பெண்களுக்கு ரூ36,000 மானிய விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! வருகிறது புதிய திட்டம்!
எலெக்ட்ரிக் வாகனக் கொள்கை 2.0-ன் கீழ் டெல்லி அரசாங்கத்தின் சமீபத்திய சலுகைகள் அறிவிக்கப்படவுள்ளன. சுற்றுச்சூழல் நட்பு போக்குவரத்தை ஊக்குவிப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை ஏற்படுத்தும் விதமாக இந்த சில சலுகைகள் வழ்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களை இலக்காகக் கொண்டு, இந்தக் கொள்கை எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை வாங்கும் பெண்களுக்கு ரூ. 36,000 வரை மானியத்தை வழங்குகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்த நடவடிக்கை மின்சார வாகனங்கள் (EVs) ஏற்றுக்கொள்ளலை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது மட்டுமல்லாமல், மாசு இல்லாத ஆற்றல் நோக்கிய மாற்றத்தில் அதிக பெண்களை ஈடுபடுத்த விரும்புகிறது. ரூ. 12,000-க்கு ஒரு கிலோவாட் ஹவருக்கு (kWh) என கணக்கிடப்பட்ட இந்த மானியம், ரூ. 36,000 அதிகபட்சமாக வழங்க முடிவு செய்யப்பட்டு்ளளது, ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் முதல் 10,000 தகுதியான பெண்களுக்கு இந்த சலுகை கிடைக்கும். இந்த முயற்சி காற்று மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கும் பெட்ரோல் போன்ற எரிபொருட்கள் மீதான சார்புநிலையைக் குறைப்பதற்கும் எடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.

எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கான ஊக்கத்தொகைகளுக்கு கூடுதலாக, EV கொள்கை 2.0 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் வணிக வாகனங்கள் உள்ளிட்ட எலெக்ட்ரிக் வாகனங்களின் பல்வேறு பிரிவுகளுக்கு அதன் நன்மைகளை விரிவுபடுத்துகிறது. உதாரணமாக, CNG ஆட்டோக்களை மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட L5M பிரிவில் உள்ள மின்சார ஆட்டோ-ரிக்ஷாக்கள், வாங்கும் ஊக்கத்தொகையாக ரூ. 45,000 வரை பெறலாம்.
பழைய ICE (கம்பஷன் இன்ஜின்) வாகனங்களை ஸ்கிராப் செய்து அவற்றிற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களை மாற்றுவதற்கு இதே போன்ற ஊக்கத்தொகைகள் உள்ளன. 12 ஆண்டுகளுக்கு குறைவான வயதுடைய ICE ஆட்டோ-ரிக்ஷாக்களுக்கு ரூ. 20,000 ஸ்கிராப்பிங் ஊக்கத்தொகை மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேல் பதிவு செய்யப்பட்ட CNG ஆட்டோ-ரிக்ஷாக்களுக்கு ரூ. 1,00,000 ஒரு வாகனத்திற்கு மாற்று ஊக்கத்தொகை வழங்கப்படுகின்றன அவை எலெக்ட்ரிக் ஆட்டோக்களாக மாற்றப்பட வேண்டும்.

2030 ஆம் ஆண்டளவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பரவலாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து, மத்திய அரசின் PM E-DRIVE திட்டத்துடன் இணைந்து செயல்பட EV கொள்கை 2.0 வடிவமைக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட பயனாளர்களுக்கு மட்டுமல்லாமல் வணிகங்களுக்கும் குறிப்பிடத்தக்க ஊக்கத்தொகைகளை வழங்க இந்த கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.
இது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதற்கு ஊக்கமளிக்கிறது. உதாரணமாக, எலெக்ட்ிரக் மூன்று சக்கரப் சரக்கு வாகனங்களுக்கு ரூ. 45,000 வரை ஊக்கத்தொகை பெறலாம். மேலும் N1 பிரிவில் உள்ள எலெக்ட்ரிக் நான்கு சக்கரப் சரக்கு ஏற்றி செல்லும் வாங்களுக்கு ரூ. 75,000 வரை ஊக்கத்தொகை பெற தகுதியானவர்கள். இந்த ஊக்கத்தொகைகள் கொள்கையின் முதல் மூன்று ஆண்டுகளுக்கு கிடைக்கின்றன. வாகனங்களின் எக்ஸ்-ஷோரூம் விலையில் அதிகபட்ச ரேஞ்ச் உடன், நன்மைகள் எளிதில் அணுகக்கூடியவை என்பதை உறுதிப்படுத்துகிறது.

டெல்லி அரசாங்கம் CNG மற்றும் பெட்ரோல் போன்ற எரிபொருள் வாகனங்களை கட்டாயமாக நீக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளது. EV கொள்கை 2.0 ஆகஸ்ட் 15 முதல் CNG ஆட்டோ-ரிக்ஷாக்களுக்கு புதிய பதிவுகளை அனுமதிக்காது என்று கூறுகிறது, மேலும் அத்தகைய வாகனங்களுக்கான ஏற்கனவே உள்ள அனுமதிகள் புதுப்பிக்கப்படாது. மேலும், 10 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வயதுடைய அனைத்து CNG ஆட்டோ-ரிக்ஷாக்களும் எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றப்பட வேண்டும் அல்லது பேட்டரிகளில் இயங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று இந்த கொள்கை கூறுகிறது. இந்த நடவடிக்கை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் டூவீலர் வாகனங்கள் மற்றும் 3 வீலர் சரக்கு வாகனங்கள் உட்பட பெட்ரோல், டீசல் மற்றும் CNG இல் இயங்கும் வாகனங்களை கட்டாயமாக நீக்க ஒரு விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
கட்டமைப்பு வளர்ச்சிக்கான தேவையை நிவர்த்தி செய்வதன் மூலம், இந்தக் கொள்கை ஊக்கத்தொகைகள் மற்றும் ஸ்கிராப்பிங் நன்மைகளைத் தாண்டி தேவைப்படும் ஒரு விஷயமாக இருக்கிறது. டெல்லி அரசாங்கம் சார்ஜிங் கட்டமைப்பு மற்றும் சப்போர்ட் சேவைகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. இது குடிமக்களுக்கு மின்சார வாகனங்களை வைத்திருப்பதையும் இயக்குவதையும் எளிதாக்குகிறது. இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறை எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவது நிதி ரீதியாக லாபமாக மட்டுமல்லாமல், தினசரி பயன்பாட்டிற்கும் நடைமுறைக்குரியது என்பதை உறுதி செய்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டெல்லி அரசாங்கத்தின் EV கொள்கை 2.0 காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கும் நிலையான போக்குவரத்தை ஏற்றுக்கொள்வதற்கும் ஒரு தீர்மானகரமான படியாகும். குறிப்பிடத்தக்க மானியங்கள் மற்றும் ஊக்கத்தொகைகளை வழங்குவதன் மூலம்,பெட்ரோல் போன் எரிபொருள் வாகனங்களை கட்டாயமாக நீக்குவதன் மூலம் மற்றும் கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம், இந்தக் கொள்கை அந்த நகரத்தில் எலெக்ட்ரிக் வாகனங்கள் ஏற்றுக்கொள்ளலை துரிதப்படுத்த விரும்புகிறது. இந்த முயற்சி சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாமல், மின்சார வாகனத் தொழிலை ஊக்குவித்து வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் பொருளாதார வளர்ச்சியையும் சப்போர்ட் செய்கிறது.


Click it and Unblock the Notifications









