இந்த நேரத்துல நாம டெல்லியில இருந்திருக்கலாம்... இ-சைக்கிள் வாங்கினால் ரூ. 5,500 மானியமாம்! சூப்பரான அறிவிப்பு!
மின்சாரத்தால் இயங்கக் கூடிய இ-சைக்கிளை வாங்கும் பொது மக்களுக்கு ரூ. 5,500 வரை மானியம் வழங்க இருப்பதாக ஓர் மாநில அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அது எந்த மாநில அரசு?, எதற்காக இப்படி ஒரு சலுகை என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விபரங்களையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். அவை பற்றி விரிவாக பார்க்கலாம், வாங்க.

மின் வாகன பயன்பாட்டை ஊக்குவித்து எரிபொருளால் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைக்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. இந்த ஊக்குவிப்பின் ஒரு பங்காக அரசாங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோருக்கு மானியம், வரி சலுகை உள்ளிட்ட சலுகைகளை வழங்கி வருகின்றது.

இந்த மாதிரியான சூழ்நிலையில் இந்தியாவில் உள்ள ஓர் குறிப்பிட்ட மாநில அரசு மின்சாரத்தால் இயங்கக் கூடிய இ-சைக்கிளை வாங்குவோருக்கும் மானியம் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சுமார் 5 ஆயிரத்து 5 நூறு ரூபாய் வரை மானியம் வழங்க இருப்பதாக அரசாங்கள் அறிவித்துள்ளது.

டெல்லி அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம் ஆகும். இந்த அறிவிப்பால் டெல்லி மக்கள் தற்போது குஷியில் ஆழ்ந்திருக்கின்றனர். ஆனால், இந்த சலுகை முதலாவது வாங்கப்படும் 10 ஆயிரம் நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மின் வாகனங்கள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. அவை எரிபொருளால் இயங்கும் வாகனங்களை போல் சுற்றுச்சூழலை மாசுபடுத்தக் கூடிய எந்த கழிவுகளையும் வெளியேற்றாது. எனவேதான் இதனை பசுமை வாகனமாக கருதி உலக நாடுகள் பல அவற்றின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றன.

இதுமாதிரியான முயற்சியே நமது இந்தியாவிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு இ-சைக்கிள்களுக்கான மானிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ. 5,500 உடன் சேர்த்து கூடுதலாக 2 ஆயிரம் ரூபாயையும் டெல்லி அரசு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

ஆனால், முதல் ஆயிரம் நபர்களால் இந்த கூடுதல் 2 ஆயிரம் ரூபாய் மானியத்தை பெற்றுக் கொள்ள முடியும். இதேபோல், டெலிவரி போன்ற பொது சேவையில் ஈடுபடுத்தப்படும் கார்கோ இ-சைக்கிள்களுக்கும் டெல்லி அரசாங்கம் மானியம் வழங்க இருக்கின்றது. அந்த வாகனங்களுக்கு ரூ. 15 ஆயிரம் வரை வழங்கப்பட உள்ளது.

முதல் 5 ஆயிரம் நபர்களால் மட்டுமே இந்த சலுகையைப் பெற முடியும். முன்னதாக தனிநபர் வாங்கும் வர்த்தக பயன்பாட்டிற்கான மின் வாகனங்களுக்கு மட்டுமே மானியம் வழங்கப்பட்டது. ஆனால், இப்போது நிறுவனங்களுக்கும் மானியம் வழங்கப்படும் என டெல்லி போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெஹ்லோட் தெரிவித்திருக்கின்றார்.

அரசின் இந்த அறிவிப்பு தற்போது டெலிவரி சேவையில் காணப்படுமளவிலான எரிபொருள் வாகனங்களை அகற்ற உதவும் என நம்பப்படுகின்றது. இ-சைக்கிள் பயன்பாட்டால் எந்த மாதிரியான அசம்பாவிதங்களும் ஏற்படாது. ஏனெனில் அவை மணிக்கு 25 கிமீ வேகத்தில் மட்டுமே இயங்கக் கூடியவை.

அதேநேரத்தில் ஒரு முழுமையான சார்ஜில் அவை 45 கிமீ வரை ரேஞ்ஜ் தரும். ஆகையால், சிறந்த லாபத்தை பெற உதவும் இவை உதவும் என நம்பப்படுகின்றது. தற்போது தலைநகர் டெல்லி சாலையில் 45,900 மின் வாகனங்கள் இயங்கிக் கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது. இவற்றில் 36 சதவீதம் இருசக்கர ரக வாகனங்கள் என அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் கூறியிருக்கின்றார்.

இந்த எண்ணிக்கையை இன்னும் பல அதிகரிக்கச் செய்யும் வகையிலேயே டெல்லி அரசு தற்போது இ-சைக்கிள்களுக்கான மானிய திட்டத்தை அறிவித்திருக்கின்றது. இதனால் வெகு விரைவில் மாநிலத்தில் இ-சைக்கிள்கை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேநேரத்தில் டெல்லி அரசின் இந்த அறிவிப்பு பிற மாநில மக்களை பொறாமையில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications








