Just In
- 37 min ago மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- 1 hr ago நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- 2 hrs ago 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- 3 hrs ago இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
Don't Miss!
- Movies அச்சச்சோ.. ரசிகர் மரணம்.. ஓடிப்போய் குடும்பத்துக்கு ஆதரவு சொன்ன ஜெயம் ரவி
- News டிஎன்பிஎஸ்சி அதிரடி.. குரூப் 1 டூ குரூப் 4 வரை முக்கிய தேர்வு தேதிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Lifestyle பானை போன்று வீங்கியிருக்கும் தொப்பையை குறைக்கணுமா? அப்ப இந்த 2 விதையை நீரில் கொதிக்க வெச்சு குடிங்க..
- Finance கடன் வாங்கி சம்பளம் கொடுத்த பைஜூஸ் சிஇஓ.. நாளுக்கு நாள் மோசம்..!
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
ரோந்து பணிக்காக பறக்கும் பைக் வாங்கிய துபாய் போலீஸ்!
ரோந்து பணிகளுக்காக பறக்கும் பைக் மாடலை துபாய் போலீசார் வாங்கி உள்ளனர்.
ரோந்து மற்றும் அவசர உதவிகளுக்காக ஹோவர் பைக்கை துபாய் போலீசார் வாங்கி இருக்கின்றனர். இந்த பைக்கின் சிறப்பம்சங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
உலகின் மிகவும் விரும்பப்படும் சுற்றுலா நகரங்கள் வரிசையில் துபாய் முதன்மை வகிக்கிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும், ரோந்து பணிகளுக்காகவும் உலகின் மிக மிக விலை உயர்ந்த கார்களை துபாய் போலீசார் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். தவிரவும் புதுமையான போக்குவரத்து சாதனங்களையும் பயன்படுத்துகின்றனர்.
லம்போர்கினி, ஃபெராரி... ஏன், புகாட்டி வேரான் கார் கூட துபாய் போலீசாரிடம் உள்ளது. இதுமட்டுமின்றி, பல்வேறு புதுமையான தொழில்நுட்பத்தில் இயங்கும் வாகனங்களை வாங்குவதிலும் துபாய் நிர்வாகம் ஆர்வம் காட்டி வருகிறது.
இந்த ஹோவர் பைக்கை ரோந்து பணிகளுக்காகவும், விபத்தில் சிக்குபவர்களுக்கு முதலுதவி அளிக்கும் விதத்திலும் பயன்படுத்த துபாய் போலீசார் திட்டமிட்டுள்ளனர். தற்போது சோதனை ஓட்டம் துவங்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஹோவர் பைக்கை ரஷ்யாவை சேர்ந்த ஹோவர்சர்ஃப் நிறுவனம் தயாரித்து வழங்கி இருக்கிறது. பார்ப்பதற்கு தேள் போன்று இருப்பதாலோ என்னவோ, இதனை ஸ்கார்ப்பியான் என்று குறிப்பிடுகின்றனர்.
இந்த ஹோவர் பைக் மணிக்கு 64 கிமீ வேகம் வரை வானில் பறக்கும். பேட்டரி மின்சாரத்தில் இயங்கும் இந்த ஹோவர் பைக் அதிகபட்சமாக 25 நிமிடங்கள் வரை பறக்கும் திறன் வாய்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஒற்றை இருக்கை வசதி கொண்ட இந்த ஹோவர் பைக் 272 கிலோ எடை சுமக்கும் திறன் கொண்டது. ஒருவர் அமர்ந்து இயக்க முடியும். இதனை ரிமோட் கன்ட்ரோல் முறையிலும் ஆள் இல்லாமலும் இயக்கலாம்.
இந்த ஸ்கார்ப்பியான் பறக்கும் பைக் தவிர்த்து, மணிக்கு 200 கிமீ வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்த மின்சார பைக் மாடலையும் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் திட்டமும் அந்நகர போலீசாரிடம் உள்ளது.
இந்த பைக்கை ஜப்பானை சேர்ந்த மிகாசா என்ற நிறுவனம் தயாரிக்கிறது. அண்மையில் தானியங்கி பறக்கும் டாக்சியை துபாய் போக்குவரத்துத் துறை சோதனை ஓட்டம் நடத்த துவங்கியது.
மொத்தத்தில் உலகிலேயே முதல் ஸ்மார்ட் நகரமாக துபாயை மாற்றுவதற்கான முழு வீச்சிலான முயற்சிகளையும், பணிகளையும் துபாய் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
-
ஃபார்ச்சூனரில் தலைவன் பதிப்பை அறிமுகம் செய்த டொயோட்டா.. பேருல மட்டுமல்ல மத்ததுலையும் இது தலைவன்தான்!