Just In
- 1 hr ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- 1 hr ago ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- 2 hrs ago நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- 3 hrs ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
Don't Miss!
- Movies இந்த ஒற்றுமையை நோட் பண்ணீங்களா?.. ஸ்டார் நடிகர்கள் ஒரே மாதிரி வந்து ஓட்டுப் போட்டு இருக்காங்களே!
- Finance AC வாங்கப் போறிங்களா? இந்த தவறை பண்ணிடாதீங்க.. முதல்ல இதை நோட் பண்ணுங்க!
- News சென்னைக்கு வரப்போகும் புல்லட் ரயிலை விடுங்க.. அதைவிட சிறப்பான சூப்பர் சம்பவம் இருக்கு.. இதை பாருங்க
- Sports இதுதான் கிரிக்கெட்.. அஷுதோஷ் சர்மாவிடம் கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளேன்.. சூர்யகுமாரே சொல்லிட்டாரு!
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மஹிந்திரா குறித்திருக்கும் அதே நாளில் புதிய தயாரிப்பை அறிமுகம் செய்யும் ஓலா.. இப்பவே ஆவலை தூண்ட வைக்குறாங்களே!
மஹிந்திரா (Mahindra) நிறுவனம் குறித்து வைத்திருக்கும் அதே நாளில் புதிய மின்சார வாகனத்தை ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவின் முன்னணி மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஓலா எலெக்ட்ரிக் ()-ம் ஒன்று. இந்த நிறுவனத்தின் சிஇஓ-வாக பணியாற்றி வருபவர் பவிஷ் அகர்வால். இவரே யாரும் எதிர்பார்த்திராத ஓர் தகவலை தற்பது வெளியிட்டிருக்கின்றார். அவர், ஓலா நிறுவனத்தின்கீழ் புதிய தயாரிப்பு ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்திருக்கின்றார்.
இவரின் இந்த அறிவிப்பு ஓலா எலெக்ட்ரிக் இருசக்கர வாகன பிரியர்கள் மற்றும் மின்சார இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. நிறுவனம், அதன் புதிய தயாரிப்புகுறித்த எந்தவொரு முக்கிய தகவலையும் வெளியிடவில்லை. ஆகையால், அது என்ன மாதிரியான வாகனத்தை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது என்பதுகூட தெரியாத நிலை தற்போது தென்படுகின்றது.
இதுகுறித்த முழு விபரமும் வரும் 15ம் தேதி அன்றே வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், இருசக்கர வாகன பிரியர்கள் அனைவரின் கவனமும் ஆகஸ்டு 15ம் தேதியின் பக்கம் திரும்பியிருக்கின்றது. இந்த தினத்தில் மஹிந்திரா நிறுவனமும் அதன் புதுமுக எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்திருக்கின்றது.
எனவே, வரும் ஆகஸ்டு 15ம் தேதி இந்திய மின் வாகன பிரியர்களுக்கு மிகப் பெரிய விருந்தளிக்கும் நாளாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே கூறியதைப் போல் ஓலா நிறுவனம் அந்த தினத்தில் என்ன மாதிரியான புதிய தயாரிப்பை அறிமுகம் செய்யப்போகின்றது என்கிற தகவல் வெளியாகவில்லை.
இருப்பினும், தற்போது நிறுவனம் வெளியாகியிருக்கும் அறிவிப்பு பல்வேறு யூகிப்புகளை வித்திடும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, நிறுவனம் புதிதாக மலிவு விலை மின்சார இருசக்கர வாகனத்தை விற்பனைக்குக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது விற்பனையில் இருக்கும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ. 1 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. ஆகையால், ஏழை மற்றும் எளிய மக்களால் அந்த வாகனத்தை நுகர முடியாத சூழல் நிலவுகின்றது. இந்த தடையை போக்கும் பொருட்டு நிறுவனம் மலிவு விலை எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை விற்பனைக்கு அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நிறுவனம் மலிவு விலை எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை நாட்டில் களமிறக்க உள்ளதாக கடந்த காலங்களில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தகுந்தது. மேலும், ஏற்கனவே நிறுவனம் அதன் எஸ்1 விலை குறைவான மின்சார இருசக்கர வாகனத்தின் உற்பத்தியை நிறுத்தி வைத்திருக்கின்றது.
இவை அனைத்தையும் முன்னிட்டே நிறுவனம் விலைக் குறைவான மின்சார வாகனத்தை வரும் ஆகஸ்டு 15இல் விற்பனைக்குக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுமட்டுமில்லைங்க இந்தியால 1 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு டிமாண்ட் பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.
இதை உறுதிப்படுத்தும் வகையில் விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் ஹீரோ, எலெக்ட்ரிக், ஒகினாவா ஆட்டோ டெக், ஆம்பியர் உள்ளிட்ட நிறுவனங்களின் மின்சார வாகனங்கள் அதிகளவில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. அதிகபட்சமாக 112 சதவீத வளர்ச்சியை ஹீரோ எலெக்ட்ரிக் பெற்றிருக்கின்றது.
நிறுவனம் 8953 யூனிட் இருசக்கர வாகனங்களை 2022 ஜூலையில் விற்பனைச் செய்திருக்கின்றது. இதற்கு அந்நிறுவனத்தின் பெரும்பாலான தயாரிப்புகள் மலிவு விலையைக் கொண்டிருப்பதே காரணமாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கும் ஒகினாவா ஒட்டுமொத்தமாக 8093 யூனிட்டுகளையும், ஆம்பியர் 6313 யூனிட்டுகளையும் விற்பனைச் செய்திருக்கின்றது.
இந்த அனைத்து நிறுவனங்களும் குறைவான விலையில், அதிகளவில் மின்சார இருசக்கர வாகன தேர்வுகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன. இதன் விளைவாக அவை விற்பனையில் சக்கைப்போடுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையிலேயே ஓலா எலெக்ட்ரிக் வரும் 15ம் தேதி புதுமுக தயாரிப்பை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?
-
முதியவர்களுக்கு லோயர் பெர்த் கிடைக்க என்ன செய்யனும் தெரியுமா? சூப்பர் அட்வைஸ் சொன்ன ரயில்வே!
-
சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!