தேவையில்லாமல் காசை வீணாக்காதீங்க... பைக் இன்ஸ்சூரன்ஸில் இவ்வளவு விஷயம் இருக்கு!! சிலருக்கு தெரிவதில்லை...
ஒரே வருடத்தில் இருமுறை பைக் இன்ஸ்சூரன்ஸை க்ளைம் பண்ண முடியுமா? இந்த சந்தேகம் நிச்சயம் உங்களில் பெரும்பாலானோர்க்கு இருக்கும். வாருங்கள் அதற்கான விடையை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

பைக் இன்ஸ்சூரன்ஸ் எதற்கு பயன்படும் என்பது நிச்சயம் உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் என நிணைக்கிறேன். பைக்கோ அல்லது ஸ்கூட்டரோ விபத்தினால் சேதமடைந்தாலோ அல்லது திருட போனாலோ அல்லது இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டாலோ அதற்கான நிவாரண நிதியை பாலிசி ஹோல்டர்கள் பெறுவதற்கு இன்ஸ்சூரன்ஸ் வழிவகுக்கிறது.

இவற்றில் எதுவும் நடைபெறாமல், நீங்கள் இன்ஸ்சூரன்ஸ் தொகைக்கு விண்ணப்பிக்கா விட்டால் நோ க்ளைம் போனஸை பெற முடியும். இந்த போனஸின் மூலமாக இன்ஸ்சூரன்ஸை அடுத்த வருடத்தில் புதுப்பிக்கும்போது நிர்ணயிக்கப்படும் கட்டணத்தை வெகுவாக குறைக்க முடியும். ஒரு வருடத்தில் ஒருமுறை இன்ஸ்சூரன்ஸை பெற்றாலே இந்த போனஸை பெற முடியாது.

அப்படியிருக்கையில் ஒரே வருடத்தில் 2 முறை இன்ஸ்சூரன்ஸை பெறுவதற்கு விண்ணப்பித்தால் நோ க்ளைம் போனஸை பெறுவதற்கு வாய்ப்புகளே இல்லாமல் போகுவது மட்டுமின்றி, ரீநியூவல் சமயத்தின்போது கட்டணமும் எகிறும். இவ்வாறு பைக் இன்ஸ்சூரன்ஸை ஒரே வருடத்தில் இருமுறை க்ளைம் செய்வதினால் ஏற்படும் பின் விளைவுகள்...

நோ க்ளைம் போனஸை இழத்தல்
ஏற்கனவே கூறியதுபோல், இன்ஸ்சூரன்ஸ் தொகையை பெறவில்லை எனில், இன்ஸ்சூரன்ஸ் புதுப்பித்தலின்போது குறிப்பிடத்தக்க சலுகைகளை பெறலாம். அதாவது புதுப்பித்தலுக்கான கட்டணத்தில் 20% முதல் 50% வரையில் பணம் தள்ளுபடி உள்ளிட்டவை கிடைக்கும்.

இவற்றை இன்ஸ்சூரன்ஸ் க்ளைம் செய்யும் வாடிக்கையாளர்கள் இழக்க நேரிடும். இருப்பினும் வாடிக்கையாளர்களால் நோ க்ளைம் போனஸ் பாதுகாப்பான் என்ற ஆட்-ஆன் -ஐ இன்ஸ்சூரன்ஸ் திட்டத்தில் இணைத்து புதுப்பித்தலின்போது கட்டணம் தள்ளுபடியை ரத்து செய்யப்படுவதை தவிர்க்கலாம்.

புதுப்பித்தலுக்கான கட்டணம் அதிகரிப்பு
ஒரே வருடத்தில் இருமுறை இன்ஸ்சூரன்ஸ் தொகையை பெற நேர்ந்தால், இன்ஸ்சூரன்ஸ் புதுப்பித்தலின் போது அதற்கான கட்டணத்தை வழக்கத்தை காட்டிலும் அதிகமாக நிர்ணயிப்பர். ஆதலால், அவ்வப்போது இன்ஸ்சூரன்ஸை க்ளைம் செய்வது இன்ஸ்சூரன்ஸில் செலவிடும் தொகையை அதிகரிக்கும்.

