just In
- 2 hrs ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 4 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 4 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 5 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
Don't Miss!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Sports IPL 2024 : சிஎஸ்கே கேப்டனுக்கு கல்தா.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.. சுப்மன் கில் வைத்த ட்விஸ்ட்
- Lifestyle உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
- News சம்மருக்கு டிராவல் பண்றவங்களுக்கு நோ பிராப்ளம்.. சூப்பர் பிளானை கையில் எடுத்த ரயில்வே! இத பாருங்க
- Movies எரிகிற கொள்ளியில் இன்னும் ஏன் எண்ணெய் ஊத்துற.. விஜய்யை கடுமையாக விமர்சித்த பயில்வான் ரங்கநாதன்!
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
எலெக்ட்ரிக் வண்டி சேல்ஸ் அதிகமாக போகுது... 1,000 சார்ஜர்களை அமைக்கும் ஏத்தர்... எந்த மாநிலத்தில் தெரியுமா?
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் கர்நாடக மாநிலத்தில் 1,000 ஃபாஸ்ட் சார்ஜர்களை அமைக்கவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
கர்நாடகா மாநிலம் முழுவதும் 1,000 ஃபாஸ்ட் சார்ஜர்களை பொருத்துவதற்காக அம்மாநில அரசும், ஏத்தர் எனர்ஜி நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலம் கர்நாடக மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜிங் செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கவுள்ளது. அத்துடன் மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதையும் இது ஊக்குவிக்கும்.
நமது எதிர்கால போக்குவரத்து எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ந்துதான் இருக்க போகிறது என்பதை தற்போது அனைவரும் உணர தொடங்கி விட்டனர். அத்துடன் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் காற்று மாசுபாடு ஆகிய பிரச்னைகளும் மக்களின் கவனத்தை எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி வேகமாக திருப்பி வருகின்றன.
ஆனால் இன்னமும் பலர் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறாமல் இருப்பதற்கான முக்கியமான காரணம் ரேஞ்ச் தொடர்பாக உள்ள பதற்றம்தான். தற்போதைய நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்களின் ரேஞ்ச் ஓரளவிற்கு மட்டுமே இருக்கிறது. போதாக்குறைக்கு மக்களுக்கு கிடைக்கும் சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையும் வேறு மிகவும் குறைவாக இருக்கிறது.
ஆனால் சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்தால் பெரும் அளவிலான மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவர். எனவே அரசும், எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனங்களும் சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சி செய்து வருகின்றன. இதன்படிதான் கர்நாடக மாநில அரசும், ஏத்தர் எனர்ஜி நிறுவனமும் தற்போது கைகோர்த்துள்ளன.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் கடந்த 2013ம் ஆண்டு ஸ்டார்ட்-அப் நிறுவனமாக தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக ஏத்தர் எனர்ஜி மாறியுள்ளது. ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் ஏத்தர் 450எக்ஸ் (Ather 450X) முறையான ஸ்மார்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக பார்க்கப்படுகிறது.
இதன் செயல்திறன் மற்றும் டிசைன் என பல்வேறு அம்சங்களும் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளன. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மட்டுமல்லாது ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது சொந்த சார்ஜர் மற்றும் சார்ஜிங் க்ரிட் ஆகியவற்றையும் உருவாக்கியுள்ளது. ஏத்தர் எனர்ஜி நிறுவனம் சிறிய சார்ஜரை விற்பனை செய்து வருகிறது.
இதனை வாடிக்கையாளர்களின் இல்லங்களில் பொருத்தி கொள்ள முடியும். அதேபோல் ஃபாஸ்ட் சார்ஜரையும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் விற்பனை செய்து கொண்டுள்ளது. ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் சொந்த சார்ஜிங் நெட்வொர்க்தான் ஏத்தர் க்ரிட் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் சார்ஜர்கள் டிசைன், பாதுகாப்பு, செயல்திறன் என அனைத்திலும் தலைசிறந்து விளங்குகின்றன.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தற்போது எஸ்காம்ஸ் (ESCOMs - Electricity Supply Companies of Karnataka) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இந்த நிறுவனம்தான் மின்சார வினியோகத்தை கவனித்து கொண்டுள்ளது. கர்நாடகா முழுவதும் அமைக்கப்படும் ஏத்தர் எனர்ஜி சார்ஜர்களுக்கு இந்நிறுவனம்தான் மின்சாரத்தை வழங்கவுள்ளது.
கர்நாடகா முழுவதும் பல்வேறு பகுதிகளில் 1,000 ஃபாஸ்ட் சார்ஜர்கள் அமைக்கப்படவுள்ளன. சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை உயரும். எனவே கர்நாடக மாநிலத்தில் வரும் காலங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களை வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை உயரவுள்ளது.
கர்நாடகா மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஃபாஸ்ட் சார்ஜர்களை அதிகளவில் நிறுவுவதற்கு ஏத்தர் எனர்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போதைய நிலையில் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்திற்கு போட்டியாக டிவிஎஸ் (ஐக்யூப்), பஜாஜ் (சேத்தக்), ஓலா எலெக்ட்ரிக் (எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ) உள்ளிட்ட நிறுவனங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றன.
இவை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வரும் முன்னணி நிறுவனங்கள் ஆகும். இதுதவிர இன்னும் பல்வேறு சிறிய நிறுவனங்களும் இந்திய சந்தையில் ஏராளமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றன. இங்கு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகரித்து கொண்டே வருவதால், வரும் காலங்களில் அந்த நிறுவனங்கள் மிகப்பெரிய வளர்ச்சியை அடைவதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன.