Just In
- 28 min ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- 1 hr ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 2 hrs ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 3 hrs ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
Don't Miss!
- News தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்.. தஞ்சாவூர் மாவட்டம் முழுக்க இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Lifestyle ஆண்களே! அனைத்து பெண்களுக்கும் உங்கள பிடிக்கணுமா? அப்ப சாணக்கியர் சொல்லும் இந்த 6 குணங்களை வளர்த்துக்கோங்க!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அரசு பஸ்களில் இனி ஸ்மார்ட் கார்டு பஸ் பாஸ்; முறைகேட்டை தவிர்க்க புதிய முயற்சி
கர்நாடக மாநிலத்தில் அரசு பஸ்பாஸ்களை டிஜிட்டல் மயமாக மாற்ற அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதன் படி தினசரி, மாதாந்திர, மாணவர் பஸ்பாஸ்கள் இனி ஸ்மார்ட் கார்டாக வழங்கப்படவுள்ளது. அவர்கள் பஸ்களின் பயணம்
கர்நாடக மாநிலத்தில் அரசு பஸ்பாஸ்களை டிஜிட்டல் மயமாக மாற்ற அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதன் படி தினசரி, மாதாந்திர, மாணவர் பஸ்பாஸ்கள் இனி ஸ்மார்ட் கார்டாக வழங்கப்படவுள்ளது. அவர்கள் பஸ்களின் பயணம் செய்யும் போது பாஸ் வைத்துள்ளவர்கள் கண்டெக்டரிடம் உள்ள மெஷினில் கட்டாயம் ஸ்வைப் செய்ய வேண்டுமாம். இதன் மூலம் முறைகேடுகளை தவிர்க்கவும் பாஸ் பயன்பாட்டை கண்காணிக்கவும் முடியும் என அம்மாநில போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆயிரக்கணக்கான அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்களை மக்கள் குறைந்த விலையில் பயன்படுத்த பொதுமக்களுக்கான தினசரி பாஸ், மாத பாஸ், மாணவர்களுக்கான பாஸ், அரசு அதிகாரிகளுக்கான பாஸ், போக்குவரத்து ஊழியர்களுக்கான பாஸ் என 70 விதமான பாஸ்கள் வழங்கப்படுகிறது.
இந்த பாஸ்கள் எல்லாம் தற்போது பேப்பர் வடிவிலேயே வழங்கப்படுகிறது. இதனால் பலர் ஒரு முறை பாஸை வாங்கி விட்டு அதை புதுப்பிக்காமல் காலம் கடந்த பின்பும் அதே பாஸிலேயே பயணிப்பது, பழைய பாஸில் பிரிண்ட் செய்யப்பட்ட கடைசி தேதியை மாற்றுவது போன்ற முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர்.
இதுபோன்ற சம்பவங்கள் அதிக அளவில் நடப்பதாக போக்குவரத்து கழகத்திற்கு சந்தேகம் எழுந்துள்ளது. விற்பனை செய்யப்படும் பாஸ்கள் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையில் பெரும் வேறுபாடுவருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு பல நடவடிக்கைகள் எடுத்தும் பலன் இல்லாமல் போனது.
இதையடுத்து கர்நாடகா போக்குவரத்து கழகம் தற்போது ஆக்ஸிஸ் வங்கியை நாடியுள்ளது. தற்போது அவர்கள் வழங்கிய ஐடியாவின் படி கர்நாடகாவில் வழங்கப்படும் பஸ்பாஸ்களை ஸ்மார்ட் கார்டாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது தினசரி பாஸ் தவிர மற்ற அனைத்து பாஸ்களை ஸ்மார்ட் கார்டாக வழங்கவுள்ளது.
இந்த ஸ்மார்ட் கார்டில் அவர்கள் செலுத்திய பணத்திற்கான கடைசி தேதி பதிவு செய்யப்பட்டிருக்கும். அதன் மூலம் பஸ்சில் உள்ள கண்டெக்டர்கள் தங்கள் கையில் உள்ள மெஷின்களில் அந்த தேதியை கண்டு முறைகேடை தவிர்க்க முடியும்.
இது குறித்து போக்குவரத்து கழக இயக்குநர் பொண்ணுராஜ் கூறுகையில் :"தற்போது போக்குவரத்து கழக பாஸ்களை ஸ்மார்ட் கார்டாக மாற்ற திட்டமிட்டுள்ளோம். அதன் படி முதல்கட்டமாக சுமார் 20,000 மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. படிப்படியாக தினசரி பாஸ் தவிர மற்ற பாஸ்கள் எல்லாம் ஸ்மார்ட் கார்டாக மாறும்.இதன் மூலம் முறைகேடுகள் தவிர்க்கப்படுவதோடு மிக முக்கியமான பயனும் நமக்கு கிடைக்கிறது.
அரசு மூலம் பாஸ்கள் வழங்கப்பட்டாலும் எந்தெந்த ரூட்களில் எவ்வளவு பேர் பாஸ் வைத்துக்கொண்டு பயணம் செய்கிறார்கள், எந்த இடத்தில் பாஸ் பயன்படுத்தும் பயணாளிகள் அதிகம் எங்கு குறைவு என்பதை துள்ளியமாக கண்டுபிடிக்க நமக்கு எந்த நடை முறையும் இல்லை.