நஷ்ட ஈடு குறையும்
அவ்வப்போது இன்ஸ்சூரன்ஸை பெற முயற்சிப்பது, பெறப்படும் நஷ்ட ஈடு தொகையை குறைக்கவும் செய்யும். ஆதலால், சிறிய மோதல் பாதிப்புகளை இன்ஸ்சூரன்ஸை பெறாமல் தாமாக சரிச்செய்ய முடிகிறதா என்பதை பாருங்கள்.

அதேநேரம், விரிவான பைக் இன்ஸ்சூரன்ஸ் திட்டதுடன் பூஜ்ஜிய தேய்மான ஆட்-ஆன் -ஐ கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, இன்ஸ்சூரன்ஸை க்ளைம் செய்வதில் சில நிபந்தனைகள் ரிநியூவல் சமயத்தில் விதிக்கப்படுகின்றன. அதாவது, ஓர் குறிப்பிட்ட காலத்தில் இத்தனை முறை மட்டுமே இன்ஸ்சூரன்ஸை க்ளைம் செய்ய முடியும் போன்றவை.

தனக்கு இன்ஸ்சூரன்ஸை எவ்வாறு க்ளைம் செய்வது என்றே தெரியவில்லை என கூறுகிறவர்களுக்கு, எளிமையான 4 ஸ்டெப்கள் மட்டுமே உள்ளன, அவற்றை தெரிந்துக்கொண்டால் போதும் என கூறி கொள்கிறேன். முதல் படி, விபத்து நடந்தவுடன் அதனை எவ்வளவு விரைவாக இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தெரிவிக்கிறீர்கள் என்பது முக்கியமாகும்.

அதன்பின் பைக்கின் சேதமடைந்த பகுதிகளையும் சற்று தொலைவாக நின்று பைக்கையும் புகைப்படங்கள் எடுத்து கொள்ளுங்கள். இவை இன்ஸ்சூரன்ஸ் அதிகாரி வந்து விசாரிக்கும்போது, காண்பிப்பதற்கு சிறந்த ஆதாரங்களாக இருக்கும். விசாரணை முடிந்தவுடன் அதிகாரி ஒரு விண்ணப்பத்தை கொடுத்து பூர்த்தி செய்ய சொல்வார். அதனை பூர்த்தி, தேவையான ஆவணங்களை இணைத்து தர வேண்டியிருக்கும்.

நீங்கள் விண்ணப்பத்தில் பணமில்லா க்ளைம் செயல்முறைகளுக்கு வேண்டியிருந்தால், நீங்கள் அளித்த ஆவணங்களை சரிப்பார்த்த பின், இன்ஸ்சூரன்ஸ் நிறுவனம் பைக்கை பழுது பார்க்கும் கேரேஜ் உடன் நேரடியாக இன்ஸ்சூரன்ஸ் தொகையை அளித்துவிடும். அதுவே உங்களுக்கு பிடித்தமான கேரேஜில் செல்ல விரும்புகிறீர்கள், அங்கு பழுது பார்ப்பிற்கான கட்டணத்தை முதலில் நீங்கள் செலுத்தி, பின்னர் அந்த தொகையை இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து வாங்கி கொள்ளலாம்.

பைக் இன்ஸ்சூரன்ஸை க்ளைம் செய்வதற்கு உங்களிடம் க்ளைம் செய்வதற்கான விண்ணப்பம், பைக்கின் வாகன பதிவு சான்றிதழ், வரி செலுத்தியதற்கான ரசீது, ஓட்டுனர் உரிமம், பைக் இன்ஸ்சூரன்ஸ் காகிதம், எஃப்.ஐ.ஆர் நகல் உள்ளிட்டவை இருத்தல் வேண்டும்.


Click it and Unblock the Notifications








