Just In
- 1 hr ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- 3 hrs ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 4 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 4 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
Don't Miss!
- Movies ’ஹாட் ஸ்பாட்’ விமர்சனம்.. மாப்பிள்ளைக்கு தாலி.. அண்ணன் தங்கை திருமணம்.. இன்னும் இருக்கு!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- News நாடு முழுக்க மாறுகிறது சம்பளம்.. வருகிறது புதிய ஊதிய திட்டம்.. பணியாளர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்
- Technology ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
மின் வாகன விலையை பன்மடங்கு குறைக்கும் ஃபேம்2 திட்டம்... எப்படி செயல்படுது? இத முதல்ல தெரிஞ்சிக்கோங்க!
நீங்க எலெக்ட்ரிக் வாகனத்தை வாங்க ஷோரூம் போயிருந்தா நிச்சயம் 'ஃபேம்-2' (FAME-II) என்ற வார்த்தை உங்கள் காதில் வந்து விழுந்திருக்கும். மத்திய அரசாங்கம் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு அறிமுகப்படுத்தியதே இத்திட்டம். இதன் வாயிலாக மின் வாகனங்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகின்றது.
நீங்க எலெக்ட்ரிக் வாகனத்தை வாங்க ஷோரூம் போயிருந்தா நிச்சயம் 'ஃபேம்-2' (FAME-II) என்ற வார்த்தை உங்கள் காதில் வந்து விழுந்திருக்கும். மத்திய அரசாங்கம் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு அறிமுகப்படுத்தியதே இத்திட்டம். இதன் வாயிலாக மின் வாகனங்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகின்றது.
உயரிய அளவில் காணப்படும் மின் வாகனத்தின் விலையை பெருமளவில் குறைப்பதே இத்-திட்டத்தின் முக்கிய பணியாகும். இதுமட்டுமின்றி இந்தியாவில் மின் வாகன உற்பத்தியை ஊக்குவிக்கவும் இத்திட்டம் உதவுகின்றது. இந்த சிறப்பு திட்டம் நாட்டில் எவ்வாறு செயல்படுகின்றது என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.
பெட்ரோல், டீசல் வாகன பயன்பாட்டால் ஏற்படும் காற்று மாசுபாட்டை குறைத்து, சுற்று சூழலுக்கு நண்பனாக விளங்கும் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டே ஃபேம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டம் முதல் முறையாக 2019ம் ஆண்டிலேயே நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆனால், இந்த திட்டம், மின் வாகனங்களும் சென்ற ஆண்டே மக்கள் மத்தியில் பிரபலமடைய தொடங்கியது. இதன் விளைவு தற்போது நாட்டில் மின் வாகனங்களின் எண்ணிக்கை பன் மடங்கு உயர்ந்துக் காணப்படுகின்றது. மேலும், எலெக்ட்ரிக் வாகன விற்பனையும் சூடுபிடித்துக் காணப்படுகின்றது.
முன்னதாக ஃபேம்-2 திட்டத்தின் வாயிலாக ஒரு கிலோவாட் (kWh) பேட்டரிக்கு ரூ. 10,000 மானியம் வழங்கப்பட்டது. தற்போது மக்கள் மத்தியில் மின் வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருவதனால் இந்த மானிய தொகையை ரூ. 15 ஆயிரமாக மத்திய அரசு உயர்த்தியிருக்கின்றது.
இதனால், மின்சார வாகனத்தின் விலை முன்பைக் காட்டிலும் பல மடங்கு தற்போது குறைந்திருக்கின்றது. உதாரணமாக ஓர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3 kWh பேட்டரி பயன்படுத்தப்பட்டிருக்கும் எனில், மேலும், அதன் விலை ரூ. 1 லட்சம் இருக்கும் எனில், ஒவ்வொரு கிலோவாட்டிற்கும் ரூ. 15 ஆயிரம் வீதம் மானியம் என வழங்கப்படும்.
இதன் விளைவாக ரூ. 45 ஆயிரம் வரை விலை குறையும். இந்த நிலை ஒரு லட்ச ரூபாய் என்ற விலையை 55 ஆயிரத்திற்கு குறைக்கும். இது நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களையும் மின் வாகனத்தை நுகர உதவும். இந்த காணரத்திற்காகவே மத்திய அரசு ஃபேம்-2 திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
மத்திய அரசின் ஃபேம் 2 திட்டம் மட்டுமின்றி சில மாநில அரசுகளும் தங்களின் பங்காக மானிய திட்டத்தை தங்களின் மாநில மக்களுக்காக வழங்கி வருகின்றன. இதன் விளைவாக இன்னும் பல மடங்கு விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது. குஜராத், டில்லி போன்ற மாநில அரசுகள் சில இதுபோன்று மானிய திட்டங்களை அறிவித்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய-மாநில அரசுகள் மானியம் மட்டுமின்றி வரி சலுகை மற்றும் பதிவு கட்டண சலுகை உள்ளிட்டவற்றையும் வழங்கி வருகின்றது. இது மக்களை கூடுதலாக மின் வாகன பயன்பாட்டை நோக்கி நகர்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இதுமட்டுமின்றி எலெக்ட்ரிக் வாகனங்கள் பெட்ரோல், டீசல் வாகனங்களைக் காட்டிலும் அதிக லாபத்தைக் கொடுக்கக் கூடியவையாக காட்சியளிக்கின்றன.
தற்போது பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்கள் நாட்டில் மிக உச்சபட்ச விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இவை ரூ. 100ஐக் கடந்து விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. இதன் விளைவாகவும் (எரிபொருள் விலை பாரத்தைக் குறைக்கும் பொருட்டு) மக்கள் மின் வாகன பயன்பாட்டை நோக்கி நகர தொடங்கியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
-
ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
-
ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு
-
இந்த விமான நிலையம் மும்பை நகரத்தை விட பெருசு... எங்கு அமைந்துள்ளது? அதன் அளவு என்ன?