இந்த வீடியோவை நிச்சயம் நீங்க பாத்திருப்பீங்க! ஸ்கூட்டர் தானாக விழுந்ததற்கு பின்னால் இருக்கும் மர்மம் இதுதான்!
சில தினங்களாக இணையத்தில் சாதாரணமாக சென்றுக் கொண்டிருந்த ஸ்கூட்டர் ஒன்று திடீரென சாலையில் சரிந்து விழுவதைப் போன்ற வீடியோக் காட்சி இணையத்தில் வேகமாக வரைலாகிக் கொண்டிருக்கின்றது. இருசக்கர வாகனம் மர்மமான முறையில் கீழே விழுந்தது பலருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்தது. இந்ச சம்பவத்திற்கு பின்னால் இருக்கும் காரணத்தையே இந்த பதிவில் விளக்கியுள்ளோம். இதுகுறித்த கூடுதல் விபரங்களையே இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

சமீப சில தினங்களாக இணையத்தில் ஓர் வீடியோ மிக வேகமாக வைரலாகிக் கொண்டிருக்கின்றது. தம்பதியினர் இருவர் சென்றுக் கொண்டிருந்த ஸ்கூட்டர் ஒன்று திடீரென நடு ரோட்டில் சருக்கி விழக் கூடிய அந்த வீடியோக் காட்சிகளே இணைய வாசிகள் மத்தியில் வேகமாக பரவிக் கொண்டிருக்கின்றது. எந்த வாகனமும் அதன் மீது மோதாத நிலையில் இருசக்கர வாகனம் தானாக சரிந்து விழுவதை நம்மால் காண முடிகின்றது.

இதற்கு பின்னால் மறைந்திருக்கும் மர்மத்தையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். அதாவது, எந்த மோதலையும் சந்திக்காமாலே இருசக்கர வாகனம் திடீரென எப்படி சாலையில் சரிந்து விழுந்தது என்பதற்கான காரணத்தையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த விரிவான பதிவிற்குள் போகலாம்.

தம்பதியினர் பயன்படுத்தியது ஹீரோ டூயட் (Hero Duet) ஸ்கூட்டர் ஆகும். இந்த ஸ்கூட்டரை தற்போது விற்பனையில் இருந்து அகற்றியிருக்கின்றது ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனம். கவர்ச்சியான தோற்றம் கொண்ட இந்த வாகனத்திற்கு வரவேற்புக் குறைவாக கிடைத்ததே அதன் வெளியேற்றத்திற்கான மிக முக்கியமான காரணமாக உள்ளது.

இந்த ஸ்கூட்டரில் 10 அங்குல வீலையே ஹீரோ நிறுவனம் பயன்படுத்தி இருக்கின்றது. இத்துடன், இன்டெக்ரேடட் பிரேக்கிங் சிஸ்டம் எனும் தொழில்நுட்பத்தையும் டூயட் ஸ்கூட்டரில் ஹீரோ வழங்கியிருக்கின்றது. ஏதேனும் ஓர் முனையில் பிரேக் லிவரை அழுத்தினால் மற்றொரு முனையில் இருக்கும் லிவரும் தானாகவே இயங்கும் வசதிக் கொண்டதே இந்த தொழில்நுட்பத்தின் முக்கிய அம்சமாகும்.

இத்தகைய அம்சம் கொண்ட பிரேக்கை சடாரென பிடித்ததன் காரணத்தினாலேயே ஸ்கூட்டர் சாலையில் சரிந்து விழுவதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது. நல்ல வேலையாக அந்த ஜோடிகளுக்கு எந்த விதமான பெரிய காயங்களும் ஏற்படவில்லை. இதற்கு அஜாக்ரதையே அவர்கள் இருசக்கர வாகனத்தை இயக்கியதே முக்கிய காரணம் என கூறப்படுகின்றது.

வாகனம் முன்னால் சென்றுக் கொண்டிருப்பதை சரியாக பார்க்காமல் வேகமாகச் சென்றுக் கொண்டிருந்ததே விபத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. தங்களுக்கு முன்னால் சென்றுக் கொண்டிருந்த வாகனம் மிக நெருக்கமாக இருப்பதை உணர்ந்த இருசக்கர வாகன ஓட்டி திடீரென பிரேக்கை பிடித்திருக்கின்றார். அப்போது, இன்டெக்ரேடட் பிரேக்கிங் சிஸ்டம் அதன் வேலையை காட்டியிருக்கின்றது.

ஆனால், விழுந்த பின்னரோ பின்னால் வந்த வாகனத்தை அவர்கள் குற்றம் சாட்டினர். ஜாவா பெராக் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் தங்களை மோதிவிட்டதாக எண்ணிய ஸ்கூட்டரில் வந்த பெண், இளைஞரிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பித்தார். ஆனால், இளைஞர் தன்னிடம் ஆதாரம் உள்ளது. நான் உங்களை மோதவில்லை என கூறி அவர்களைச் சமாதானப்படுத்தினார்.

நல்ல வேலையாக அந்த இளைஞர் கோ-ப்ரோ கேமிராவை பயன்படுத்தினார். ஒரு வேலை அந்த கேமிரா அவரிடத்தில் இல்லாமல் இருந்திருந்தால் நிச்சயம் இளம்பெண் போட்ட பழிக்கு ஆளாகி இருப்பார். மேலும், சட்ட சிக்கலிலும் சிக்கியிருப்பார். அதுமட்டுமின்றி, அவர் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தில் ட்யூவல் சேனல் ஏபிஎஸ் இடம் பெற்றிருந்த காரணத்தினால் விபத்தில் சிக்காமலும் தப்பியிருக்கின்றார். அவரும் மிக ஸ்கூட்டருடன் மிக நெருக்கமாகவே வந்தார் என வைரல் வீடியோ காட்டுகின்றது.

இருப்பினும், நவீனகால பிரேக்கிங் தொழில்நுட்பமான டிஸ்க் மற்றும் ஏபிஎஸ் உள்ளிட்டவை விபத்தில் இருந்து காப்பார்றியிருக்கின்றது. ஜாவா பெராக் பைக்கில் டிஸ்க் மற்றும் ட்யூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் அம்சம் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த அம்சம் மிக மிக வழுப்பான பாதையாக இருந்தாலும் மிக சீரான பிரேக்கை வழங்க உதவும். இத்தகைய ஓர் அம்சம் இல்லாத காரணத்தினாலேயே ஹீரோ டூயட் ஸ்கூட்டர் சரிந்து விழந்து விபத்துக்குள்ளானது.
அதேநேரத்தில், ஜாவா பெராக் பைக்கில் வந்தவர் தனக்கு முன்னால் சென்றுக் கொண்டிருந்த வாகனங்கள் மீது அதிக கவனத்தைச் செலுத்தியவாறும் வாகனத்தை இயக்கியிருக்கின்றார். இதன் காரணத்தினாலேயே, ஸ்கூட்டர் விழுவதை உடனடியாக உணர்ந்து பிரேக்கைப் போட்டிருக்கின்றார். இந்த விபத்து நிகழ்வு அனைவருக்கும் ஓர் பாடத்தைக் கற்பித்துள்ளது. அதாவது, அதிக கவனத்துடன் சென்றால் எப்படி விபத்தில் இருந்து தப்பிக்கலாம், அதேநேரத்தில் கவனம் இல்லை எனில் எந்த மாதிரியான சிக்கல்கள் எல்லாம் ஏற்படும் என்கிற பாடத்தை இந்த விபத்து நிகழ்வு நமக்கு கற்பித்துள்ளது.


Click it and Unblock the Notifications








