5 ஆண்டு வாரண்டியுடன் ஸ்பெஷல் எடிசன் ஸ்பிளென்டர் அறிமுகம்
5 வாரண்டியுடன் ஸ்பிளென்டர் புரொ ஸ்பெஷல் எடிசனை ஹீரோ மோட்டோ கார்ப் அறிமுகம் செய்துள்ளது. இதுதவிர, தனது அனைத்து இருசக்கர வாகன மாடல்களுக்கும் 5 ஆண்டு வராண்டி திட்டத்தை அறிவித்துள்ளது.
நாட்டிலேயே முதன்முறையாக 5 ஆண்டு வாரண்டியுடன் இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியிருக்கும் முதல் நிறுவனம் ஹீரோ மோட்டோ கார்ப் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஸ்லைடரில் கூடுதல் விபரங்களை காணலாம்.

கோல்டு எடிசன் ஸ்பிளென்டர்
கோல்டு எடிசன் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் ஸ்பிளென்டர் புரோ 2 ஆண்டுகள் அல்லது 30,000 கிமீ.,க்கான வாரண்டியுடன் கிடைத்து வந்தது.

ஸ்பிளென்டர் புரோ
தற்போது 5 ஆண்டுகள் வாரண்டி அல்லது 70,000 கிமீ.,க்கான வாரண்டியுடன் கிடைக்கும்.

ஸ்பிளென்டர் புரோ கோல்டு எடிசன்
ஸ்பிளென்டர் ஸ்பெஷல் எடிசன் பைக்கின் ஹெட்லைட் மற்றும் பக்காவாட்டுப் பகுதிகளில் கோல்டு எடிசன் பேட்ஜ் பொறிக்கப்பட்டிருக்கும்.புதிய தங்க நிறத்தில் மட்டும் இந்த ஸ்பெஷல் எடிசன் கிடைக்கும்.

ஸ்பிளென்டர் புரோ கோல்டு எடிசன்
ஸ்பிளென்டர் புரோ பைக்கைவிட ரூ.1,000 கூடுதலான விலையில் புதிய ஸ்பெஷல் எடிசன் ஸ்பிளென்டர் கிடைக்கும்.

ஸ்பிளென்டர் புரோ கோல்டு எடிசன்
ஸ்பெஷல் எடிசன் ஸ்பிளென்டர் மட்டுமின்றி , அனைத்து இருசக்கர வாகனங்களுக்கும் 5 ஆண்டுகள் அல்லது 70,000கிமீ., வாரண்டியை வழங்குவதாக ஹீரோ மோட்டோ கார்ப் அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