தற்போது இந்த ஸ்மார்ட் கார்டை கொண்டு வருவது மூலம் கண்டெக்டரில் உள்ள மிஷினில் ஸ்வைப் செய்யப்படுவதால் அதன் மூலம் எந்தெதந்த ரூட்டில் எவ்வளவு பாஸ்கள் பயன்படுத்தப்படுகிறது என்பதை எங்களால் அறிய முடியும் அதன் மூலம் எந்த ரூட்டிற்கு அதிக பஸ்கள் தேவை என்பதையும் அறிந்து பஸ்களின் ரூட்களை முடிவு செய்யப்படும்.
தற்போது பசுமை தீர்ப்பாயத்தின் பிடியில் 1000 பஸ்கள் இருக்கிறது. டீசல் இன்ஜின்களுக்கு பதிலாக சி.என்.ஜி இன்ஜின் பொருத்தப்பட்ட பஸ்களை கொண்டுவருவது தொடர்பாக வழக்கு நடந்து வருகிறது. அது தவிர வேறு 1500 பஸ்களுக்காக கடந்த 2016-2017 நிதியாண்டில் அப்போதைய முதல்வர் சித்தராமையா நதி ஒதுக்கினார். அதில் 500 மிடி பஸ்கள் வாங்கப்பட்டு விட்டன.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் போக்குவரத்து கழகம்150 ஏசி பஸ்கள் உட்பட 1674 பஸ்களை வாங்கியுள்ளது. அதே காலகட்டத்தில் 11 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்பட்ட அல்லது 8.5 லட்சம் கிலோ மீட்டர்கள் ஓடிய 1000க்கும் மேற்பட்ட பஸ்கள் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டது. இந்தாண்டு மேலும் 1300 பஸ்களை பயன்பாட்டில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளோம். " என கூறினார்.
தற்போது பெங்களூருவில் வழங்கப்படும் பஸ்பாஸ்களை பொருத்தவரை, 93 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கான பாஸ்கள், 1.5 லட்சம் பியூசி, மாணவர்களுக்கான பாஸ், 1.25 லட்சம் டிகிரி மாணவர்களுக்கான பாஸ், 57,000 மேற்படிப்பு மாணவர்களக்கான பாஸ், மற்றும் 2.40 லட்சம், தினசரி மாற்றும் மாதாந்திர பாஸ்கள் வழங்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த பாஸ்கள் எல்லாம் விரைவில் ஸ்மார்ட் கார்டுகளாக மாறவிருக்கிறது.
இதற்கிடையில் பெங்களுருவில் தற்போது பிஎஸ் 4 ரக எமிஷன் கண்ரோல் பஸ்கள் தான் இயக்கப்படுகிறது. இதனால் குறைந்த அளவை தான் பஸ்கள் பெருகிறது. கடந்த 2011-2012ல் சராசரியாக 4.5 கி.மீ மைலஜாக வைத்திருந்த கர்நாடக போக்குவரத்து கழகம், கடந்த 2017-2018ம் ஆண்டில் 3.7 கி.மீ. ஆக குறைந்துள்ளது.
தற்போது பிஎம்டிசியில் 3500 பிஎஸ் 4 ரக எமிஷன் கண்ட்ரோல் பஸ்கள் இயக்கப்படுகிறது. அதில் இன்ஜின் அதிக திறன் உள்ளதாக இருப்பதால் மைலேஜ் குறைவாக தான் கிடைக்கிறது. அதே நேரத்தில் 850 வால்வோ பஸ்கள் இயங்குகிறது. அதில் உள்ள பவர் பிரேக், ஏசி ஆகிய அம்சங்களால்சராசரியாக 2.5-3 கிலோ மீட்டர் தான் கிடைக்கிறது.
மேலும் பிஎஸ் 3 எமிஷன் கண்ட்ரோலில் விதிகளில் உள்ள 2400 பஸ்கள் இயங்குகிறது. இது 3.9 கிலோ மீட்டர் மைலேஜை வழங்குகிறது. தற்போது பிஎம்டிசி நிர்வாகத்தின் ஒட்டு மொத்த வருமானத்தில் 21 சதவீத்ததை டீசலுக்காக வழங்குகிறது. இதன் மதிப்பு 42 கோடியாகும். டீசல் விலை உயர்வும் இதற்கு முக்கிய காரணம்
டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்
- யமஹா ரே இசட்ஆர் ஸ்ட்ரீட் ராலி எடிசன் விற்பனைக்கு வந்தது!!
- உங்களை கவர விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ஸ்கூட்டர்கள்
- ஃபோக்ஸ்வேகன் டி க்ராஸ் எஸ்யூவியின் புதிய தகவல்கள் - க்ரெட்டா போட்டியாளர்!!
- இந்தியாவுக்கு போட்டியாக ரேஸ் கார் தயாரித்த பாகிஸ்தான் மாணவிகள்.. இனி இவங்கதான் நம்ம பசங்க க்ரஷ்..
- சக்திவாய்ந்த புதிய டீசல் எஞ்சினுடன் வரும் புதிய ஃபோர்டு எண்டெவர்!!
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
-
இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...
-
என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!