5,000 ரூபாய் மானியம் கிடைக்காதுனு சொன்னால் நம்பாதீங்க! இவி வாங்க இதைவிட்டால் சரியான நேரம் கிடைக்காது!

By Staff

மக்கள் மத்தியில் வெகுவாக கவனம் ஈர்த்த பிரதமர் இ-டிரைவ் (PM E-Drive) திட்டம் 2026 ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதியதாக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் வாங்குபவர்களுக்கு இது மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியாகும். ஏனெனில் அவர்கள் மொத்தமாக சுமார் ரூ.1,772 கோடி நிதி உதவியை வழங்கும் இந்த மானியத் திட்டத்தின் மூலம் பயனடைவார்கள். இந்தத் திட்டம் முதலில் இந்த மார்ச் மாதத்தோடு முடிவடைய இருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் இ-டிரைவ் இவி மானியத் திட்டம் நீட்டிக்கப்பட்டது

இந்தியாவின் போக்குவரத்தில் எலெக்ட்ரிக் மூலமாக புரட்சி செய்யும் முயற்சியாக கொண்டுவரப்பட்ட பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) திட்டம், எலெக்ட்ரிக் இருசக்கர வாகன வாடிக்கையாளர்களுக்கு ஆரம்ப விலையில் ரூ.5,000 வரை குறைத்து பெரும் பயனளிக்கிறது. எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கான இந்த மானியத் திட்டத்தின் காலக்கெடு தற்போது அதிகாரப்பூர்வமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

pm e-drive scheme extended

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை மற்றும் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக இந்த மானியத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், உற்பத்தி நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளன. ஏனெனில் சமீப காலங்களில் இந்தியாவின் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனப் பிரிவு மிக வேகமாக வளர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயமாகும்.

எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் மட்டுமல்லாமல், இந்தத் திட்டம் இ-ரிக்‌ஷாக்கள் மற்றும் இ-கார்டுகளுக்கும் ஆதரவளிக்கிறது. இருப்பினும், எலெக்ட்ரிக் முன்று சக்கர வாகனங்களுக்கான இலக்கு ஏற்கனவே எட்டப்பட்டதாலும், அதற்கு மேல் கூடுதல் ஆதரவு தேவையில்லை என்பதாலும், அவற்றுக்கான மானியம் தற்போது அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டுள்ளது.

pm e-drive scheme extended

கடந்த ஆகஸ்ட் மாதத்தில், இந்தத் திட்டம் ஒட்டுமொத்தமாக 2028 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டது. இருப்பினும், எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கான செல்லுபடியாகும் காலம் 2026 மார்ச் 31 வரை மட்டுமே என நிர்ணயிக்கப்பட்டது. இந்த வரையறுக்கப்பட்ட நிதி திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.10,900 கோடி ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் 1 kWh திறன் கொண்ட பேட்டரிக்கு ரூ.2,500 என்கிற கணக்கில் ரூ.5,000 வரை மானியம் வழங்குகிறது. அதுவே இது முன்பு ரூ.10,000 ஆக இருந்தது. இதில் எலெக்ட்ரிக் பேருந்துகள் மற்றும் பொது போக்குவரத்து திட்டங்களுக்கான நிதியும் அடங்கும். மேலும், பொது சார்ஜிங் உள்கட்டமைப்பு மற்றும் வாகன சோதனை மையங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

எலெக்ட்ரிக் இருசக்கர வாகனப் பிரிவு இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய பயனாளியாகத் தொடர்கிறது. டிவிஎஸ் மோட்டார் (TVS Motor), பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto), ஏத்தர் எனர்ஜி (Ather Energy) மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) போன்ற முன்னணி உற்பத்தி நிறுவனங்கள் இந்த வகையில் நல்ல பலனை பெற்று வருகின்றன. இந்த நிறுவனங்களின் விற்பனையில் பெரும்பகுதி நகர்ப்புற பகுதிகளில் இருந்தே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா முழுவதும் சார்ஜிங் வசதி உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்படுவதால் எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாடு படிப்படியாக கிராமப்புறங்களுக்கும் விரிவடைந்து வருகிறது. சமீபத்தில், எரிபொருள் விலை உயர்வு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்ற சூழல் போன்ற உலகளாவிய காரணங்களால் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வலுவான தேவை ஏற்பட்டுள்ளது.

இத்தகைய நேரத்தில் மத்திய அரசாங்கமும் தனது பங்கிற்கு மானியத்தை தொடர்ந்து வழங்குவது நாட்டில் எலெக்ட்ரிக் 2-வீலர்கள் வாங்குவோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும். இதனை கருத்தில் கொண்டே பிரதமர் இ-டிரைவ் மானியத்தை ஜூலை மாதம் வரையில் மத்திய அரசு நீட்டித்திருப்பது இவி 2-வீலர் உற்பத்தி நிறுவனங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, March 29, 2026, 15:30 [IST]
English summary
Pm e drive scheme extended ev subsidy two wheelers india check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X