7 லட்சம் பேர் இந்த கம்பெனி பைக்கை வாங்கிட்டாங்க! கம்பெனி பெயரை கேட்டாலே சும்மா அதிருதே!
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 2024 ஆம் ஆண்டை சிறப்பாக முடித்துள்ளது, மொத்தம் 7,27,077 பைக்குகளை விற்றுள்ளது. இது கடந்த ஆண்டு விற்பனையான 6,85,059 பைக்குகளுடன் ஒப்பிடுகையில் 6% அதிகரிப்பை பெற்றுள்ளது. டிசம்பர் மாதத்தில் மட்டும் 79,466 பைக்குகள் விற்பனையாகி, டிசம்பர் 2023 ஐ விட 25% வளர்ச்சியை காட்டுகிறது. இந்த காலகட்டத்தில் ஏற்றுமதியும் கணிசமாக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு அதே மாதத்தில் 6,096 பைக்குகள்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், டிசம்பர் மாதத்தில் நிறுவனம் 11,575 பைக்குகளை ஏற்றுமதி செய்துள்ளது. முழு ஆண்டும் ஏற்றுமதி 35% அதிகரித்து 74,221 பைக்குகளை எட்டியுள்ளது. அதன் உலகளாவிய இருப்பை வலுப்படுத்த, ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியாவிற்கு வெளியே முதல் முறையாக தாய்லாந்தின் சமூத் ப்ராகானில் முழுமையான சொந்த CKD அசெம்பிளி ஆலையை திறந்துள்ளது. இந்த ஆலை 57,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது மற்றும் வருடத்திற்கு 30,000 பைக்குகளை தயாரிக்க முடியும்.

ராயல் என்ஃபீல்டின் புதிய ஆலை அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் கொலம்பியாவில் உள்ள ஏற்கனவே உள்ள CKD ஆலைகளுடன் இணைந்துள்ளது. இந்நிறுவனம் அதன் REOWN என்ற பயன்படுத்தப்பட்ட பைக் விற்பனை தளத்தை 24 மாநிலங்களில் 475 டீலர்களுடன் 236 நகரங்களில் இயங்கும் வகையில் விரிவுபடுத்தியுள்ளது. இந்த விரிவாக்கம் ராயல் என்ஃபீல்ட்டு உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் அதன் சந்தை இருப்பை வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
ஆண்டு முழுவதும், ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் டுவின் 650 மற்றும் கோவன் கிளாசிக் 650 போன்ற பல புதிய பைக்குகளை அறிமுகப்படுத்தியது. கோவாவில் நடைபெற்ற மோடோவெர்ஸ் 2024 இல், அவர்கள் கிளாசிக் 650 டுவின் உடன் மெட் டார்க் கிரே கெரில்லா 450 மற்றும் ஸ்க்ராம் 400 ஆகிய பைக்குகளை வெளியிட்டனர். இந்த மாடல்களுக்கான விலை விரைவில் இந்தியாவில் அறிவிக்கப்படும்.

கிளாசிக் 650 ட்வின் சூப்பர் மீட்டியோர் 650 உடன் அம்சங்களை பகிர்ந்து கொள்கிறது, அதே சமயம் ஸ்கிரம் 440 அதிக பவர் மற்றும் டார்க்கை வழங்கும் புதுப்பிக்கப்பட்ட இன்ஜின் உடன் வருகிறது. இந்த புதிய மாடல்கள் இந்தியாவிலும் உலகளாவிய அளவிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
"2024 ஐ நாம் விடைபெறுகிறோம்," என்று ராயல் என்ஃபீல்ட்டின் சிஇஓ பி கோவிந்தராஜன் கூறினார், மேலும் அவர் கூறுகையில் "நாம் ராயல் என்ஃபீல்ட்டுக்கு அசாதாரணமான ஆண்டை எப்படி கடந்து வந்தோம் என்பதைப் பார்க்கிறோம். ஆண்டு முழுவதும், நாங்கள் சில வகை-வரையறுக்கும் பைக்குகளை அறிமுகப்படுத்தினோம், இந்தியாவிலும் உலகளாவிய மார்கெட்டிலும் எங்கள் சமீபத்திய வெளியீடுகளின் நேர்மறையான வரவேற்பைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது." என கூறினார்

ராயல் என்ஃபீல்ட்டின் உள்நாட்டு விற்பனை கிளாசிக் 350 போன்ற மாடல்களுக்கான அதிக தேவை மற்றும் அவற்றின் சமீபத்திய பைக்குகளால் தெரிகிறது. தனது தயாரிப்பு அளவை விரிவுபடுத்துவதில் அந்நிறுவனம் கவனம் செலுத்துவது இந்த ஆண்டின் வெற்றிக்கு மிகவும் பங்களித்துள்ளது.
ராயல் என்ஃபீல்டு 2025 க்குள் நுழைகையில், அனைத்து வகையிலும் பியூர் மோட்டார்சைக்கிளிங் முயற்சிகளின் மூலம் உலகெங்கிலும் உள்ள ரைடர்களை ஊக்குவிப்பதன் மூலம் வளர்ச்சியை பராமரிப்பதற்கான உறுதிப்பாட்டைத் தொடர்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு என ஒரு பெயர் இருக்கிறது. இந்த பெயரை காப்பாற்றுவதற்காக அந்நிறுவனம் தொடர்ந்து பல புதிய தரமான தயாரிப்புகளை வெளியிடுகிறது. இந்தாண்டும் இது தொடரும் என எதிர்பார்க்கலாம். சொல்லப்போனால் 2024ம் ஆண்டு நடந்த விற்பனையை விட 2025ம் ஆண்டு விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









