ஊரடங்குகளுக்கு மத்தியில், ஹீரோ மோட்டோகார்ப் ஈட்டிய ரூ.7,883 கோடி வருவாய்!! வரிகள் கழித்து இலாபம் இவ்வளவா!
இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் நடப்பு 2021-22 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் கிடைத்த வருவாய் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான இந்த நிறுவனத்தின் அறிக்கையினை தொடர்ந்து பார்ப்போம்.

இந்தியாவில் தற்சமயம் அதிகளவில் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனமாக ஹீரோ மோட்டோகார்ப் உள்ளது. இத்தகைய நிறுவனம் நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் (2021 அக்டோபர்- டிசம்பர்) சுமார் ரூ.7,883 கோடி வருவாயை ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த குறிப்பிட்ட காலாண்டில் வட்டி, வரிகள், தேய்மானம் மற்றும் கடனை திருப்பி செலுத்துவதற்கு முந்தைய வருவாய் 12.2 சதவீதமாக இருந்தது. வரிகள் செலுத்திய பிறகு நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு கிடைத்துள்ள இலாபம் ரூ.686 கோடியாகும். அதுவே நடப்பு நிதியாண்டில் ஹீரோ மோட்டோகார்ப் தற்போதைய தேதி வரையில் ரூ.1,846 கோடிகளை வரிகளை செலுத்திய பிறகு இலாபமாக ஈட்டியுள்ளது.

இதன் விளைவாகவே, இந்த நிறுவனம் ஒரு பங்கிற்கு ரூ.60 -ஐ இடைக்கால ஈவுத்தொகையாக அறிவித்தது. இதுகுறித்து ஹீரோ மோட்டோகார்பின் முதன்மை நிதி அதிகாரி நிரஞ்சன் குப்தா கருத்து தெரிவிக்கையில், "நடப்பு நிதியாண்டில் உள்நாட்டு இருசக்கர வாகன துறையானது கொரோனா வைரஸ் பரவலினால் ஏற்பட்ட மென்பொருள் தேவை மற்றும் கடுமையான பொருட்களின் விலை பணவீக்கம் உள்ளிட்டவற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.

நியாயமான விலை உயர்வுகளுடன் இணைந்து சேமிப்பு திட்டங்களில் எங்களின் தொடர்ச்சியான கவனம் வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனை குறைவுகள் மீதான தாக்கத்தை குறைக்க உதவியது. கொரோனா 3வது அலையின் விரைவான ஊரடங்கு தளர்வுகள் மற்றும் போக்குவரத்து துறை & கல்வித் துறை போன்றவை உட்பட பொருளாதாரத்தின் அனைத்து துறைகளும் வரும் வாரங்களில் முழுமையாக மீண்டும் திறக்கப்படுவதால், நாங்கள் மிகவும் பரந்த பொருளாதார மீட்சி மற்றும் நுகர்வோர் நம்பிக்கையை அதிகரிக்க எதிர்பார்க்கிறோம்.

சமீபத்தில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட 2022ஆம் ஆண்டிற்கான யூனியன் பட்ஜெட் அதிகரித்த மூலதனச் செலவினங்களினால் வளர்ச்சியை மையமாக கொண்டதாக உள்ளது. மேலும் இது வழக்கம்போல் கிராம புற மற்றும் MSME துறைக்கான ஆதரவை தொடர்கிறது. இது 2023ஆம் நிதியாண்டிற்கான வாகன விற்பனை, குறிப்பாக இருசக்கர வாகன துறையின் தேவை சூழ்நிலைக்கு நல்லது.

விநியோகத்தில் உண்டாகும் ஏற்றத்தாழ்வுகள் படிப்படியாக சரி செய்யப்படுவதால், பொருட்களின் விலை அழுத்தங்கள் குறையும் என்று எதிர்பார்க்கிறோம். இதனால் விலைமதிப்பற்ற உலோகங்கள் மற்றும் இரும்பின் விலைகள் ஏற்கக்கூடியதாக மாறும். நாங்கள் எங்கள் சேமிப்பு திட்டத்தை தொடர்ந்து முடுக்கிவிடுவோம். பிராண்டுகளுக்குள் பிரீமியம் தரத்தை செலுத்துவோம். தேவைப்படும் இடங்களில் விலையை உயர்த்துவோம்" என்றார்.

ஆந்திராவில் சித்தூரில் தொழிற்சாலையை கொண்டுள்ள ஹீரோ மோட்டோகார்பும் மற்ற நிறுவனங்களை போல் எலக்ட்ரிக் வாகனங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது. இந்த வகையில், ஏத்தர் எனர்ஜி மற்றும் கோகோரோ போன்ற நிறுவனங்களுடன் கூட்டணி சேர்வதன் மூலம் முழு இவி சுற்றுச்சூழல் அமைப்பை ஹீரோ மோட்டோகார்ப் கட்டமைத்து வருகிறது.

ஏற்கனவே கூறியதுதான், இந்தியாவில் ஒவ்வொரு மாதத்திலும் அதிகளவில் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனமாக ஹீரோ மோட்டோகார்ப் விளங்குகிறது. ஆனால் தயாரிப்பு பணிகளில் ஏற்படும் சில இடையூறுகளினால் இந்த நிறுவனத்தின் மொத்த விற்பனை எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக வழக்கத்தை காட்டிலும் வெகுவாக குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications








